Chennai Book Fair 2013 – treating myself to an encoreசோறு போடும் கல்கி – குழம்பு விளம்பும் சுஜாதா


பிரசவ வைராக்கியம் போல் பொய்யாக சென்னைப் புத்தகக் கண்காட்சி 2013 இன்னொரு முறை (இதோடு சரி) போனேன்.

1) தமிழக அரசால் பொது உடமையாக்கப்பட்ட படைப்புகளை தி.ஜ.ர முதல் இரண்டு டஜன் படைப்பாளர்களாவது படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மறுபிரசுரம் செய்வதில் இங்கே கடை போட்டிருக்கும் நானூற்றுச் சில்லரை பதிப்பகங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசுத் துறையிலேயே இந்தப் புத்தகங்களைக் குறைந்தது பத்தாயிரம் காப்பி அடித்து நூலகங்களில் வைத்து மீந்ததை வெளியே விற்கலாமே?

2) பொதுவுடமையாக்கப்பட்ட கல்கி தான் பல பதிப்பாளர்களுக்கு மதியம் சோறும் குழம்பும் மோரும் ஆயுசுக்கும் வழங்குகிறார் என்று தெரிகிறது. எல்லோரும் பொன்னியின் செல்வனை பல சைஸ்களில் அடித்துத் தள்ளி இருக்கிறார்கள். வாங்கிப் போகிறவர்களுக்கும் குறைச்சல் இல்லை.

3) நேற்று சுஜாதா படைப்புகள் நாட்டுடமை ஆக்கப் பட்டதாகக் கனவு கண்டேன். பதிப்பக நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை.

4) காலச்சுவடு பதிப்பத்தில் கூட்டத்தைக் கடந்து கண்ணன் குரல். என்னை அழைத்து கையைக் காட்டினார். ’.சரியாயிடுச்சு, பேஸ்புக்லே போட்டுடுங்க.. மலேசியா,இங்கிலாந்து இப்படி பல நாடுகளில் இருந்து ஃபோன் செய்து விசாரிக்கறாங்க’.

நம்ம பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டை உலகமே படிக்கிறது என்பதிலும் கண்ணனின் கைக்கட்டு காணாமல் போய் கால்கட்டோடு மட்டும் எப்பவும் போல் இருக்கிறார் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி.

5) விஸ்வரூபம் நாவல் நன்றாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தில் நானே இன்னொரு காப்பி வாங்கி, என் போலவே அறுபதைத் தொட்டு இன்னும் கடக்காமல் பத்திரிகை மற்ற மீடியா ஜர்னலிசப் பணியை வெற்றிகரமாகத் தொடரும் நண்பருக்கு அன்பளித்தேன். பதிப்பகம் வைத்திருக்கும் அவரும் தன் நகர்வல அனுபவங்க்ளைப் பகிர்ந்து கொள்ளும் புத்தகத்தைப் பரிசளித்தார். அறுபதுக்கு அறுபது சரியாப் போச்சு.

6) பபாசி அடுத்த வருடமும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தினால், தமிழக அரசிடம் கோரி ஆறு டவுன் பஸ்களைக் கடனாகப் பெறலாம். அண்ணா சாலை முகப்பில் இருந்து பொருட்காட்சி முகப்புக்கும், அங்கே இருந்து திரும்ப இங்கேயும் விலையில்லாமல் புத்தகக் கண்காட்சிக்கும் வருகிறவர்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கலாம். நடக்கிறவர்களுக்கும் நிம்மதி. காரில், மோட்டார் பைக்கில் நெரிசலில் ஓட்டி வருகிறவர்களுக்கும் நிம்மதி.

******************************

This is amazing indeed. I don’t remember any instance of Guardian’s film reviewer Peter Bradshaw giving a Five Star rating for a movie. ‘Django Unchained’ has earned this credit. And it is DiCaprio all the way without obstructing other players anywhere.

Peter says about DiCaprio’s character – ‘revolting racist and sadist Calvin Candie, unforgettably played by Leonardo DiCaprio…hideously self-possessed with Southern politesse and a crocodile grin revealing bad teeth …kind of ruined charisma, a shabby youth running to the seed of early middle age’..

Django again enters into my ‘would love to watch’ list nearly 40 years after he held me spellbound, enacted by Franco Nero.

********************************

2 comments on “Chennai Book Fair 2013 – treating myself to an encoreசோறு போடும் கல்கி – குழம்பு விளம்பும் சுஜாதா
  1. surya சொல்கிறார்:

    I wnat your autograph on viswarupam. Is there any way you can inform via this site how to get it.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன