Archive For மே 7, 2020

ராமோஜியம் – 1947 ஆகஸ்ட் 14-ந்தேதி பிறந்த சுதந்திரா

By |

திரும்ப நடக்கும்போது காளிங்க ரத்தினம் சார் கொடுத்தனுப்பிய காணிக்கை இருநூறு ரூபாய் நினைவு வர உடனே நின்றேன். அவசரமாகக் கைப்பையில் தேடினேன். எங்கே போனது அது? படபடப்போடு கைப்பையைக் கொட்டிக் கவிழ்த்து எடுத்துப் பார்க்க, அந்தக் காணிக்கைப் பணத்தைக் காணவே காணோம். ஆனால், ’முப்பது ரூபாய் இதர செலவினங்கள்’ கவர் பத்திரமாக இருந்தது. காளிங்க ரத்தினத்தின் காணிக்கை வைத்த கவரைத்தான் தேவனாஞ்சேரி கந்தனுக்குக் கொடுத்தேன் என்று புரிந்தது. இருநூறு ரூபாயா? தானம் செய்தாலும் அளவு பார்த்துச் செய்ய…




Read more »

திருக்கருகாவூரில் ஒரு காலை நேரம் 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

உப்புக்காரத் தெருப்பையன் டிரைவர் என்னை ஓரமாகக் கூட்டிப் போனான். ”சார், தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. இங்கே இருந்து மூணு மைல்தான் கருகாவூர். நீங்க நடையை எட்டிப் போட்டாக்கூட போயிடலாம்.. நான் இவங்களை நம்ம கார்லே கும்பகோணம் கொண்டு சேர்த்துடறேன்.. அப்புறம் ஆண்டவனோ, பராசக்தியோ, இயற்கையோ, விதிச்சபடி ஆகட்டும்”’ ரத்னா கேட்டபடி பின்னால் நின்றவள் உடனே கூடைகளை விட்டோபா உதவியோடு இறக்கி வைத்தாள். நான் சுருக்கமாக அந்த மாட்டுவண்டி இளைஞனிடம் எல்லாம் சொன்னேன். கை கூப்பி நின்றான் அவன்….




Read more »

ராமோஜியம் – பட்டீசுவரம் வழியாகத் திருக்கருகாவூர் 1945

By |

ஒரு வருடம் மட்டும் தான், கூட ரெண்டு மாதம், சரி, நான் இருந்த அந்தக் குறுகிய பொழுதில் பிடித்துப்போன ஊர் இது. பிறந்து வளர்ந்த மதறாஸ் கூட அப்புறம் தான். ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு முகமும் நினைவில் மட்டுமில்லை ஆழ்ந்த உறக்கத்தின் போது கனவிலும் வந்து போகுமளவு என்னை பாதித்த ஊர் இது. ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். ரத்னா இங்கே வராமல் இருந்தால் நான் மட்டும் வந்திருந்தால் குடந்தை என்னை இத்தனை ஆக்கிரமித்துக்…




Read more »

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு காலைப் பொழுது 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

”ஏம்பா நீ போன வாரம் நான் பார்த்தபோது காப்பி போட்டுட்டிருந்தியே” என்று விசாரித்தபடி திரும்பினார் விட்டோபா. ”ஆமா காப்பி மாஸ்டர் வரலேன்னு முதலாளி அங்கே அந்த மூலைக்கு போகச் சொன்னார். காப்பி மாஸ்டர் போயாச்சு.. அட இருக்காருங்க.. மெட்றாஸோட போயிட்டார்.. எல்லோரும் மெட்றாஸை விட்டு வரும்போது இவர் அங்கே காபிக்கடை இல்லே டீக்கடை போட்டிருக்கார்.. நல்லா போகுதாம்”. பச்சையப்பன் தெருப்பையன் என் தகவலுக்காகவும் சொன்னான். ”இங்கே காப்பி கோட்டை ஆச்சே.. டீ எப்படி போவுது?” என்று கேட்டபடி…




Read more »

கும்பகோணம் ரயில் நிலையத்தில் காலை 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

என் அடுத்து வெளிவர இருக்கும் நாவலான ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் இங்கே மணி ஆறரை ஆகியிருந்தது. அந்தக் காலை நேரத்திலும் கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெலக்ஸ் தெலக்ஸ் என்று பரபரப்பு தெரிந்தது. போட்மெயில் மெதுவாக நகர்ந்து வந்து நிற்கத் தயாராகிக்கொண்டிருந்தது. ராமு ராமு என்று தீனமான சத்தம். ப்ளாட்பாரத்தில் ரயிலோடு ஓடி வந்து கொண்டிருந்தார் விட்டோபா. வண்டி நின்றது. நான் இறங்கி ப்ளாட்பாரத்தில் நிற்க என் மேல் மோதி அணைத்துக் கொண்டு நின்றார் அவர் மூச்சு…




Read more »

என் அடுத்து வெளிவர இருக்கும் நாவல் ‘ராமோஜியம்’ பற்றி – About my forthcoming novel RAMOJIUM

By |

அன்புள்ள நண்பர்களுக்கு என் வணக்கம். ஒரு சிறுகதையாகத் தொடங்கியது, நண்பர்கள் விருப்பப்படி 400+ பக்கங்களுக்கு வளர்ந்து பெரிய நாவலாக ‘ராமோஜியம்’ உருவாகிக் கொண்டிருக்கிறது. அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்களில், 2400 பக்கங்களில் தொடர்ந்த மேஜிக்கல் ரியலிச கதைப் பொழிவு தமிழில் முதன்முதலாக இதற்கு முன் நிகழ நண்பர்களான நீங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் போல இப்போதும் எனக்குக் கிடைத்து, தமிழில் முதன்முதலாக ’உருவாகும்போதே பிரதியை விவாதிக்கத் தருவதை’த் தமிழில்…




Read more »