Archive For ஜூலை 18, 2021

புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

By |

புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

வேகமாக வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு கீற்று விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான். ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது – “கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”. சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட, தெம்போடு தொடங்கினான் கோமாளி. “சபை நாகரிகம் என்றால் மலையாள பிரதேசத்து சாக்கியார் கூத்து நினைவு வருது….




Read more »

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – கடல் பயணமும் உப்புக் காற்றும்

By |

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – கடல் பயணமும் உப்புக் காற்றும்

மருத்துவர் என்ற உரிமையோடு அரண்மனையில் எங்கும் எப்போதும் நுழைய பைத்தியநாத் வைத்தியருக்கு அனுமதி உண்டு. அதுவும் மகாராணி இருக்கும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பிரவேசம் அனுமதி உண்டு. கூட அந்தப்புர மகளிரில் யாராவது வர வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு. வைத்தியர் முற்றத்தில் ஓரமாக மேசை போட்டு வைத்திருக்கும் மணியை குறைந்த பட்சம் ஒலி எழுப்பி அடித்தால் போதும். அடிக்கிறார். மிங்கு வெளியே வருகிறாள். என்னப்பா என்ன விஷயம் என்று விசாரிக்கிறாள். இவ்வளவுக்கும் இருவரும் புருஷன்…




Read more »

எழுதி வரும் மிளகு நாவலில் இருந்து – ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேலாக மயில் கழுத்துப் பெண்கள் சாகாவரம் பெற்றுக் கவிதைகளில் ஜீவிக்க

By |

நேமிநாதன் தேர்ந்தெடுத்த கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் மொழியாக்கம் செய்ய பிரதானி நஞ்சுண்டையா உதவுகிறார். வாரம் இரு முறை ஜெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவர் வந்து தங்கியிருந்து மொழிபெயர்ப்பு முன்னால் நகர்வதைப் பார்வையிட்டுப் போகிறான் நேமிநாதன். ஆக, முதலில் கவிதைகளை கொங்கணியில் தேட வேண்டியுள்ளது. அல்லது எழுத வேண்டியிருக்கிறது. நாலைந்து எழுதிவிட்டு மறுபடி மறுபடி குயில், தும்பைப் பூ, மாரிடம் பெருத்த ஊர்வசிகள், ரம்பைகள் என்று எழுதி அலுத்து விடவே, இதையே இன்னும் புதுப் பார்வையாக அங்கே இங்கே…




Read more »

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து: ஹொன்னாவர் நகர் ரதவீதியில் ஒரு மாலை நேரம்

By |

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து: ஹொன்னாவர் நகர் ரதவீதியில் ஒரு மாலை நேரம்

ஹொன்னாவர் நகரத்தின் பிரதானமான ரதவீதியில் கொடிக்கம்ப மேடைக்கு அடுத்து உயர்ந்து நிற்பது போர்த்துகீசு அரசப் பிரதிநிதி திருவாளார் இம்மானுவல் பெத்ரோவின் மாளிகை. அதற்குக் கிழக்கே இரண்டு சிறு தோட்டங்கள் கடந்து வீரப்பா ஷெட்டியாரின் மூன்றடுக்கு மாளிகை. அவர் மொத்தமாகக் கொள்முதல் செய்து அரிசி இதர தானியங்கள் விற்பனை செய்கிறவர். மேற்கிலோ சமண சத்சங்கம் என்ற சகலரும் வந்திருந்து இறைவன் புகழும் தீர்த்தங்கரர்களின் உன்னதமும் பாடிப் பரவி நற்கதி தேடும் புனிதமான கூடம். வீரப்பா ஷெட்டியாரின் மாளிகைக்கும் கிழக்கே…




Read more »

ஜெரஸோப்பாவில் ஒரு சிவராத்திரி 1592

By |

ஜெரஸோப்பாவில் ஒரு சிவராத்திரி 1592

எழுதப்பட்டு வரும் ’மிளகு’ நாவலில் இருந்து ———————————————– வண்டிக்காரன் சத்திரம் நிரம்பி வழிகிறது. வெளியூர் வண்டிக்காரர்களும் வந்து தங்கிப் போகிற நாள் இது. ஜெரஸோப்பா மஹாபலேஷ்வர் சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாட்டம். கோவிலுக்கு பூஜாதிரவியங்களோடு, ராத்திரி ஆனாலும் குளித்து மடி வஸ்திரம் அணிந்து உற்சாகமாக போகிறவர்களின் பெருங்கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துத்தான் கொண்டிருக்கிறது. ஹரஹர மகாதேவ என்று எங்கும் குரல்கள் பக்தி பூர்வம் ஓங்கி எதிரொலிக்கின்றன. வரிசையான சிறு ஜன்னல்களாக வடிவமைத்த கோவில் சுவர்களில் தீபங்கள் திரியிட்டுப்…




Read more »

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : மீன் உண்ட போது

By |

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : மீன் உண்ட போது

நான் விருப்பப்பட்டால் மீன் மற்றும் கடல் பிராணிகளை உண்ணலாம். ஆனால் எனக்கு அந்த மாதிரி உணவு ஏற்றுக்கொள்ளாததால் ஏதோ ஒரு தினம், ஒரு சிறு வட்டிலில் எடுத்தது என்று ருசி பார்க்கிறேன். விஜயநகரப் பேரரசர் விருந்துக்குக் கூப்பிடும்போது அசைவமும் சைவமும் என்ன எல்லாம் அந்தப் பருவத்தில் கிடைக்கிறதோ அது எல்லாம் சமைக்கப்பட்டு விருந்து மண்டபத்துக்கு வந்து சேர்ந்து விடும். அங்கே விருந்து ஒரு நீண்ட சம்பிரதாயம் சார்ந்த நிகழ்ச்சி. சாப்பிடுவது நம் வயிற்றுக்காக இல்லை. வேண்டப்பட்டவர்களோடு கூடி…




Read more »