Archive For மே 20, 2020

வர இருக்கும் என் அடுத்த புதினம் – ராமோஜியம் – சுவர்ணதுர்க்கம் 1698 -ராமோஜி ஆங்கரேயும் விட்டோபா கோலியும்

By |

முதலில் விட்டோபா நூலேணியில் கால் வைத்து கீழே கடலில் மிதந்து கொண்டிருந்த படகில் லாகவமாக வந்து சேர்ந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று வலது கையைத் தூக்கித் தலைக்கு மேல்காட்டினார். அடுத்து ராமோஜி பக்கம் நூலேணி கடியார ஊசல் போல் அசைந்து வந்தது. அதைத் தொட்டுப் பிடிப்பதற்குள் கை பற்றும் எல்லையைக் கடந்து திரும்பி விட்டது ஏணி. “ஏய் நல்ல பிள்ளை இல்லே நீ.. வா வா “ என்று ராமோஜி அதை அழைக்க அடுத்த முறை…




Read more »

ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம் – என் அடுத்த புதினம் ராமோஜியம்

By |

எலி பிடித்ததோடு தொடங்கி, பத்து கடல் கொள்ளைக்காரக் கப்பல்களை அடுத்தடுத்து வென்ற கோலியில்லா கோலியிவன் (செம்படவ இனத்தில் பிறக்காத சிறந்த மீனவன் இவன்), கனனோஜி நண்பன் இவன் என்று ராமோஜியின் பராக்கிரமம் சொல்வதாக அந்தப் பாடல் நீளும். வார்த்தைகள் இன்றி தாளம் மட்டும் கொட்டி சொற்கட்டு உதிர்த்து அலைகள் அதிர முடியும். தனனான தன்னான தானா தனனான தனனான தானா அந்தத் தத்தகார மெட்டை முணுமுணுத்தபடி கப்பல் மேல்தளத்தில் மெல்ல உலவினான் ராமோஜி ஆங்கரே. பலமான ஒரு…




Read more »

ராமோஜி ஆங்கரே வருடம் 1698 – ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு பகுதி

By |

“ராமோஜிக்கு அடுத்து?” கனோஜி ஆங்கரேயின் கேள்வி புரியவே நேரம் எடுத்தது ராமோஜிக்கு. ”துணைப் பெயர் பத்மநாபராவ்ஜி என்று கேட்க சாதாரணமாக இருக்கு” என்றார் கனோஜி. குறை காண்பதாக இல்லை அது. ”ஆங்கர்வாடி என்னும் புராதன செம்படவ கிராமத்துப் பெயரில் இருந்து, ஆங்கரே என்ற துணைப்பெயரை, எனக்கு கடல் கற்பித்த கோலி இனத்துக்கு நான் செய்யும் மரியாதையாக வைத்துக் கொண்டேன்” என்றார் அவர். “நானும் ஆங்கரே ஆகட்டுமா?” கனோஜி புன்சிரிப்போடு தலையசைக்க, அடுத்த நிமிஷம் ராமோஜி ஆங்கரே ஆனான்…




Read more »

ராமோஜி ஆங்கரே 1698 அத்தியாயத்திலிருந்து : புதினம் ராமோஜியம் (வெளிவர இருக்கிறது)

By |

ராமோஜியை தஞ்சாவூரிலோ, டபோலிலோ, சுவர்ணதுர்க்கத்திலோ யாரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. முன்பெல்லாம் எலிப்பொறி ராமோஜி என்று கூப்பிடுவார்கள். அப்புறம் அவனை ராமோஜி ஆங்கரே என்று அழைப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. அது ராமோஜி கடற்படையில் சேர்ந்த பிறகு. சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் புதல்வர் ராஜாராம் போன்ஸ்லே நாடாளும் இந்தக் காலத்தில் மராட்டி கடற்படை சகல வலிமையோடும் முன்னேறத் தொடங்கியுள்ளது. அவரைத் தெரியாதவர்கள் கூட அபூர்வமாக அங்கங்கே இருக்கலாம். ஆனால் மராட்டி கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரேயைத் தெரியாதவர்கள் இந்துஸ்தானத்தில்…




Read more »

ராமோஜி ஆங்கரே – சுவர்ணதுர்க்கம் 1698 : ராமோஜியம் நாவலில் இருந்து

By |

15.ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம் – பகுதி 1 கடல் அமைதியாக இருந்தது. பிற்பகல் நேரக் கடல் இது. வேளைக்கொரு குணம் இதற்கு உண்டு. மகிழ்ச்சியோ, துக்கமோ கொண்டிருக்கும்போது இது ராமோஜியோடு பேசும். அவனை அதிகாரம் செய்யும். உற்ற தோழனாக, செவி மடலைச் சிலிர்க்க வைக்கும் உப்புக் காற்றோடு ரகசியம் சொல்லும். கடல் கோபித்திருந்தால் ஓவென்று இரைந்து யாரை என்றில்லாமல் வைது திட்டும். அல்லது அழும். உறங்கப் போகும் நேரத்தில் கடல் தனக்குத்தானே தாலாட்டுப் பாடிக் கொள்வதையும்…




Read more »

ராமோஜியம் – தோபிகாட் ஒரு காலை 1946

By |

காம்பவுண்டுக்கு வெளியே கழுதை சாஜு நின்று கொண்டிருந்தார். எம்விஎம் ஸ்டூடியோவில் உத்தியோகம் பார்க்கத் தொடங்கியிருந்தால் அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டில் எப்படி இருக்க முடியும்? அவரைத் திண்ணையில் இருத்தினேன். விலாசினி எதிர் வீட்டில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு சிறிய டம்ளர்களில் சாயாவோடு வந்தபோது இனிமையான மாலை என்று முகமன் கூற மனம் நச்சரித்தது. சொன்னேன். ”இன்னிக்கும் வீடு சுத்தம் பண்ண முடியலே. நாளைக்கு ரத்தி வந்து எல்லாம் செஞ்சுப்பா.. நீங்க அப்படியே விட்டுடுங்க.. என்ன…




Read more »