Archive For மே 4, 2021

புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்

By |

2) எல்லாப் பையன்களையும் போல யட்சி என்று யாராவது சொல்லிக் கேட்க சீத்துவுக்கும் மனசுக்குள் அதிகபட்ச குறுகுறுப்பு அலையடித்தபடி உற்சாகமாக இருந்தது. அவளைப் பற்றி முழுக்கத் தெரியாமல் சுகமான, பயமான சொப்பனம் வர ஆரம்பித்திருந்தது. யார் யாரோ வர்ணித்திருந்த யட்சி அவன் உதட்டில் தொடங்கி கீழே இறங்கி வந்து குறும்பு செய்யும் கனவின் சுகம், அவள் இடதுகை ஆள்காட்டி விரலை உறிஞ்சும் கோர சொப்பனத்தின் பயத்தில் முழுக்க அடங்குவதில்லை. முந்தாநாள் சாயந்திரம் அவளைப் பக்கத்தில் இருந்து உற்றுப்…




Read more »

பசுவன் – 1 புதிய குறுநாவல் இரா.முருகன்

By |

பசுவன் 1) காஞ்சங்காட்டு யட்சி. சத்தம் போட்டுச் சொன்னான் சிவராமன். அவன் என்ன சொன்னாலும் அதைத் திருப்பி ரெண்டு மூணு தடவை சொல்ல ஒரு கோஷ்டி காத்திருக்கும். இருந்தது. அந்தப் பையன்கள் பம்பரம் விட்டுக்கொண்டே, ”அச்சி காஞ்சங்காட்டு அச்சி”, என்றார்கள். ”அச்சி இல்லேடா. யட்சி”. சிவராமன் அவசரமாக அவர்களைத் திருத்தினான். அவனுக்கே சந்தேகம். அச்சி தானோ. போகட்டும். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பார்கள். அவன் நில் என்றால் தரையில் மண்டி போட்டு நரநரப்பான மணல் முழங்காலில்…




Read more »