Archive For மே 3, 2020
வெள்ளி ராத்திரி எட்டரைக்கு எழும்பூரில் போட்மெயில் ஏற ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிப் போனோம். கேளப்பனின் நண்பர் மாதவன் அவர் கூப்பிட்டனுப்ப வந்திருந்தார். கொச்சி அருகே லந்தன் பத்தேரி தீவுவாசியாம். ”அங்கே எப்பவும் தண்ணிக்கு நடுவே இருந்துட்டு, இங்கே கோடையிலே தண்ணீர் இல்லாம, செப்டம்பர்லே ஒரே கொட்டாக மழை கொட்டித் தீர்க்க பார்த்துக்கிட்டிருக்கேன்” என்றார். அவர் சொல்லும்போதே சட்டச்சட சட்டச்சட என்று இடி இடித்து, மழை பொழிய ஆரம்பித்தது. ராத்திரி எட்டரைக்குத்தானே போட்மெயில்? சாப்பிட்டே போயிடலாம் என்று ரவா…
”தம்பி ஒரு உதவி செய்யணும்” என்றார் காளிங்க ரத்தினம். சொல்லுங்க சார். ”திருக்கருகாவூர் நீங்க போகச் சொல்ல, இந்தக் காணிக்கையையும் கருக்காத்த நாயகி அம்மா உண்டியல்லே சேர்த்துடுங்க..” சட்டைப் பையில் ஒரு பழைய பர்ஸில் இருந்து நூறு ரூபாய் இரண்டை எடுத்துக் கொடுத்தார்.இரண்டாக மடித்தே யுகக் கணக்காக சட்டையில் இருந்திருக்க வேண்டும் அந்த நோட்டுகள். ”அவசியம் சார், போட்டுட்டு வந்து.. வந்து எப்படி உங்ககிட்டே செஞ்சாச்சுன்னு சொல்றது?” ”நீங்க புவிப் பொண்ணு கிட்டே சொல்லி விடுங்க.. போதும்…..
நான் காளிக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து, ரத்னா எங்கே என்று பார்வையால் தேடினேன். இந்தப் பக்கம் தெலக்ஸ் புவனாவும் அந்தப் பக்கம் சி.டி.சந்திரகாந்தமும் கையை விரித்துக் காட்டிக்கொண்டிருக்க, ஏக காலத்தில் அவர்களுக்கு ரத்னா கைரேகை பார்த்துப் பலன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கைரேகை பார்க்கத் தெரியும் என்று எனக்கே அப்போதுதான் தெரியும். இந்த சி.டி.சந்திரகாந்தம் தான் தசாபதியில் தெலக்ஸ்க்கு நிகரான பிரபலம் அடைந்தவள். மூன்று அழகிகள் ஒரே இடத்தில் இருந்து சிரிக்க, சண்டை ஏதும் அதுவரை வரவில்லை…
வெள்ளிக்கிழமை சாயந்திரம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்தேன். காப்பி குடித்து விட்டு நானும் ரத்னாவும் புறப்பட்டோம். பார்க் ஸ்டேஷன் வரை ட்ராமில் போய், அங்கிருந்து எலக்ட்ரிக் ரயிலில் மாம்பலம் போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனில் இருந்து நாராயணசெட்டி தெருவுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் போக விருப்பப்பட்டாள் ரத்னா. மூன்று ரூபாய் வாடகை. என்றைக்காவது ஒரு- நாள், போகட்டும், ரத்னா ஆசைப் படுகிறாள். நாங்கள் தெலக்ஸ் புவனாவின் ‘சுந்தரி’ மாளிகையில் நுழைந்தபோது மாலை ஆறு மணி. கூர்க்கா மரியாதையாக சல்யூட் வைத்து உள்ளே…
சாயந்திரம் நாலு மணிக்கு அடுத்த மாதத்தில் இருந்து புதுசாகப் பென்ஷன் தரவேண்டிய ரிடையர்ட் ஊழியர்களின் பைல்கள் பதினேழு வந்து சேர்ந்தன. கையெழுத்துப் போட்டு அவற்றை வாங்கி மேஜையில் வைத்தபோது எல்லா பைலும் அங்கே உட்கார இடம் இல்லை என்று தெரிந்தது. வேறே பெரிய அகலமான மேஜை வேண்டியிருக்கும் என்று பந்துலு சாரிடம் அறிவிக்கப் போனேன். அவர் தேவலோகத்தில் இருப்பவராக, உற்சாகமாக டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தபடி போனில் சொன்னது – “ராமோஜிக்கு நூறு வயசு. வந்திருக்கார்….