Archive For மார்ச் 16, 2020

எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் : ராமோஜி : வாராங்கல் ஸ்டேஷனில் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 1944

By |

(எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து) விஜயவாடாவில் பஞ்ச பஞ்ச உஷத்காலமான காலை நாலு மணிக்குச் செய்ய எதுவும் இல்லாமல் நானும் ரத்னாவும் மறுபடி உறங்க முயற்சி செய்ய ரயில் சக்கட சக்கட என்று தொடர்ந்து ஒரே தாளத்தில் பாடித் தாலாட்டியது. கண் முழித்தால் வாராங்கல் ஸ்டேஷனில் ரயில் ஏகக் கோலாகலமாக நுழைந்து கொண்டிருந்தது. விடிந்த சுருக்கில், அழகான காலை ஆறரை மணி. பல் துலக்கி வந்தேன். ரயிலுக்குப் பக்கமாக, கம்பார்ட்மெண்டுக்கு பத்தடி தள்ளி ப்ளாட்பாரத்தில் பெரிய…




Read more »

யாத்ரா சர்வீஸ் – எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

யாத்ரா சர்வீஸ் – எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

யாத்ரா சர்வீஸ் ————————————————————————– நைனியப்ப நாயக்கன் தெருவில் இரு மத்திய வயசுத் தெலுங்கர்கள் ஒரு கம்பேனியை போன வருஷம் தொடங்கி இருக்கிறார்கள். காசி, ஹரித்வார், வட மதுரை இப்படி புண்ணிய ஸ்தலங்களுக்கு அவரவர்கள் ரயில் டிக்கெட்டு வாங்கி, பிரயாணத்தை அவரவர் மட்டுக்கு சௌகரியமாக்கிக் கொள்வது என்ற நடைமுறை உண்டல்லவா? அதற்கு மாறாக கோஷ்டி அடிப்படையில் ஸ்தல யாத்திரை போவது பற்றிய பிரஸ்தாபத்தை இந்தக் கம்பேனி செய்கிறது. அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். யுத்த காலத்தில் பயணத்தைத் தவிர்ப்பீர்…




Read more »

எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’ : 1943-இல் ஓர் இரவு

By |

எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’ : 1943-இல் ஓர் இரவு

சுற்றி வர மதறாஸ்லே எங்க வீட்டை ஒட்டி இருக்கப்பட்ட வீடு, எங்க தெரு, அடுத்த தெரு இப்படி சிநேகிதமா இருக்கப்பட்டவங்களோட குரல் எல்லாம் கேட்டபடி இருக்கு. கூடவே மீசை டாக்டர் நாயர் சார் குரலும் மனசுக்கு ஆறுதலா கேக்குது. அவர் யாருக்கோ ஊசி போடறார். இருட்டிலே அது யார்னு தெரியலே. என்னப் போல அச்சு அசப்பிலே இருக்கப்பட்ட ஒரு பெண். அவளுக்கு இஞ்செக்ஷன் போட்டா எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி வலிக்குது. இல்லே அங்கே படுத்திருக்கிறது நான்…




Read more »

கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் : எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

By |

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் 1943 டில்லியில் ரத்னாவின் மூத்த அண்ணன் மகள் புஷ்பவதியானதற்காக வீட்டு மட்டில் சுப நிகழ்ச்சி. அங்கிருந்து ஹரித்துவார் போய் வந்து வாரணாசி. வாரணாசியில் இருந்து மதறாஸ் திரும்புதல். முதல் கட்டமாக டில்லிக்கு இன்று சாயந்திரம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் வைத்து நானும் ரத்னாவும் புறப்பட்டாகி விட்டது. பஞ்சாங்கக்காரர் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு தயிரும் சர்க்கரையும் குழைத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பச் சொன்னதோடு இன்னொன்றும் குறிப்பிட்டார். வடக்கு நோக்கிப் பயணம். அவ்வளவு…




Read more »

மெழுகு திரி வாங்கப் போய் – என் புது நாவல் ‘ராமோஜி’யில் ஒரு சிறு பகுதி

By |

மெழுகு திரி வாங்கப் போய் – என் புது நாவல் ‘ராமோஜி’யில் ஒரு சிறு பகுதி

ஜெனரல் ஆஸ்பத்திரியை ஒட்டி பெரிய மருந்துக் கடை இருந்தது. டாக்டர் கேட்டிருந்த மருந்தெல்லாம் வாங்கியானது. மெழுகுவர்த்தி வாங்க பதினைந்து நிமிடம் கடை தேடி அலைந்து ஒரு வழியாகக் கிட்டியது. கேளப்பன் ’மெழுரியுண்டோ’ என்று மெழுகு வர்த்தி கேட்டது கடைக்காரர்கள் அப்படி ஏதும் இல்லை என்று கை விரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம். மருந்து, மெழுகுவர்த்தியோடு ஆஸ்பத்திரிக்குள் ஓடினேன். மீசை நாயர் டாக்டர் நல்லவேளையாக இன்னும் அங்கே தான், கைக்கடியாரத்தைப் பார்த்தபடி, நின்றிருந்தார். “ஷி இஸ் ஆல்ரைட்.. நாளைக்கு இன்னொரு…




Read more »

மறக்க முடியாத மதறாஸ் இரவு – அக்டோபர் 11, 1943: எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘ராமோஜி’

By |

மறக்க முடியாத மதறாஸ் இரவு – அக்டோபர் 11, 1943: எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘ராமோஜி’

மதியம் கேண்டீனுக்கு முழு ஆபீசுமே படை எடுத்திருக்க நான் எண்களின் பிரவாகத்தில் அடித்துப் போகப்பட்டேன், இலக்கு உணர்ந்த வெள்ளப் பெருக்கு அது. ஒன்றும் மற்றதும் மற்றதும் அடுத்ததும் அடுத்ததும், பிறவும் எல்லாம் ஒருபோல் ஒரே கூட்டுத் தொகையை எடுத்தியம்பி வாழ்க்கையில் களிபேருவகை கொண்டு, கூகூவென மகிழ்ந்திருக்க வைப்பதே ஆகும் அது. மணி பார்த்தேன். பிற்பகல் மூன்று. சாப்பிட்டு வேலை பார்த்த களைப்பு தீர ஒரு கூட்டம் மறுபடி கேண்டீனுக்குக் காப்பியும் டீயும் தேடிப் போய்க் கொண்டிருந்தது. நேரம்…




Read more »