Archive For மே 30, 2020

ராமோஜியம் – 1707-ஆம் வருடம் – எலிப்பொறி சத்திரத்து மானியங்கள் – காரைக்கால் புவனி ஏற்படுத்தியவை

By |

கண்களில் நீர் திரையிட்டிருக்க, பேஷ்காரிடம் கேட்டான் ராம்ஜி – தாசிப்பெண் எங்கே போனாள்? பேஷ்கார் தலை குனிந்து இருந்தார். பின் தயங்கித் தயங்கிச் சொன்னார்- “யாரோ அவள் மேல் குறளி வேலை ஏவி அல்லது செய்வினை செய்து, உடம்பெல்லாம் கொப்பளம் எழுந்து கடலில் விழுந்து இறந்து போனது இந்த நாளுக்கு சரியாக இரண்டு வருடம் முன்பு. அவள் கணக்குகளை சரிபார்க்க ராவ்ஜி வருவார் என்று இங்கே மாதம் மூன்று நாள் நீங்கலாக தினம் வந்து காத்திருந்தாள் பிரபோ”….




Read more »

நாவல் ராமோஜியம் – ராமோஜி ஆங்கரே காரைக்கால் எலிப்பொறி சத்திரத்தில் தங்கிய ராத்திரி – வருடம் 1708

By |

”உங்களுக்கு உலுப்பை மானியம் தரவேண்டும் என்று நியதி உள்ளது. எல்லா பெரிய மனுஷர்களுக்கும் அப்படித்தான். சமூகம் கட்டளையிட்டால் உங்கள் காரியஸ்தர் வசம் ஒப்படைத்துவிடுவேன்”, என்றார் பேஷ்கார் அறை வாசலில் நின்று. ராமோஜிக்கு அது என்ன மாதிரி விஷயம் என புரியவில்லை. ”சத்திரத்துக்கு வரும் பெரிய மனுஷர்களும் யாத்திரை கோஷ்டியும் இங்கே தங்கியிருக்கும் மாணவர்களுக்காக சமைக்கப்படும் உணவையே உண்ணலாம். அல்லது அரிசி, புளி, உப்பு, எண்ணெய் என்று எல்லாம் உலுப்பை மானியமாகப் பெற்று அவர்களே சமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு…




Read more »

என் அடுத்த புதினம் ‘ராமோஜியம்’ – ராமோஜி ஆங்கரே காரைக்கால் சத்திரத்தில் – ஆண்டு 1708

By |

”மகாராஜா சமூகம் இந்த எளியோனை எலிப்பொறி ராமோஜி ராவை எப்படி பொறி வைத்துப் பிடித்தது?” ”இது எலி இல்லை, சிங்கமாச்சே. பிறந்த இடத்துக்குத் திரும்பி வரும் சிங்கராஜனுக்கு எங்களின் எளிய மரியாதை இது. ஏற்றுக் கொள்ளும்” என்றார் அரசர் சாஹூஜி போன்ஸ்லே. ராமோஜி ஸ்வர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்ட போதே இந்தப் பயணம் பற்றிய முழுத் தகவலும் வந்தாகி விட்டது என்றார் மகராஜா. அந்த நேரத்தில் யாத்திரை பற்றித் தெரிந்தவர்கள் கனோஜி ஆங்கரேயும், ராமோஜியும், விட்டோபாவும் தான். விட்டோபாவா…




Read more »

ராமோஜியம் நாவல் : ராமோஜி ஆங்கரே – மன்னர் சாஹுஜி போன்ஸ்லே சந்திப்பு 1708

By |

மகராஜ் எதுக்கு உடம்பை வருத்தி பல்லக்கோடு ஓடி வரணும்? நீங்க ஏறி வந்ததை விட கூடவே ஓடி வர்றது தான் அதிகம்.. உரிமையோடு கோபித்துக் கொண்டான் நாகேந்து. சரி, நீ வேணும்னா பல்லக்கு உள்ளே உட்காரு.. தூக்கிக்கிட்டு ஓடி வரேன் என்றான் ராமோஜி. அய்யோ அய்யோ என்று கன்னத்தில் போட்டு பாவம் விலக்கிக்கொண்டு நாகேந்து சொன்னான் – ”மகாராஜா, விளையாட்டுக்குக் கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. விட்டலன் கிருபையிலே நீங்க இன்னும் பல வருஷம் பல்லக்கிலேயும், குதிரை,…




Read more »

என் புது நாவல் ராமோஜியம் – காரைக்காலில் ராமோஜி ஆங்கரே – வருடம் 1708

By |

பல்லக்கோடு கூட நடந்து கொண்டிருந்த ராமோஜி பின்னால் திரும்பி ஒரு குவளை தண்ணீர் கேட்டான். குளிர்ந்த நீராக பல்லக்கின் முன்பகுதியில் மண்பானைக்கு மேல் ஈரமான கனத்த துணி கட்டி வெட்டிவேரும் ஏலப் பொடியும் சீரகப் பொடியும் கலந்து சற்றே பழுப்பு நிறத்தில் இருந்த தண்ணீரை ஓடி வந்து ஒரு சிப்பந்தி கொடுத்தான். தண்ணீரை நின்றும் நடந்தும் குடிக்கக் கூடாது என்று எந்தக் காலத்திலோ தஞ்சையில் திண்ணைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த சீலம் நினைவில் எப்போதும் இருப்பதால், அவன்…




Read more »

என் அடுத்த புதினம் ராமோஜியம் – ராமோஜி புனிதப்பயணம் போகும் 1708 – அத்தியாயத்திலிருந்து

By |

17.ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707 இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான். மனைவி…




Read more »