Archive For மே 16, 2020
ரத்னாவை மனதில் அவள் இடத்தில் ஒன்றுக்கு ஒன்பது பூட்டு போட்டுப் பூட்டி வைத்தேன். புவி என்றேன் கிளுகிளுப்பாக அவள் கூந்தலில் முகம் மறைத்துப் பின்கழுத்தில் முத்தமிட்டபடி. என்னடா என்றாள் அவள் என் தோளில் கடித்து. இதெல்லாம் தசாபதி என்கிற கருப்பு வெள்ளை சினிமாவில் நடக்கிறது. நான் அங்கே அனாவசியமாகப் புகுந்தது தெரிய வந்து என்னைத் துரத்திவிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தேன். ”மச்சி, தேவிடியாக் கச்சேரி பார்க்க சூபரின்டெண்டெண்ட் வந்திருக்கார்.. காப்பி எடுத்துவரச் சொல்லுங்க” தசாபதியின் அம்மா என்னைச்…
புவனாவின் ’சுந்தரி’ பங்களா வாசலில் அவளுடைய ஆஸ்டின் கார் சமர்த்துக் குட்டிப்பாப்பா போல் நின்றுகொண்டிருந்தது. தோட்டக்காரனும், டிரைவரும், சமையல்காரியும் கண்ணில் படவில்லை. பக்கத்து காம்பவுண்டில் அந்த வீட்டு ஊழியர்கள் அவசர மகாநாடு கூட்டி எதையோ விவாதித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. என்னைப் பார்த்ததும் ஆயியே சாப் என்று கூர்க்கா சல்யூட் அடித்து உள்ளே அனுப்ப அவர்களின் பேச்சு நின்றது. கூட்டமாக அவர்கள் என்னைப் பார்த்தபடி அடுத்த வீட்டுக்குள் போனார்கள். அவர்கள் போகும்வரை வாசலில் நின்று விட்டு, அழைப்பு மணியை…
கேண்டீனுக்குப் போனபோது எனக்கு அதிகார போதை தலைக்கேறி இருந்ததாக உணர்ந்தேன். எதிர்ப்பட்ட எல்லோரும் மரியாதையாகச் சிரித்து ஒரு அடி விலகி நின்று கைகுவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நாலைந்து பேர் அப்படி மனசைக் குளிர்வித்தார்கள் தான். ஆனால் பல பேர், என்னைப் பார்த்ததும் ஒதுங்கி ரெண்டு மூணு பேராக நின்று உற்றுப் பார்த்து ஏதோ தகவல் சரி பார்க்கிறதாகத் தலையாட்டிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நல்லா வயிறு எரியட்டும்.. நான் டெம்பரரி சூபரின்டெண்டெண்ட்… அது நிரந்தரமாக என்ன சூசனைகளும்…
பந்துலுவின் மேஜை மேல் குவிந்து கிடந்தன பழையதும் புதியதுமாக ஃபைல்கள். நான் தினசரி ஏதாவது பற்றி அவரோடு பேச வரும்போதும் அதெல்லாம் இருந்தாலும், இந்த நாற்காலியில் உட்கார்ந்ததும் அதிகமாகப் பெருகி எனக்காகக் காத்திருப்பதாக பிரமை. என்னைப் பெருங்காயமாகக் கரைத்து ஒன்றுமில்லாமல் செய்ய இத்தனை ஃபைல்கள். இன்னும் வருகின்றன. நான் முதல் ஃபைலைத் திறந்தேன். நரசய்யாவுக்கு விஜயவாடா கலெக்டர் ஆபீசுக்கு இட மாற்றம் அனுமதித்து நோட் போட்டிருந்தது. ஆராவமுதன் போட்ட நோட்டு. அவர் தலை கதவுக்கு அந்தப் பக்கம்…
தியூப்ளே வீதி “அழகான பெண்களே, என் இன்னுயிர்த் தோழிகளே, எல்லாக் கசடுகளோடும் நான் இன்னும் உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் உங்கள் அன்பும் உங்கள் மேல் என் தீராக் காதலும்தான் காரணம். உடலும் காமமும் எரிந்து தீரும். நான் இருப்பேன் நீங்களாக!” – நாவலில் இருந்து இரா.முருகன் ஸார் அவர்களின் படைப்புகளில் முதன்முதலில் நான் வாசித்தது “மூன்று விரல்” நாவல். அதற்குப் பிறகு நினைவில் இருப்பதில் முதலாவது என்றால் “நெம்பர் 40, ரெட்டைத் தெரு” புனைகதைதான்….
பந்துலு சார் கவர்னரின் செக்ரெட்டரி துரைக்கு ஃபோன் பண்ணி, அந்த துரை சொன்னபடி நடந்ததாம் இது. வீரையா ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரும்போது வெளியே போய்க்கொண்டிருந்தாராம் பந்துலு. அவர் வீரையாவிடம், ”இந்தக் கடுதாசிகளை அவசியம் ராமோஜி சாரிடம் சேர்த்து விடு” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னான் அவன். முதல் கடிதம் என் பெயர் கவரில் எழுதியது. அடுத்தது மிஸ்டர் ஆர்தர் ஆஷ்லே என்று கவர்னரின் செக்ரெட்டரிக்கு விலாசம் எழுதியது. ”அன்புள்ள ராமோஜி, என் தகப்பனார் வால்ட்டேரில்…