இரா.முருகன் படைப்பு உலகம் – நற்றுணை கலந்துரையாடல்

கடந்த ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 அன்று கிட்டத்தட்ட முழுநாள் கருத்தரங்கமாக என் படைப்புகள் நண்பர்களால் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன.

கருத்தரங்கில் பேசிய, கேட்ட அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,

அருமை நண்பர் ஜெயமோகனின் நண்பர் குழாத்தில் பட்ட இலக்கிய ஆர்வலர்களான இளையோர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடாத்தி, கருத்தரங்கக் காணொளியை இணையத்தில் ஒளிபரப்பி, எந்நேரமும் காண இணையத்தில் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் ஆசான் ஜெயமோகனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஜெயமோகன் அவர்களின் இணையத் தளத்தில் இந்த நிகழ்வு தொடர்பான காணொளி அனைத்தும் வலையேற்றி வைத்திருப்பதற்கு சிறப்பு நன்றி. காணொளி தொழில்நுட்பம் சிறக்கச் செய்த ஷ்ருதி இலக்கியம் நண்பருக்கும் நன்றி பல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன