Archive For The “இது புதுசு” Category
மிளகு பெருநாவல் அத்தியாயம் 56-இல் இருந்து உளிகள் விடிந்ததிலிருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப…
என் குறுநாவல் தொகுப்பு இரா.முருகன் குறுநாவல்கள் – வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒன்பது குறுநாவல்களின் தொகுப்பு என் அன்புக்குரிய பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேற்று மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1990-களில் எழுதிய முதல் குறுநாவல்கள் விஷம், விஷ்ணுபுரம் தேர்தல் முதல் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் எழுதிய பசுவன் வரை இத்தொகுப்பில் உண்டு. முன்னுரை இங்கே =================================================================================================================== முன்னுரை இரா.முருகன் குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே…
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் சகல இன சஞ்சீவனி பெருமருந்து தயாரிக்க மூலிகை தேடியலைந்த கதையிலிருந்து இங்கே கொஞ்சம் போல. அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான். பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது…
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து அத்தியாயம் 36இல் இருந்து ========================================================================================== நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார். கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது. நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம்…
சொல்வனம் இலக்கிய இணைய 305ஆம் இதழில் இப்போது முழுமையாகப் பிரசுரமாகியுள்ள இரண்டாம் அத்தியாயம் – சிவிங்கி குறுநாவலில் இருந்து குகைச் சிறப்பு மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த, கூடுதல் வசிப்பிடத் தேவைக்காகக் கொஞ்சம்போல் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை இருப்பிடம். இரண்டு நூறுகோடி மனித இனத்தோரும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி…
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல்களின் வரிசையில் நான்காவதாகும். அதிலிருந்து ஒரு சிறு பகுதி இறக்கி விட்டுக் காத்திருந்த பஸ் கண்டக்டரைப் போகச் சொல்லிக் கையசைத்தபடி வலது புறமாகத் திரும்பி நடந்தான் அவன். வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது. சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி…