ராமோஜியம் நாவலில் உணவு

ராமோஜியம் நாவல் உணவைக் கொண்டாடுவது. நாவலில் இடம் பெற்ற உணவு வகைகளில் சில பட்டியலாக்கப்பட்டு இங்கே –

1) வெண்பொங்கல்

2) மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணெயில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய்

3)பால் பாயசம்

4) குளுகுளுவென்று மஞ்சள் பூத்த சிவப்பு நிறத்தில், நெய் மினுமினுத்து, வறுத்துக் கலந்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும் கண் முழித்துப் பார்க்க, அளவாக சர்க்கரை சேர்த்து அற்புதமாக கிண்டிச் சுடச்சுட பரிமாறிய ரவாகேசரி . தொடர்ந்து பஜ்ஜி தினுசுகளோடு அவல் உப்புமா.

5)புனர்பாகமா நிறைய நீர் விட்டு கொதிக்க விட்டு சாதம் . மோர் கலந்து கரைச்சு. தொட்டுக்கொள்ள நார்த்தங்காயும், காய்ந்த எலுமிச்சைத் துண்டங்களும்

6)பாம்பே ஹல்வா ஹவுஸ் ஜிலேபி

7)வேப்பம்பூ தூவிய இனிப்பு மாங்காய்ப் பச்சடி

8) உசிலம்பட்டி பெரீஸ் பிஸ்கட்

9)டி எஸ் ஆர் உடனே இட்லி, உடனே உப்புமா

10)டிஎஸ் ஆர் வற்றல் குழம்பு கரைசல், புளியோதரை கரைசல் பிசைந்து சாதம்

11)பாக்கி ரொட்டி உதிர்த்துப் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் கலந்து கடாயில் உப்புமா

12) கோதுமைக் கத்தரிக்காய் – வாங்கிபாத் செய்ய அரிசி இல்லாததால் கோதுமை வேகவைத்து கத்தரிக்காய் வதக்கிப் போட்டு ஒரு யுத்த கால உணவு

13)பன் பட்டர் ஜாம், மசாலா போட்டு சாயா மலாயோடு

14) சாதமும், கொட்டு ரசமும், கோதுமை வாங்கிபாத்தும், வாட்டிய மசாலா அப்பளமும், வீட்டுத் தோட்டத்தில் பறித்த வெண்டைக்காய் வதக்கலும்

15) மொறுமொறுவென்று எண்ணெய் மின்னும் அடையும் பீர்க்கங்காய்த் துவையலும் மதியத்துக்குச் செய்ததில் மீந்த முருங்கைக்காய் சாம்பாரும்

16) கும்மாயம்

17)ஜவ்வரிசி வடை (சாபுதானா வடை)

18) எலுமிச்சம்பழ சேவை, தேங்காய் சேவை, மிளகு சேவை, புளி சேவை, தயிர் சேவை என்று அட்டகாசமாக ராச்சாப்பாடு. தேங்காய்ப் பாலும் துண்டு மாங்காய் ஊறுகாயும், தக்காளி ரச வண்டலும் கூட்டணி

19)பெசரெட் தோசை

20)உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியும்

21)தேங்காய்ப் பத்தையும் வெல்லமும்

22)சேமியா உப்புமாவும், ரவாகேசரியும்

23)மல்லிகைப்பூ இட்லியும் சின்ன வெங்காய சாம்பாரும்

24)எலுமிச்சம்பழ சாதமும், புளிசாதமும், தயிர்சாதமும், ஜவ்வரிசி வடகமும்

25) மக்மல் பூரியும், குலோப்ஜாமுனும், உருளைக்கிழங்கு மசாலா சற்றே எலுமிச்சைச் சாறோடு கலந்து உள்ளே வைத்து, மொறுமொறுவென்று வார்த்த ரவா மசாலா தோசையும், பில்டர் காபியும்

26) சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும்

27)புடலங்காய்க் துவட்டல், தேங்காய்த் துவையல், கோதுமைச் சாதம் கொஞ்சம், அரிசிச் சாதம் கொஞ்சம், வீட்டுத் தோட்டக் காய்கறி அரிந்து போட்ட, அரைத்து விட்ட சாம்பார், தக்காளி ரசம், அரிசி அப்பளம், மாங்காய்த் தொக்கு, ஒரு குத்து கிடாரங்காய் ஊறுகாயும்,

28)இட்லி, மிளகாய்ப்பொடி எண்ணெய் முழுக்காட்டி, வேர்க்கடலை சட்னி,

29)தோசை, மிளகாய்ப் பொடி

30) மணக்க மணக்க தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சமைத்து பலா மூஸ் கறியும், அவியலும்

