Archive For ஜூன் 2, 2020

ராமோஜியம் நாவலில் இருந்து – பிரஞ்சு கவர்னர் தியூப்ளே சினம் கொள்ளுதல் -தெருவெல்லாம் கழிவு கண்டு – வருடம் 1745

By |

விடிந்ததும் ஒரு குதிரை வீரன் ராமோஜி வீட்டு வாசலில் பரபரப்போடு குதிரை வண்டியை நிறுத்தி குதிரையைக் கனைத்துச் சத்தமிட வைத்தான். என்ன கூச்சல் என்று ராமோஜி பார்க்க, கவர்னரின் உத்தியோகஸ்தன் சொன்னான் – ”பண்டிதரே, உங்களை துரை உடனே கூட்டி வரச் சொன்னார். முரட்டாண்டிச் சாவடியில் தான் இருக்கிறார். வாரும், நேரம் தப்பினால் அவருக்கு கோபம் வரும்”. அவசர அவசரமாக ராமோஜியை வண்டியில் அடைத்துக்கொண்டு அவன் புறப்பட்டுப் போனான். கவிராயரிடன் சொல்லிக் கொள்ளாமலேயே புறப்பட்டாகி விட்டது. அத்தனை…




Read more »

நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன், அருணாசல கவிராயரின் ராமநாடக கீர்த்தனை கேட்ட புதுவை இரவு – வருடம் 1745

By |

”நல்லது, தெய்வானுக்ரஹம் இருந்தால் சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி ராமோஜி நடக்க ஆரம்பிக்க கவிராயர் அவனை நிறுத்தினார். ”வாருங்கள், நீங்கள் போகுமிடத்துக்கு உங்களைக் கொண்டு போய் விட்டுப் போகிறேன்”, கவிராயர் வண்டிக்குள் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். ”நீங்கள் வில்லியனூரில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்”, ராமோஜி வண்டியில் போனபடி.அவரிடம் விசாரித்தான். ”நான் இந்தப் பக்கமே இல்லை. தென்காசியில் வசித்து வருகிறேன். பிள்ளையாரிடம் நூலை வாசித்துக்காட்டி, இயன்றால் சில கீர்த்தனைகளைப் பாடிக்காட்டிப் போகலாம் என்று வந்தேன்”….




Read more »

நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் (ராமோஜி ராவ்) புதுவையில் அருணாசல கவிராயரை ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் சந்திப்பது – வருடம் 1745

By |

”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி. அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி. “அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்….




Read more »

நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்திக்கிறான் – புதுவை 1745

By |

ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார். ”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை. அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான். “புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில்…




Read more »

நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் (ராமோஜி ராவ்) குவர்னர் தியோப்ளெசியை சந்தித்து வருதல் – 1745-ம் வருடம்

By |

சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது. இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை…




Read more »

நாவல் ராமோஜியம் – துபாஷ் ராமோசி ராயன் 1745 புதுச்சேரி – சில குறிப்புகள்

By |

முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானால் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அந்த மனுஷனைப் பாவம் வாரம் முழுக்க, நாள் முழுக்க மதாம் தியூப்ளே துரைசானியம்மாள் கையில் —– வாகாகப் பற்றி நெறித்து ’ஆடுறா ஆடு, கிழட்டு குரங்கே ஆடு, தியூப்ளே…




Read more »