Archive For The “இது புதுசு” Category

பெரு நாவல் ‘மிளகு’ – Paraman or his instance travels through the time-space continuum to 1600 AD for one last time

By |

An excerpt from my forthcoming novel MILAGU புது இடம் கொஞ்சமாவது பழகினால் அல்லாமல் இயல்பாக இருக்க முடியாது என்பதால் பரமனைத் தவிர மற்றவர்கள் அறை அறையாகப் புகுந்து புறப்பட்டு, இருட்டு வானத்தில் அடர்த்தியாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து வியந்து கொண்டு குரலைச் சற்றே உயர்த்தி இது சகஜமான சூழ்நிலை என்று அவரவர்க்கு அவரவரே கற்பித்து அதுவும் இதுவும் பேசியபடி இருக்க நிலா சகல சௌந்தர்யத்தோடும் வானத்தில் புறப்பட்டது. பௌர்ணமியா இன்னிக்கு என்று பகவதிக்குட்டி கேட்டாள்….




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – A frugal candlelight dinner and a leisurely walk at a silent night

By |

Excerpt from my forthcoming (next week, perhaps) novel MILAGU எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது. பரமன் சொன்னார் மெல்லத் தாங்குகோல் ஊன்றி நடந்தபடி. திலீப் ராவ்ஜியின் தோளில் கைவைத்து அணைத்து நின்றார் ஒரு வினாடி. நான் இங்கே வந்திருக்கேன் என்று முணுமுணுத்தார். தெஜாவூ-ன்னு சொல்றது இதுதான் என்று திலீப் ராவ்ஜிக்குக் கூடுதல் தகவலாக மிகுந்த பிரயாசையோடு சொன்னார்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Encountering the ants’ army at dusk on a forest road

By |

An excerpt from my forthcoming novel MILAGU படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது. ஸ்ராங், எல்லோரும் ஒரே பக்கம் உட்காராதீர்கள் பிரிந்து உட்காருங்கள் என்று சத்தமாக மலையாளத்திலும், கன்னடத்திலும், கொங்கணியிலும் சொன்னான். ஏன் அப்படி என்றாள் தெரிசா. Load Balancing என்று சுருக்கமாகச் சொன்னாள் கல்பா. சரிதான் என்றாள் பகவதி. அறிவியலார் குழுக்குறி போல இருக்கு என்று திலீப் ராவ்ஜி கல்பாவைக் கேட்டார். அப்படித்தான்னு வச்சுக்குங்களேன்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்

By |

வெளிவர இருக்கும் ‘மிளகு’ பெரு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி   போதே கார் உள்ளே பின் சீட்டில் இருந்து பரமன் குரல் பெரியதாக்கி மஞ்சுநாத் மஞ்சுநாத் என் குழந்தே மஞ்சுநாத் என்று அங்கே இல்லாத மஞ்சுநாத்தைக் கூப்பிட்டார். முன்னால் இருக்கையில் இருந்த திலீப் ராவ்ஜி பின்னால் திரும்பிப் பார்த்து அப்பா என்ன பண்றது உடம்புக்கு என்று கேட்டார். ஒண்ணும் இல்லேடா திலீப். நான் இங்கே இருக்கேனா அங்கே இருக்கேனான்னு தெரியலே. அவர் பலமாக முணுமுணுத்தார்….




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Journey to Gerusoppa in search of the past

By |

An excerpt from my forthcoming novel MILAGU ஹொன்னாவரில் இருந்து பிற்பகல் நாலு மணிக்குக் கிளம்பியாகி விட்டது. காடும் மலையுமாகக் குறுகத் தரித்த பாதை. சட்டென்று முகம் காட்டிய சிறு அருவியைத் தொட்டு நனைந்து போகிறது அது. வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் செங்குத்தாகத் திரும்பி உடனே பாறையை எதிர்கொண்டு அடுத்த உடனடி திருப்பத்தை நிகழ்த்தி காரின் சக்கரங்களுக்குக் கடினமான வேலை தரும் பாதை. எதிரில் வரும் வாகனத்தைப் பிரித்தறிய ஒட்டாமல் சதா பெய்யும் சன்னமான…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – அனந்தம் அக்ஞாதம் அவர்ணனீயம் – Multiverse et al

By |

An excerpt from my novel MILAGU அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம் ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம் அதின்கலெங்காந்து ஓரிடத்திருந்நு நோக்குன்ன மர்தயன் கதயெந்தறிஞ்சு   (நாளப்பாட்டு நாராயண மேனோன்) ராத்திரியில் கேட்கும் கவிதை இது. நகர்ந்தபடி சொல்லப்பட்ட கவிதை. வேம்பநாட்டுக் காயலில் இரவு நேரத்தில் அந்த மோட்டார் படகு நிதானமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பிஷாரடி வைத்தியர் என்ற எழுபது வயதான பேராசிரியரும். அவருக்கு அடுத்ததற்கு அடுத்த தலைமுறை இளையோரான கல்பா, மருது, பகவதிக்குட்டி ஆகியோரும், திலீப் ராவ்ஜி,…




Read more »