புது நாவல்: அச்சுதம் கேசவம் : குறிப்புகள்,Family Tree

அம்பலப்புழை குடும்பம்

அச்சுதம் கேசவம் நாவல் விரைவாக முன்னேறி வருகிறது.

ஒவ்வொரு அத்தியாயம் வெளியிட்டதும் அது பற்றிய் குறிப்புகளைத் தனியாகத் தொகுத்து அளிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவற்றில் சில தமிழிலும் மற்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்.

அத்தியாயங்களும், அவை பற்றிய குறிப்புகளும் இங்கும், என் ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம் பெறுகின்றன.

அரசூர் குடும்பம்

அத்தியாயம் 24- குறிப்புகள்

தில்லியின் குளிர்காலத்தைச் சுருக்கமாகச் சொல்ல வந்தது 8 பக்கம் நீண்டு விட்டது. அச்சுப் பிரதியில் கொஞ்சம் சுருங்கலாம்.

1980-களில் நான் இருந்து அனுபவித்த தில்லியை 20 வருடம் பின்னால் கொண்டு போக முயன்றிருக்கிறேன்.

நியூஸ் டிரஸ்ட், மூன்று பிரபல செய்தி நிறுவனங்களின் கற்பனையான கலவை. அந்த கேண்டீனின் அடிப்படை யு என் ஐ கேண்டீன்.

பிடார் ஜெயம்மா நான் பழகிய நான்கு பத்திரிகை நிருபர்களின் கலவை. எல்லோருமே ஆண்கள் தாம். ஒருவர் தொலைக்காட்சியிலும் பிரபலமாக இருந்தார் – நடு வயதில் இறந்து போனார்.

தில்ஷித் கவுர்?

அப்புறம் சொல்கிறேன்.

‪#‎அச்சுதம்_கேசவம்‬

மதராஸ் குடும்பம்

அத்தியாயம் 23- குறிப்புகள்

இந்த நாவலில் ஒரு leitmotif ஆக (frequently repeating lead theme) மயில் வருகிறது. கதையின் எல்லா இழைகளிலும் இது இடம் பெறுகிறது. சின்னச் சங்கரனின் கதையாடல் பகுதிகளில் நேரில் அனுபவப்படுவதாகவும், நூறாண்டு முந்திய பகவதியின் டயரிக் குறிப்பாகவும் வரும். வைத்தாஸ் எழுதும் நாவலில் பூடகமாக இடம் பெறும். கொச்சு தெரிஸா வரும் யார்க்‌ஷையர் பகுதியில் நடக்கும் கதையாடலில் மேலோங்கி நிற்கும் மாந்திரீக யதார்த்தத்தின் சுவட்டில் இது வரும்…. மும்பையில் நிகழும் பகுதிகளில் அர்ஜுன நிருத்தமாக இந்த leitmotif வரும்.

‪#‎அச்சுதம்_கேசவம்‬

அத்தியாயம் – 22 குறிப்புகள் Chapter-22 jottings

I enjoyed writing this chapter. True it demanded more efforts and in-depth revising. To get the rhythm right, I had to re-edit it at least 5 times.

The narrative turns surrealistic here being a chapter extracted from Vaithas Reddy’s novel in progress. The evening turning into night with electricity getting tripped, a large haveli of 19th century, its various inhabitants, others taking refuge here, the staircases with feet always climbing up or down, a death in the haveli, urge for sex ,, the melange had to be in place exactly as I wanted it to appear in words.

And this is as imagined by Vaithas’.

‘Not everything’, murmurs Veera Vali standing under the staircase, dimly lit occasionally by hurricane lamps carried by the residents and others. She knows better..
‪#‎அச்சுதம்_கேசவம்‬

‘அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 22’ பற்றி நண்பர் கிரேசி மோகன் –
//
பிரில்லியண்ட் சார்….’’ஊட்டில ஐஸ் வாட்டர் குடிக்க வச்சுட்டியே’’ என்பார் பாலையா நாகேஷிடம் ‘’ஊட்டி வரை உறவு’’ படத்தில் வேர்த்து விறுவிறுத்தபடி….எனக்கும் படிக்கையில் அந்த வசனம்தான் நினைவுக்கு வந்தது….அபாரமான அமானுஷ்யம்….’’அய்யோ’’ பீதியும், ‘’அட’’ ஆச்சரியமும் கலந்த அட்டகாசம்….நன்றி….

‘’அச்சுதம் கேசவம்’’ அற்புதம் கற்பனை,
கச்சிதம் காமாந்த காரமாய், -கச்சித(கச்சணிந்த இதமான)
கூத்தாடி, வைத்தாஸ், கலவி அமானுஷ்யம்,
ஆத்தாடி ! அய்யோ ! அட !’’…..

வாசகன் கிரேசி மோகன்….
//
நன்றி, மோகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன