Archive For மே 20, 2018

புதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்

By |

புதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்

மனிதச் சதுரங்கம் – 1905 ரஷ்யா மதகுருக்கள் சக்கர வர்த்தினிமா மன்னர் உதவுபரி கால்படை வேழம் பதவிதந்து கோட்டையிலும் மாளிகை குச்சினிலும் தான்நிறுத்தி ஆட்டிவைத்துப் பார்ப்பான் அவன். இரா.முருகன் https://t.co/IbpJ3KfyJL ’’மதிலரங்கக் கோயில், மனதுக்குள் வாழும் புதிர்ரங்க ராஜா பதிலை -எதிர்வந்து அம்மணக்(மகா நிர்வாணம்) கண்ணாவுன் ஆட்சிபொம்ம லாட்டத்தில் எம்மனத்துள் நானார்(நான் யார்) (தலை) எழுத்து!’’….கிரேசி மோகன்….! *************************************************************************************** பி.பி.சி பிரிட்டீஷ் இளவரசர் ஹாரி திருமணம் மே 19-இல் நடைபெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்தது. அதைக் காணத்…




Read more »

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 2

By |

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 2

இரா.முருகன் : இன்னும் ஒரு கதை. இதுவும் பெருவாரியான கவனத்தைப் பெற்றது. இந்திரா காந்தி மரணத்தை அடிப்படையாகக் கொண்ட ‘வன்மரங்கள் வீழும்போள்’ (பெரிய மரங்கள் விழும்பொழுது). என்.எஸ்.மாதவன் அந்தக் காலகட்டத்தில் – 1984 – நான் தில்லியில் பணியில் இருந்தேன். நான் இருந்த நகர்ப் பகுதியில் இந்திரா மரணத்தைத் தொடர்ந்து எழுந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையும் கலவரங்களும் உச்சத்தில் இருந்தன. போக்குவரத்து முடங்கி இருந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் அன்னையர், தந்தையருக்கும்…




Read more »

New: வாடகை வீட்டு அனுபவம் – எடின்பரோ

By |

New: வாடகை வீட்டு அனுபவம் – எடின்பரோ

அந்திமழை மே 2018 இதழில் பிரசுரமானது வாடகை வீடு இரா.முருகன் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில், குரோவ் ஸ்ட்ரீட் என்ற தோப்புத் தெருவுக்கு டாக்ஸி பிடித்துப் போய்ச் சேர்ந்தேன். ஒரு பனிக்கால சனிக்கிழமை காலை நேரம் அது. நான் குடக்கூலிக்குப் பிடித்த வசிப்பிடம் தெருக்கோடியில் கருமை பூசிய சுவர்களோடு நின்று கொண்டிருந்தது. தோப்புத் தெரு, ஏன் எடின்பரோவே கருத்த கல் கட்டிடங்களின் ஊர். நூறாண்டு முற்பட்ட என் இருப்பிடத்துக்கு அடுத்து ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் முதல்முதலாக நடித்த சர்…




Read more »

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – 1

By |

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – 1

மலையாள எழுத்தாளர் என்.எஸ்மாதவன் மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர், இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. என்.எஸ்.மாதவனோடு என் நட்புக்கு இரண்டு மார்கழி வயது. அவருடைய எழுத்தோடு என் நட்பு இருபது மார்கழி கடந்த ஒன்று. இரண்டு வகை நட்பும், நான் மாதவனின் இலக்கியப் படைப்பை அண்மையில் தமிழுக்கு மொழிபெயர்த்தபோது வலிமை பெற்றது. போன மார்கழிக்கும் இந்த மார்கழிக்கும் நடுவில் நான் அவருடைய நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நூலைத்…




Read more »

New: எழுதி வரும் நாவலில் இருந்து..

By |

New: எழுதி வரும் நாவலில் இருந்து..

Draft awaiting editing மேன்செஸ்டர், விமானம் விண்ணேறிப் பறக்கும் அழகான வெளியும், குளிர் சற்றே பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது. பதினைந்தே நிமிடத்தில் எமிக்ரேஷன் சோதனைகள் உடனடியாக முடிந்து, பேக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்து சேர்ந்து, விமானம் இறங்கிய பதினைந்தாம் நிமிடம் ஏர்போட்டின் வெளியே இருந்தான் சிவா. ஒரே ஒரு டாக்சிதான் வெளியே இருந்தது. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நாற்பது பேர் விமானம் விட்டு இறங்கியதில் சிவா தவிர வேறு எல்லாருக்கும்…




Read more »

ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

By |

ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் : உயரம் ——————————————————————- காலுயர்த்தி வைத்திருக்கக் கம்பூட்ஸ் அணியாமல் மேலேறிப் பெட்டியிட்டு நிற்காமல் போலியின்றி வள்ளுவர் வாசுகியை வார்த்தையில் தீட்டினால் கொள்ளுமடி ரெண்டு குறள் இரா.முருகன் அண்ணலவர் நோக்க, அடுத்தவீட்டு ஜன்னலில் பெண்ணவள் பார்த்துப் புதிர்போட -வெண்நிலவில், சார்லெஸ் டயானாவை சந்தித்தார் ஸ்டாம்புக்காய் ஸார்லெஸ்இஞ்ச்(SIR LESS INCH) ஆகநின்றார் பெஞ்ச்(BENCH)….கிரேசி மோகன்….! அன்பு இராமு சார் கீழே தந்த ‘’குறும் பாவை’’ வெண்பாவாய் ஆக்கினேன்…..! அண்ணலவன் நோக்க எதிர்வீட்டு ஜன்னலவள் நோக்க, புதிர்…




Read more »