Archive For ஜனவரி 9, 2024
புரவி கலை இலக்கிய இதழில் இடம் பெற்ற என் பத்தி வாதவூரான் பரிகள் பகுதி இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள் 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி அகராதியும் அந்தக் காலத்தில் தேவையாக இருந்திருக்கும். வேறே ஒண்ணுமில்லை, கட்டுரை ஆசிரியர் சொல்ல உத்தேசித்தது இதுதான் – இந்தக்…
அரசூர் நாவல்களில் நான்காவது, வாழ்ந்து போதீரே = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து – கவலையே படாதே. நாளைக்கு சாயந்திரம் மடுங்காவிலே மாங்கா வாங்கி அரிஞ்சு எடுத்துண்டு வந்துடறேன். உப்பு, மொளகா, எண்ணெய் எல்லாம் கூடவே வந்துடும். யூ ஸ்டார்ட் தி மியூசிக் யங் லேடி. திலீப் அபயம் அளித்தான். இன்றைக்கு இந்த விஷயம் நினைவு வராமல் போய்விட்டது. வந்திருந்தால், அகல்யாவை வைத்து இந்த ஊறுகாய்க் கொள்முதலை முடித்திருக்கலாம். அட சே, நேசம் வைத்த…
நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அண்மையில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது. நாவலில் இருந்து வேலைக்கு நிற்கிற பெண் கதவைத் தட்டி விட்டு எட்டிப் பார்த்தாள். உதடு அசையாமல் ஜாக்கிரதையாக வாயை இழுத்து மூடிக் கொண்டு நந்தினி அவளை நோக்கினாள். உள்ளே ஓடி வந்து, தரையில் உருண்டிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டுத் திருமப வெளியே ஓடி வாசல் கதவைத் தட்டினாள் அந்தப் பெண்….
நேற்று மாலை ஸ்நேகா பதிப்பக ஸ்டாலில் தயங்கித் தயங்கி அரசூர் வம்சம் நாவல் பற்றி வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட இளைஞர்… ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் [ அருண் கொலட்கர் கவிதை ஈர்ப்பு மூலம் நண்பரான சொல்வனம் நம்பி.. வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட விழாவில் நண்பரான மீனாட்சிசுந்தரம் முரளி… என் ஒவ்வொரு நூலும்ஒரு பிரதி வாங்கி கையெழுத்துப் போட வைத்த மதராஸ் யூத் காயர் – ஐ ஒ பி சக அதிகாரி நண்பர் ஸ்ரீவத்ஸா…
இன்று (ஜனவரி 5, வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி – இரவு 7:30 வரை சென்னை புத்தகக் காட்சியில் நானிருப்பேன். என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் என்னைச் சந்திக்கலாம். ஒரு சொல், ஒரு புன்சிரிப்பு, நீங்கள் பேச நான் கேட்பது என்று ஒரு நிமிடத்தில் நேயம் பாராட்டிக் கடந்து போகலாம். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டுள்ள / மறுவெளியீடு செய்துள்ள என் படைப்புகள் = 1) மயில் மார்க் குடைகள் – சிறுகதைத் தொகுப்பு…
வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல்களில் நான்காவது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. நூலில் அத்தியாயம் 4இல் இருந்து மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது. வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின்…