Archive For ஏப்ரல் 24, 2020

ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – 1942 மழைக்கால இரவு – புது மாம்பலம், மதறாஸ்

By |

வயிறும் மனதும் நிறைய தெலக்ஸ் புவனாவுக்கு நன்றி சொல்லும்போது சட்டென்று பொறி தட்டியது. வரும் செவ்வாய்க்கிழமை ரத்னா எங்கள் வீட்டில் சத்யநாராயண பூஜை வைத்திருக்கிறாள். உடனே ஒரு யோசனை. “மேடம், செவ்வாய்க்கிழமை எங்க கிரஹத்துக்கும் நீங்க வந்திருந்து சிறப்பிக்கணும்.. என் சார்பிலேயும் என் மனைவி ரத்னாபாய் சார்பிலேயும் கேட்டுக்கறேன்.. ஜோசியர் வீட்டுக்கு எதிர்லே தான்.. சொன்னேனே.. ஒரு நிமிஷம் ஒகடி ஒக நிமிஷமு..”. எனக்குத் தெரிந்த தெலுங்கு அவ்வளவுதான். ”ஓ அதுக்கென்ன வரலாமே. இந்த மேடம் எல்லாம்…




Read more »

விருந்துக்குப் போனவர்கள் – வெளிவர இருக்கும் ராமோஜியம் நாவலில் இருந்து

By |

உள்ளே இருந்து நடு வயது அம்மையார் ஒருவர், கொஞ்சம் சுபாங்கி அம்மாள் ஜாடையும், அவளைப் போல் மூன்று பேரை ஒரே உடம்பில் அடைத்த பருமனுமாக வந்து ரண்டி ரண்டி என்று வரவேற்க, இந்தியில் இல்லை, தெலுங்கில் என்று மனதில் திடமாகச் சொல்லிக்கொண்டு கைகூப்பினேன். தெலக்ஸ் புவனாவோட சித்தி என்று பந்துலு சார் காதில் சொன்னார். கித்தான் பையைப் பிரியத்தோடு தூக்கி பந்துலு சார் சித்திகாருவிடம் கொடுத்தார். அந்த சுந்தரமான வாசனையில் மனம் பறிகொடுத்த மாதிரி ஒரு வினாடி…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த புதினம் – ஜி.என்.செட்டி தெருவில் ஒரு தெலக்ஸ் 1942

By |

”அம்மாவுக்கு சொந்தக்காரங்க ஹை, தும் ஜாவ். ஜாவ்” என்று பந்துலு ஏதோ ஹிந்தி பேசுகிற பாவனையில் சொல்ல, தும் ஜா என்று அவரைப் பிடித்துத் தள்ள பிரம்போடு முன்னால் வந்தான் அந்த இளம் கூர்க்கா. சூப்பரிண்டெண்ட், அத்தங்கா, மாகாணிக்கிழங்கு இதெல்லாம் அவனுக்கு அனாவசியம் என்பதோடு, பந்துலு சாருக்கு இதையெல்லாம் இந்தியில் சொல்ல வராது என்பதும் புலப்பட்டது. “க்யா வேர் இஸ் தட் ஓல்ட் கூர்க்கா ஹை?” அவனுக்கு இதுவும் புரியவில்லை. பந்துலு சார் பயனின்றி உள்ளே நோக்கினார்….




Read more »

ராமோஜியம் – நாவலிலிருந்து – இன்னொரு 1942ம் ஆண்டு அத்தியாயம்

By |

நாங்கள் பத்தே நிமிடத்தில் கிளம்பினோம். பந்துலு சார் தன் ஜோல்னாப் பையையும் நான் என்னுடையதையும் எடுத்து மாட்டிக் கொண்டோம். சாப்பாட்டு பாத்திரம்? எதுக்கு இங்கேயே இருக்கட்டும். பெரிய ஸ்டார் வீட்டுக்கு எச்சில் பட்டு கழுவாத அலுமினியப் பாத்திரத்தோடா போவது? பந்துலு சார் முன்னேற்பாடாக இன்று எலுமிச்சை சாதம் இலையில் பார்சலாகக் கட்டி நியூஸ் பேப்பரில் பொதிந்து கொண்டு வந்திருந்தார். அவருக்கு அத்தங்காளைப் பார்க்கப் போவது ஏற்கனவே தெரியும். எனக்கும் தெரிந்திருந்தால் அதேபடி செய்திருப்பேன். போகட்டும், புகார் செய்ய…




Read more »

ராமோஜியம் நாவல் – தெலக்ஸ் புவனா வந்த இன்னொரு 1942 அத்தியாயத்திலிருந்து

By |

இந்தக் காலம் என்கிற விஷயம் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. சில பொழுது, ஒரு யுகம் போன மாதிரி ஒரு மணி நேரம் மிக மெல்ல ஊர்ந்து போகும். இன்னும் சில நேரம் காலம் முன்னால் போய் சட்டென்று நின்று கொஞ்சம் பின்னால் போய் கண் விழித்துப் பார்ப்பதற்குள் மறுபடி முன்னே போக இதெல்லாம் ஏற்கனவே நடந்ததே என்று குழம்ப வைக்கும். சில பொழுது இமை நேரத்தில் ஒரு மாசம் போய் விடும். அது போனது கூடத்…




Read more »

ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – 1942 இன்னொரு அத்தியாயம்

By |

”இன்னிக்கு ஏ ஆர் பி டியூட்டி இல்லைதானே?” எங்கே நான் மறந்துவிட்டேனோ என்று நினைவு படுத்திக் கேட்டாள். இல்லை என்றேன். இந்த வாரத்துக்கான நாலு இரவு ரோந்தும் நான் முடித்திருக்கிறேன். பார்க் போய் விட்டு வரும்போது சுபாங்கி அம்மாள் வீட்டு வாசலில் இருந்து ரத்னாவைப் பார்த்துக் கேட்டாள் – “ஏண்டி பொண்ணே, ரேஷன்லே உளுத்தம்பருப்பு நாளைக்கு போடறாங்களாம். போகலாமா?” ஏதோ ரேஷனில் ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் வெகுமதியாகக் கொடுப்பது போல் இரண்டு பெண்மணிகளும் வெகுவாக சந்தோஷப்பட்டார்கள்….




Read more »