Archive For The “பொது” Category

ஒரு ராத்திரியில் ட்ரிக்னோமெட்ரி கற்றுத் திறமை காட்டும் பொருளாதர நிபுணர்களில் உலகம்

By |

ஒரு ராத்திரியில் ட்ரிக்னோமெட்ரி கற்றுத் திறமை காட்டும் பொருளாதர நிபுணர்களில் உலகம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி இது தென்னிந்தியாவுக்கே உரிய பாரம்பரிய இசை தானே?   எங்கே சுட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், மேஜையில் தாழ்வான பகுதியில் சுழன்று கொண்டிருந்த ஒலி நாடாவில் இருந்து வரும் இசையைக் குத்துமதிப்பாக அவதானித்துக் கேட்டான் அவன். அது கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பிடிவாதத்தோடு சில வார்த்தைகளையும் சொற்கட்டுகளையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் அடம் தெரிந்தது. வார்த்தைகள் நிறுத்தாமல் வாதாடுவதை…




Read more »

பெண்மைச் சாயலைப் பூசிய பொன்னாடை போர்த்த, ஆர்பாட்டமில்லா முரசு முழங்கி வரவேற்பு

By |

பெண்மைச் சாயலைப்  பூசிய பொன்னாடை போர்த்த, ஆர்பாட்டமில்லா முரசு முழங்கி வரவேற்பு

வாழ்ந்து போதீரா நாவலின் அடுத்த சிறு பகுதி   இனிஷியல்கள் மட்டும் வைத்துக் குறிப்பிடுவது இங்கே வழக்கம் இல்லையோ?   ஆமாம். இனிஷியல்கள் மட்டும் போதும் என்றால் என்னைக் கழுதை என்று அழைக்கலாம்.   சங்கரன் சொல்லி விட்டுச் சிரிக்க அமைச்சரும் கலந்துகொண்டார்.   வைத்தாஸ் தான் ஏதும் தவறாகப் பேசிவிட்டோமோ என்று உள்ளார்ந்த பயத்தோடு மன்னிப்பு கேட்கும் தோரணையில் மறுபடி சங்கரனை வணங்கினான். இப்படி வணக்கமும் மறு வணக்கமுமாக இந்தச் சந்திப்பு முடிந்து விடும் என்று…




Read more »

நேசமான மனைவி கணவனைப் பின் தொடர்வது போல் வாய்ப்பாட்டை வார்த்தை விடாமல் சொல்லிப் போகும் வயலின்

By |

நேசமான மனைவி கணவனைப் பின் தொடர்வது போல் வாய்ப்பாட்டை வார்த்தை விடாமல் சொல்லிப் போகும் வயலின்

வாழ்ந்து போதீர் – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதிலிருந்து ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] வாழ்ந்து போதீரே  அத்தியாயம்  இருபத்திரெண்டு –               வைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக  வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது….




Read more »

தலைக்கு மேல் மட்டும் மழை பெய்திட ஆப்பிரிக்க ஜோஜோ மாந்திரீகம்

By |

தலைக்கு மேல் மட்டும் மழை பெய்திட ஆப்பிரிக்க ஜோஜோ மாந்திரீகம்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி வைத்தாஸ் அடுத்த வாரம் இங்கே இருப்பான். தில்லியில் தூதரகம் புனரமைக்கிற, நட்புறவை மறு கட்டமைப்பு செய்கிற முக்கியமான பணி அவன் தான் செய்தாக வேண்டியிருக்கிறது. தேசியக் கடமை.   நந்தினி மக்களவை அதிபராக அடுத்த வாரம் பதவியேற்பாள். தேர்தல் அறிவிப்பதும், நட்பான வல்லரசு நாடு இங்கே தொடங்க இருக்கும் மோட்டார் கார் தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் இடுவதும் மக்கள் அதிபராக அவள் செய்ய வேண்டிய…




Read more »

சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் வயோதிகத்தில் அடியெடுத்து வைத்தவள்

By |

சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் வயோதிகத்தில் அடியெடுத்து வைத்தவள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே அரசூர் நாவல்கள் 1.அரசூர் வம்சம் 2. விஸ்வரூபம் 3. அச்சுதம் கேசவம் 4.வாழ்ந்து போதீரே   = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு ========================================================================= ஒன்பது மணிக்கு வந்தவர் இரண்டாம் கட்ட ராணுவத் தலைவர். ஓங்கு தாங்காக வளர்ந்த கெச்சலான இளையவர். இன்னும் விடலைப் பருவம் நீங்காமல் முகம் முழுக்கப் பருக்களாக வெடித்து வாரிக் கிடந்தது. இந்த வயதில் ராணுவத்தில் தொடக்க…




Read more »

செம்மறி ஆட்டின் பக்குவமாக சமைக்கப்பட்ட கல்லீரல் போல் வலிமை தருகிறவர்

By |

செம்மறி ஆட்டின் பக்குவமாக சமைக்கப்பட்ட கல்லீரல் போல் வலிமை தருகிறவர்

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் பகிரப்படுகிறது, வாசித்து மகிழ்க   குனிந்து வளைந்து காப்பி ப்ளாஸ்கை சிறிய மேஜையில் வைத்துப் போனாள் பணிப்பெண். இந்தப் பானம் பரிசோதிக்கப்பட்டது என்று அறிவித்தபடி பின்னோக்கி நடந்து வணங்கிப் போன பரிசோதனை அதிகாரியைத் தொடர்ந்து வந்த ஊழியர் பானம் அருந்த நல்ல நேரம் என்று அறிவித்துப் போனார். நந்தினி காப்பியைக் குவளையில் சரித்து அருந்த  ஆரம்பித்தாள்.   அறை வாசலில் மரியாதையோடு நின்ற வீட்டு…




Read more »