காளத்தி கடை வெண்பாக்கள்


மயிலை காளத்தி கடை ரோஸ்மில்க் பற்றி மந்தவெளி மோகனரும், மாம்பலம் முருகனும் வெண்பா அன்பு – அம்பு விட்டுக் கொண்டது யாதெனில் –

காளத்தி கடை வெண்பாக்கள்
(சற்று முன் வந்த மூன்றாவது, நான்காவது உட்பட)

“மூளத்தீ கோடையாய், முப்புரத்தை வென்றபின்பு,
காளத்தி நாதர் கடைகலந்த , -பாலொத்த,
ரோஸ்மில்க் அருந்த ரகசியமாய் சென்றாராம்,
ஜுஸ்ஜில் ஜலபுராணம் ஜோர்”….கிரேசி மோகன்….

———————————————————-

அசுரர்க் களித்தாய் அரவுக்கும் வார்த்தாய்
பசுமேய்த்த கோனார் ருசித்தார் விசுவனே
தாளில் பணிந்துனக்குத் தந்தோம் அமுதுண்டு
காளத்தி ரோஸ்மில்க் கலக்கு.
தேவர் கூற்று (இரா.முருகன் 6/6/2015)

————————————————————-

அன்பு இராமு சார், மறு வெண்பா மறு(மை) வெண்பா….அருமை….
ம(று)மைக்கு ம(று)மை வெண்பா….

”ஆலத்தை உண்டவராம், மூலத்தை ஏந்திபிக்ஷை,
கோலத்தைக் கொண்ட கபாலீசர், -காளத்தி
ரோஸ்மில்க் குடிப்பவர்க்கு , பாஸ்மார்க் குடித்தனம்,
ஈஸ்வரோ ரக்ஷது இல்”….கிரேசி மோகன்….

அம்பாள்- மூல நக்ஷத்திரம்….

———————————————————————————

ஆற்றிக் குளிர்ந்த அடுபால் தலைமுறைகள்
போற்றும் ரகசிய இன்சாறு ஊற்றியே
ஐயொபி எம்மணி ரோஸ்மில்க் பரிமாற
வையம் மயிலையில் பார்
(இரா.முருகன்)

ஐஒபி மணி – காளத்தி கடை மணி – இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தோழர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன