Archive For The “இது புதுசு” Category
சொல்வனம் இணைய இலக்கிய இதழில் சிவிங்கி குறுநாவல் முழு வடிவில் பிரசுரமாகிறது தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன. விதிவிலக்கான உயிரினம் தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த பல ஆண்டுகள் தலைமறைவாயிருந்தன. பொது ஆண்டு 6000-வகை காலத்தில் அவை ஆரோக்கியமும், எதிர்ப்பட்டதை எல்லாம் தகர்க்கும் வெறியுமாக குகை…
சொல்வனம் இணைய இதழில் தொடங்கியிருக்கும் என் புது குறுநாவல் சிவிங்கியில் இருந்து முன்னுரை குறுநாவல் என்ற இலக்கிய வகை அருகி வருவதாகவும் எதெல்லாமோ குறுநாவலாக எழுந்து வருவதாகவும் தகைசால் சான்றோர் சதா அங்கலாய்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததே. இக்குறை சென்றொழிய சிவிங்கி என்ற பெயரிட்டு ஒரு நீண்ட கதை எழுதலானோம். வியாசம் போல வடிவெடுத்த இதனை ஆன்றோரும் சான்றோரும் இளையோரும் நீட்புனைகதையாக வாசித்து மனநிறைவடைவது திண்ணம். காவல் தெய்வ வழிபாடு தும்பிக்கை கணபதி திருப்பாதமே கதி. எண்ணமும் எழுத்தும்…
நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்யாயம் 34இல் இருந்து எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன? உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்) அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம்…
சுவாரசியமான இந்த உரையாடல் என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இடம் பெறுகிறது. இந்த வாரம் திண்ணை இணையப் பத்திரிகையில் முழுமையாக வெளியாகிறது’. ———————————————————————————————————————– போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய? எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை. நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே. எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது. வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான். எப்படி,…
கடந்த ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 அன்று கிட்டத்தட்ட முழுநாள் கருத்தரங்கமாக என் படைப்புகள் நண்பர்களால் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. கருத்தரங்கில் பேசிய, கேட்ட அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அருமை நண்பர் ஜெயமோகனின் நண்பர் குழாத்தில் பட்ட இலக்கிய ஆர்வலர்களான இளையோர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடாத்தி, கருத்தரங்கக் காணொளியை இணையத்தில் ஒளிபரப்பி, எந்நேரமும் காண இணையத்தில் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் ஆசான் ஜெயமோகனுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஜெயமோகன் அவர்களின்…
தினை அல்லது சஞ்சீவனி நாவலின் முக்கியமான அத்தியாயம் – அத்தியாயம் 33 இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது…