Archive For The “பொது” Category

ராமோஜியம் – ஜனவரி 1, 1946 செவ்வாய் – சென்னை

By |

”ஸ்வாகத ஆஹே பாவு” இந்த சகோதரனுக்கு மராட்டியில் நல்வரவு சொல்லி வரவேற்றாள் குந்தி. பின்னாலேயே சாஜுயும் கை கூப்பியபடி வந்தார். ”துமி சகளே கஸே ஆஹத்?” அவர்கள் எல்லோருடைய நலமும் – கழுதைக்குட்டி உட்பட – பொதுவாக விசாரித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். காப்பி, டீ எதுவும் வேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாகச் சொல்லி வைத்தேன். இந்தத் தெருவிலேயே முதல் தரமான காப்பியும் டீயும் ரத்னா கலந்து தருவதுதான். புரசைவாக்கத்திலேயே என்று கூடச் சொல்வேன். சமையல்கட்டில் ஏதோ களேபரமாக…




Read more »

ஜனவரி 1, 1946 சென்னை – ’ராமோஜியம்’ புதினம் சில பகுதிகள்

By |

இன்றைக்கு முத்தியால் நாயக்கன் தெரு புத்தாண்டு கோலாகலத்தோடு கலகலப்பாகக் கண்விழித்த போது கழுதை வெள்ளையன் கனைத்துக்கொண்டு யார் கையிலும் பிடிபடாமல் சுற்றிச்சுற்றி ஓடியது. எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையப் பார்த்து, ரத்னா எவர்சில்வர் தட்டில் சப்பாத்திக் குழவியால் கொட்டி முழக்க வந்தவழியே திருப்பி ஓடியது அது. திண்ணைக்கு காப்பி டம்ளரோடு போனபோது ”இன்னும் ரெண்டே வாரத்திலே போகியும் பொங்கலும் வந்துடும். கொட்டு எல்லாம் போகிக்கு வச்சுக்க.. தட்டு பொங்கலுக்கு வச்சுக்கோ’ என்றேன் ரத்னாவிடம். காப்பியும் சுதேசமித்திரனுமாக சாய்வு…




Read more »

புது நாவல் – ராமோஜியம் : ஜனவரி 1, 1946 செவ்வாய்க்கிழமை, மதறாஸ்

By |

1946 ஜனவரி 1, செவ்வாய்க்கிழமை புதுவருடம் பிறந்தது. பிறக்கும்போதே போர் இல்லாத இந்த வருஷத்தை எப்படி எதிர்கொள்வோம் என்று இனம் புரியாத பயமோ, சங்கடமோ எட்டிப் பார்த்தது உண்மை. ஹோ அண்ட் கோ டயரியை எனக்கும் பந்துலு சாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளோடு தெலக்ஸ் புவனா அனுப்பி வைத்திருந்தாள். அவளுக்கு இந்தப் புத்தாண்டு பம்பாயில் ஷூட்டிங்கோடு பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி. புது வருடம் ரேடியோ செய்தி அறிக்கையோடு தொடங்கியது. ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ தான் சூரிய வம்சத்தில் பிறந்தவர்…




Read more »

ராமோஜியம் – 1946 சென்னையில் ஒரு மழைக்கால இரவு

By |

”வேலை அதிகம் இருக்கா? ஞாயிற்றுக்கிழமை கூட ஆபீஸ் போய்ட்டு வரீங்க போல இருக்கே?” விலாசினி கண்ணில் கருணை பொங்க விசாரித்தாள். அதில் அனுதாபமும் அன்பும் மேம்பூச்சாக இல்லாமல் உள்ளோடிக் கலந்திருந்ததைக் குழைவான அவளுடைய குரலில் அனுபவித்தேன். ”இல்லே இல்லே இன்னும் அவ்வளவு மோசமாப் போகல்லே.. பேமிலி ப்ரண்ட்.. காளிங்க ரத்தினம் சார் வாங்களேன்னு கூப்பிட்டிருந்தார்.. வாரா வாரம் நானும் ஒத்தி வச்சு, இன்னிக்கு ரத்னா மாதர் சங்கக் கூட்டம்னு போனதாலே கிளம்பிட்டேன்..” பெருமையோடு சொன்னேன். ”காளி சாரோடு…




Read more »

ராமோஜியம் – விலாசினி வந்த மழை நாள்

By |

காளி வீட்டில் இருந்து இறங்கும்போது தெலக்ஸ் புவனா நினைவு வந்தது. அவள் சேலத்துக்கு ஷூட்டிங் என்று போய் ரெண்டு நாளானதால் வீடு பூட்டி இருந்தது. இருக்கட்டும், அடுத்த வாரம் ஊர் சுற்றும்போது வரலாம். திரும்பி வர மின்சார ரயிலுக்காகக் காத்திருந்தபோது ஞாயிறு என்பதாலோ என்னமோ கூட்டமே இல்லை. அரை மணி நேரம் நின்ற பிறகு ரயில் வந்து அலுப்போடு நின்றது. எனக்கு முன்னால் நின்ற கம்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பயணி, விலாசினி. அவசரமாக ட்ரெயினில் ஏறினேன். கை…




Read more »

ராமோஜியம் – விரைவில் வெளிவரும் என் அடுத்த நாவலில் இருந்து சில பகுதிகள்

By |

”தேக்லோ, லோக்கல் பாஷை தெரியாது சரிவர. தொழில்லே பம்பாய் மாதிரி வாய்ப்பு அதிகம் இல்லாட்டாலும் இங்கேயும் போட்டா போட்டி, வாடகைக்கு இடம் கிடைச்சாலும் கழுதை வளர்க்கறான்னு தெரிஞ்சா காலி பண்ணச் சொல்றாங்க.. இந்த வீட்டுலே என்னமோ கழுதை வந்தா யோகம் வரும்னு ஆரூடம் இருக்காம்.. அதான் ஆறு மாசத்துக்கு மட்டும் கழுதை, குதிரை எல்லாம் வீட்டு வாசல்லே கட்டி வச்சுக்க வீட்டு ஓனர் அப்புக்குட்டி அனுமதி கொடுத்திருக்காராம்.. அவர் போகச் சொன்னா, வேறே வீடு பார்க்கற கஷ்டம்…




Read more »