Archive For ஜனவரி 23, 2024

கணபதி ஹோமம் செய்ய போர்ட்டபிள் ஹோம குண்டத்தோடு வந்த சாஸ்திரிகள்

By |

கணபதி ஹோமம் செய்ய போர்ட்டபிள் ஹோம குண்டத்தோடு வந்த சாஸ்திரிகள்

வாழ்ந்து போதீரே, அரசூர் புதின வரிசையில் நான்காவது. மற்றவை – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், இந்தத் தொகுதி மற்ற என் நாவல்கள் போல் ஸீரோ பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது. நூலில் இருந்து- என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா? பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி…




Read more »

கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?

By |

கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள். பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா? மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும். ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான். பெயர் என்ன வைக்கப் போறே? கனவு நினைவில்…




Read more »

ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்

By |

ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது பெருநூல் வாழ்ந்து போதீரே. அதிலிருந்து – அத்தியாயம் ஐந்தில் ஒரு காட்சி தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன். அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ. நாற்பத்தேழாம் வருடம், முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த…




Read more »

குளிர்காலக் காலையில் லோதி கார்டனில் ஓடப் போன சோம்பேறி

By |

குளிர்காலக் காலையில் லோதி கார்டனில் ஓடப் போன சோம்பேறி

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. முழுத் தொகுதி (4 நூல்கள்) என் பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கின்றது, வாழ்ந்து போதார் அத்தியாயம் ஐந்தில் இருந்து ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு. ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான். குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல? இந்த போறாப்பல, வந்தாப்பல…




Read more »

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

By |

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

பொங்கல் நீள்விடுமுறை தொடங்கிய ஜனவரி 13, சனிக்கிழமை அன்று சென்னை புத்தகக் காட்சி 2024-இல் இரண்டு நூல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது. அவற்றில் ஒன்று இந்தோ ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு. சரளமான மொழிபெயர்ப்பு. //தேவதாரு மரங்களுக்கு மறுபுறத்தில் வசித்த திருமணமாகாத ஆங்கிலோ இந்திய மூதாட்டிகளிடம் பூனைகள் மட்டும் இருந்தன. திருமணமாகாத பெண்கள் என்றால் அவர்கள் ஏன் பூனைகளை மட்டும் வளர்க்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே புரியாத புதிர்தான் // மொழிபெயர்ப்பாளர்…




Read more »

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

By |

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

போகிக்கு முந்திய சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சியில் நான் பங்கு பெற்ற இன்னொரு நூல் வெளியீடு, நண்பர் தருணாதித்தனின் ’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கானது. மேநாள் ISRO விஞ்ஞானியான தருணாதித்தன் பன்னாட்டு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக அடுத்துப் பணிபுரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணன் என்று அசல் பெயர் – ஸ்ரீக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஸ்பேஸ் விடாமல் ஸ்ரீகிருஷ்ணன் என்று சேர்த்துப் பெயரைச் சொன்னதால் பிணரயி விஜயன் நிர்வகிக்கும் பூமியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைத்தேன். நற்றமிழராம். சொல்வனம் டிஜிட்டல் இலக்கிய…




Read more »