31) குழிப் பணியாரமும், இஞ்சித் துவையலும், புளிக்குழம்பும்

32)மதறாஸ் – தில்லி ரயில் பிரயாணம் – வேளாவேளைக்கு சாப்பாட்டு அட்டவணை

இன்று ராத்திரி எட்டு மணி – ஆளுக்கு நாலு மிளகாய்ப்பொடி இட்லி, தயிர் சாதம், கொத்தமல்லி தொக்கு, மைசூர்பாகு, பிளாஸ்க்கில் பசும்பால். பிளாஸ்கை அலம்பி வைக்க மறக்க வேண்டாம்

நாளைக் காலை ஏழரை மணி – ஆளுக்கு நாலு இட்லி, பூந்தி லட்டு, ரயில் காபி

நாளைப் பகல் ஒரு மணி– புளியஞ்சாதம், ஜவ்வரிசி வடாம், சப்பாத்தி, உருளைக் கிழங்கு பொடித்தது, மாவடு, தயிர்சாதம், குலோப் ஜாமுன்

நாளை சாயந்திரம் – பாதுஷா, மிக்சர், தேன்குழல், ரயில் காபி

நாளை ராத்திரி – பூரி, உருளை காரக்கறி, வாழைக்காய் வறுவல், தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய், ரயில் பால்

நாளை மறுநாள் காலை – அதிரசம், பிரட் ஜாம், ஜாங்கிரி, மிக்சர், ரயில் காபி

நாளை மறுநாள் பகல் – சப்பாத்தி, பூரி மசாலா, பிரட், ஜாம், ஜாங்கிரி

நாளை மறுநாள் சாயந்திரம் (ரயிலில் இருந்தால்) – மீந்த இனிப்பு, மீந்த காரம், ரயில் காபி. ஊர் போய்ச் சேர்ந்திருந்தால் பிளாட்பாரத்தில் யாசகர்களிடம் மிஞ்சியதைக் கொடுக்க வேண்டியது.

அப்புறம், நடுவாந்திர சைஸ் வெங்கல கூஜா நிறைய, பிரிட்டீஷ் இந்திய சர்க்கார் சார்பில் மெட்றாஸ் பட்டணம் முழுவதற்கும் நானும் என் இலாகாவும் வினியோகிக்கும் குளிர்ந்த குடிநீர்

33)ரயில்வே கேண்டின் இட்லி, சட்னி, பருப்பு வடை, உளுந்து வடை

34)பால் விட்டுப் பிசைந்து சத்துமாவு

35)ரயில் ப்ளாட்பாரத்தில் வடா பாவ் என்று உருளைக் கிழங்குக் கறி அடைத்த பன்

36)ரயில்வே சாப்பாடு – எவர்சில்வர் தட்டுகளில் சாதம், பருப்புக்கும் சாம்பாருக்கும் இடைப்பட்ட ஒன்று, பூரி, ஊறுகாய், தயிர், மோர் மிளகாய்; தட்டிலேயே குழித்து சாம்பாரும், கூட்டும் வைக்க இடம், ஓரமாக சப்பாத்தி, ரொட்டி மடித்து வைத்து

37)ரயில் ப்ளாட்பாரம் ஸ்டால் சீஸ் சாண்ட்விச், காப்பி

38) ஆலு பரட்டா-கூட தயிரும், கத்தரிக்காய் வதக்கல் கறியும், பம்பாய் பேடேகர் ஊறுகாயும்;
விஜிடபிள் புலாவ், தயிர் சாதம், பாஸந்தி

39) நிம்பு பிழிஞ்சு, கருகப்பிலை, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு ரவா உப்புமா. தொட்டுக்க சர்க்கரையும் மாங்கா ஊறுகாயும், மத்தியான சாம்பாரும்

40)ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, டிஆர் எஸ் குல்கந்து

41) மெத்தென்று ஊத்தப்பம். கூட புதினாத் துவையலும், மத்தியான புளிக்குழம்பும் தேங்காய் மிளகாய்ப்பொடியும் மணத்தக்காளி ஊறுகாயுமாக . மிளகாயைப் பொடியாக அரிந்து போட்டு, எலுமிச்சை பிழிந்து, தூள் பெருங்காயம் டப்பாவைக் காட்டி எடுத்து, கொத்தமல்லித் தழை தூவிய கெட்டி மோர்

