Archive For ஏப்ரல் 29, 2020

ராமோஜியம் நாவல் – இன்னொரு 1942 அத்தியாயம் – மழைக்காலச் சென்னை

By |

“நல்ல வேளை அடிபடலே.. ஊமைக் காயம் தான்.. மயக்கமும் தெளிஞ்சாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு தூக்க மாத்திரை கொடுத்திருக்கேன் .. தூங்கினா விட்டுடுங்க.. காலையிலே ஜம்முனு எழுந்திருச்சிடுவார்“ டாக்டர் நாயர் பெரிய மீசையை நீவிக்கொண்டு ரத்னாவையும் தெலக்ஸையும் பார்த்துச் சொன்னார். நான் அவர் மீசை மறைத்ததை எக்கிக் கடந்து ரம்பையையும் மேனகையையும் பார்வையால் அள்ளிப் பருகினேன். ”சாரி சார், ஆறரை மணிக்கு உங்க வீட்டுக்கும் ஜோசியர் வீட்டுக்கும் போய்ட்டு வரலாம்னு கிளம்பினா, பெரிய கை ப்ரட்யூசர் ஒருத்தர்…




Read more »

தாமதமாக வந்தவள் – ராமோஜியம் நாவலில் இருந்து – மதறாஸ் 1942

By |

கடமை தவறாத ஏ ஆர் பி வார்டனாக விசில் ஊதிக்கொண்டு இரண்டு ரவுண்ட் அடிப்பதற்குள் நாலு தடவை ஜோசியர் தட்டுப்பட்டு, ஏதாவது தெரிஞ்சுதா என்று கேட்டார். ஜப்பான் விமானம் குண்டு போட வந்தால் கூட அவருக்கு நியூஸ் ஆகாது. அற்ப சங்கைக்குக்கூட ஒதுங்கமாட்டாமல் அவரை புலனடக்கி நிறுத்தி, எதிர்பார்க்க வைத்துக் கட்டிப் போட்டிருக்கிறாள் புவி. யார் வீட்டு ரேடியோவிலோ அரியக்குடி நேர்த்தியாக ’எல்லே இளங்கிளியே’ என்று பியாகடை ராகத்தில் திருப்பாவை விஸ்தாரமாகப் பாடும் சத்தம், அமைதியான ராத்திரியில்…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த நாவல் -சில பகுதிகள் – வருகை 1942

By |

”என்னாச்சு, அத்தங்கா மறந்துட்டாளா?” பந்துலு சம்சாரம் தூணைப் பார்த்துக் கேட்டாள். அங்கே பந்துலு இருந்தாலும் மௌனம் தான் பதிலாகக் வந்திருக்கும். எந்த நேரமும் வேட்டியை நனைக்கிற அவசரத்தோடு ராமண்ணா ஜோசியரும் என் வீட்டு வாசலுக்கு வந்து, ’எங்கே காணோம்? இன்னும் வரல்லியே’ என்று கூப்பாடு போட்டார். நான் என்ன, வந்த தெலக்ஸை பறிமுதல் செய்து வீட்டில் பதுக்கிவிட்டா வரல்லே என்கிறேன்? ராத்திரி ஏழரைக்கு டெல்லியில் செய்தி அறிக்கை படிக்கிற சத்தம் எல்லா வீட்டு ரேடியோக்களிலும் இருந்து கொர்ர்…




Read more »

புதினம் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் – 1942 செப்டம்பர் சென்னை -விருந்து வரக் காத்திருந்து..

By |

சாயந்திரம் நாலு மணிக்கு கடை கட்டி வைத்துக் கிளம்ப ஆயத்தமாக முகம் கழுவி வந்தபோது பந்துலு சார் என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் காத்துக் கொண்டிருந்தார். “சார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்று சமாதானமாகச் சொல்ல, அவர் அமைதியாகக் கூறிய பதில் – “சாரி ராமோஜி, இன்னிலேயிருந்து ஏ ஆர் பி நாலு மணிக்கு வீட்டுக்குப் போக ஸ்பெஷல் பெர்மிஷன் ரத்தாயிடுத்து.. எப்பவும் போல அஞ்சு, அஞ்சரை, ஆறு, ஏழுக்கு போய்க்கலாம் … நான் ரோமாண்டி துரை மீட்டிங்க்…




Read more »

ராமோஜியம் – அடுத்து வரவிருக்கும் என் நாவலில் இருந்து – 1942 செப்டம்பர் மதறாஸ்

By |

விடிந்தால் செவ்வாய். என் வீடு பத்து நிமிஷத்துக்காவது பிரபலத்தின் வருகையால் பெயர் பெறப்போகிற தினம். நானே எதிர்பாராத விதமாக சத்யநாராயண பூஜையை நாளை மறுநாள் புதனில் இருந்து ஒருநாள் முன்னதாக செவ்வாய்க்கு மாற்றி வைத்தாள் ரத்னா. சுபாங்கி அம்மாள். விலாசினி ஆகிய நிபுணர்கள் ஆலோசித்து, செவ்வாயும் சிலாக்கியம் என்று சொன்னார்களாம். ராமண்ணா ஜோசியரும் ஒரு ரூபாய் காணிக்கை வாங்கிக்கொண்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று சோழி உருட்டிக் கணக்குப் போட்டுச் சொன்னாராம். தெலக்ஸ் புவனாவுக்கு ஆஸ்தான ஜோசியராக…




Read more »

நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ நாவல் – 1942 மழைக் கால சென்னை – சில பகுதிகள்

By |

”உங்களுக்கு பந்துலு சார் தான் தெரியும்.. எனக்கு அவரோட ஒய்ஃபையே தெரியும்.. அந்த பூலோக சுந்தரி, பந்துலு சாரோட அத்தங்கா, மசக்கை வந்த கர்ப்பிணிப் பொண்ணு மாதிரி மாகாணி ஊறுகாய் வேணும்னு பந்துலு சார் வீட்டம்மா கிட்டே ஆசைப்பட, இவங்க என்னை வண்டிச் சத்தம் கொடுத்து கூட்டிக்கிட்டு முந்தாநாள் கொத்தவால் சாவடியிலே காய் வாங்க போனாங்க.. நான் தான் செலக்ட் பண்ணி பேரம் பேசி வாங்கிக் கொடுத்தேனாக்கும்..” அவள் மாடப்புரையிலிருந்து ஒரு சிமிழை எடுத்து சிட்டிகை ஆபீசர்ஸ்…




Read more »