Archive For ஏப்ரல் 12, 2020

நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ புதினத்தில் கும்பகோணம் அத்தியாயம் – நிறைவுப் பகுதி

By |

ரத்னா கண் கலங்கினாள். பீமா அசந்திருந்த ஒரு வினாடி சுமித்ரா கண்காட்ட அருகில் நின்ற என்னிடம் காதில் சொன்னாள் ரத்னா – “என் ராஜா.. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போயிடு.. உன்னையே நினைச்சிட்டிருப்பேன்”. “வந்துடறேண்டா. அழாம போ. அப்புறம் அந்த முகம்தான் சதா நினைவிலே எனக்கு வரும்”, என்றேன் கண் நிறைந்து நிற்க. அபத்தமாகத் தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளின் ஆத்மார்த்தம் வேறெதிலும் வராது. ரயிலோடு கிறுக்கன் போல் அவுட்டர் வரைக்கும் ஓடினேன். அன்றைக்கு் உடம்பு…




Read more »

மெக்கால் ஸ்மித்தும் தேவனும்

By |

ஒரு சேஞ்சுக்காக இன்றைக்கு ராமோஜியம் நாவல் எழுத வேண்டாம் என்று வைத்து, அமர்ர் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படித்துக் கொண்டிருக்கிறேன். எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளருமான அலக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய ‘The No, 1 Ladies Detetctive Agency’ போன்ற நூல்களைக் கொண்டாடி விட்டு தேவனின் துப்பறியும் சாம்பு படிக்கும்போது தேவனின் சிறப்பு புலப்படுகிறது. என்ன அற்புதமாகத் துப்பறியும் கதைகளை வளமான கற்பனையும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து எழுதியிருக்கிறார். அதுவும் எண்பது…




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

அருள் வாக்கு நிகழ்ச்சியில் மடாதிபதிகளோ, பாதிரியார்களோ, மௌல்விகளோ நல்ல சிந்தனை என்று ஐந்து நிமிடத்தில் சொல்கிறார்கள். போன வாரம் புதனன்று சைவ மடாதிபதிகள் அருள் வாக்கு சொல்லும்போது மாசில் வீணையும் மாலை மதியமும் என்று ரயில் வேகத்தில் சொல்லிப்போய் ஈசன் இணையடி நிழல் அமைதியும் அழகும் மிக்கது என்றார். அந்த வேகத்தில் பேசினால் அப்பர் சுவாமிகளுக்கே அவர் தேவாரம் புதியதாக புரியாததாகக் கேட்கும். என் போன்ற சாமானியனுக்கோ? அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதைத் தவிர வேறே என்ன மார்க்கம்…




Read more »

ராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து

By |

இந்த நடிகர்களை எல்லாம் விட சிறப்பாக செயல்படுகிற ஒரு அற்புதமான உத்தியோகஸ்தரை உங்கள் ரேடியோ ஸ்டேஷன் சம்பளத்துக்கு எடுத்திருக்கிறது என்பது பற்றி நீங்கள் நிஜமாகவே பெருமைப்படலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் பலவேசம் பிள்ளை அவர்கள் தான் அந்த அற்புதமான கலைஞர். காலையில் பெயர் அறிவிக்காமல் நிலைய வித்வான் என்று பொதுவாக அறிவித்தாலும் ஸ்ரீவிலி.பலவேசம் குரல் அல்லா அல்லா என்றோ கிருஷ்ணா கிருஷ்ணா என்றோ, சமயத்தில் அடுத்தடுத்துமோ உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். செய்தி விமர்சனத்தில் புதிதாகப் பதவி ஏற்ற பிரிட்டீஷ் பிரதமர்…




Read more »

கும்பகோணம் – 1935 ராமோஜியம் நாவலில் இருந்து

By |

an excerpt from the forthcoming novel ‘RAMOJIUM’ – Kumbakonam 1935 ”என்ன பேசினாலும் கோபப்பட வேணாம், பீமா நல்லவன், முதலில் கோபப்படுவான்.. அப்புறம் வழிக்கு வந்துவிடுவான். திட்டினாலும் பொறுமை காக்கவும்” என்று ஐந்து நிமிட உபதேசம் செய்து ஓடினாள் என் ரத்னா. இரண்டு நாள் கழித்து பிடாரிகுளம் தெருவில் சகலமானவர்களுக்கு டீ உபசாரம் நடத்திக் களைத்து நடந்து வருகிறபோது வாடகை சைக்கிளில் கூடவே வந்தான். வாங்களேன், காத்தாட போய்ட்டு வரலாம், பின்னாலே ஏறிக்குங்க என்றான்…




Read more »

ராமோஜியம் – ராமோஜி கடிதங்கள் 1945

By |

விருந்துகளைக் குறையுங்கள் என்று அடுத்த சிக்கனம் பேணுவோம் புத்திமதி. இந்த யுத்தம் வந்தது முதல்கொண்டு விருந்து என்ற ஒரு சமாசாரத்தையே மறந்து போயிருக்கிறோமே. குறைக்க இனி என்ன இருக்கிறது? எங்கள் மதறாஸ் பிரசிடெண்சி மாகாணத்தில் கெஸ்ட் கண்ட்ரோல் சட்டம் போட்டிருக்கிறார்கள் விருந்து என்று முப்பது பேருக்கு மேல் கூப்பிடக்கூடாது. அதில் விருந்து கொடுக்கிறவர்களும் அவர்கள் குடும்பமும் அடக்கம். முப்பது பேருக்கும் தலா ஒரு சின்ன பெரி பிஸ்கட், ஆளுக்கொரு வாழைப்பழம், ஒரு துண்டு கேக் இப்படிக்கூட ஒண்ணும்…




Read more »