42) தட்டு இட்லி, புதினா சட்னியும், ஒரு சிட்டிகை அஸ்கா தூவிய கார இட்லிப்பொடியும், காபியும்

43)சீரகச் சம்பா வடித்து சின்ன வெங்காயம் வேகவைத்துக் கலந்த, அரைத்து விட்ட சாம்பார், வாழைக்காய் காரக் கறி, புடலங்காய் அரையே அரைக்கால் காரக் கூட்டு, எலுமிச்சை ரசம், ஜவ்வரிசி வடகம், புதுசாக எண்ணெய் காய்ச்சி ஊற்றிய, நாள்பட ஊறிய கிடாரங்காய் ஊறுகாய், கெட்டித் தயிர்

44) ஜாங்கிரி, போளி, உளுந்து வடையும் சட்னியும், டீ

45)பதிர்பேணி, லட்டு, பால்

46)வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து துவாதசிக் காலையில் – முருங்கைக்கீரை சமைத்து சுடச்சுட வெண்டைக்காய் சாம்பாரோடும், புதுப்புளியும் பச்சை மிளகாயும் இத்தனூண்டு அதிகமாக, வெழுமூணாக ஓட்டி அரைத்த தேங்காய்த் துவையலோடும் அரிசி அப்பளத்தோடும், தேங்காய் சேர்க்காமல் வெறுமனே வேகவைத்த புடலங்காய்க் கறியோடும், எலுமிச்சை ரசத்தோடும் சீரகச் சம்பா பழைய அரிசிச் சாதம் வடித்து

47)ஒரு ஈடு சுடச்சுட உதிர்த்து எடுத்து, கொஞ்சம் போல், லவலேசம், ஒன்றோடு ஒன்று ஒட்ட, கை நீட்டி, சூடு பொறுக்காமல் சின்ன ஊசியாகக் குத்துவதை அனுபவித்தபடி, விரல் முனையால் தொட்டு, மெல்லத் தள்ளப் பிரிந்து, சற்றே நல்லெண்ணெய் வாசம் பூசி, ஆவி பறக்கப் பசுமையான வாழை இலையில் கிடக்கும் இட்லிகளோடு இன்னொரு ஞாயிறு. இன்னொரு காலை விருந்து

48)ஆகாரம் நிறைவடையும் நேரத்தில், நேற்றுப் பால் திரிந்து போனதைக் கொட்டாமல் எடுத்து வைத்து, சர்க்கரையும் நெய்யும் ஏலக்காய், முந்திரிப் பருப்பும் கலந்து திவ்யமாக கிண்டி வைத்த பால்கோவா ரெண்டு மேஜைக்கரண்டி இலையின் ஓரத்தில்

49) நெய்யப்பமும் உண்ணியப்பமும்

50)இட்டலி, கடப்பா

51)வாழைக்காய்ப் பொடி

52)புட்டு, கடலை

53)சுக்கும், மிளகும், வெல்லமும், ஏலப் பொடியும் சரியான விகிதத்தில் கலந்த பானகம்

54)போளி ஸ்டால் கார, இனிப்பு போளி

55)கமகமவென்று மணமும் காரமுமாக கோலா உருண்டை, தம் பிரியாணி, கடல்பாசி களி

56) காலைச் சாப்பாடாக பாதாம் பருப்பு, அரிசி ஏடு என்று போட்டுக் காய்ச்சிய பாயசம், தீயில் வதக்கிய குப்பூஸ் என்ற அராபிய ரொட்டி, தேனும் சர்க்கரையும் கலந்து வைத்த மாம்பழக்கூழ், கோதுமையும் ஜீனியும் பசுநெய்யும் இட்டுக் கிண்டிய அரேபியா ஹல்வா

57)அரிசிச் சாதமும், மிளகு ரசமும், அவித்த கோழி முட்டையும்

58)குழைய வடித்த அன்னமும், எளிதாக சீரணமாகும் உணவு – உலர் திராட்சையும் பாதாம் பருப்புத் தூவலும் தேனும் கலந்து பிடித்த சிறு உருண்டைகளும், மராட்டி சாம்பார் என்று உலகை எல்லாம் மயக்கும் காரமான பருப்புச் சாறும்

59)கோழி அல்வா – கோழிக்கோடு பட்டணத்திலிருந்து வருவது. கோதுமை அல்வா கிண்டும்போது கோழிச்சாறு கலந்து செய்யப்படும் இனிப்பு

60)அரிசி வேகவைத்து வெல்லம் கலந்துச் செய்த மோதகங்கள்

61)நைவேத்தியமான மிளகுப் பொங்கலும் தோசையும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன