எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு ரெபரன்ஸுக்காக நிக்கொலாய் ஆஸ்ட்ரொவெஸ்கியின் ‘How the steel was tempered’ சோவியத் சோஷலிச யதார்த்த நாவல் பிரதி தேவைப்பட்டது. அமேசன் மற்ற இணையக் கடைகள் எல்லாம் கண்டிப்பாக டாலர், ரூபாய் விலை (250 ரூ) சொல்ல, இலவச பி.டி.எப் ஒன்று கிட்டியது – ஆச்சரியகரமாக, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி இணையத் தளத்தில் (அங்கே கட்சி இருப்பதே முதல் ஆச்சரியம்). தரவிறக்கி, கடைசி பக்கம் வரை வந்திருக்கிறதா என்று சரி பார்க்க, கடைசி…
Read more »
நீள் பட்டியல்களும், குறும் பட்டியல்களும் பட்டியலாளரின் போலியான வாசக அனுபவ விரிவைக் கேட்பவர்களுக்கு உணர்த்தவே தொடுக்கப் பட்டவை. பட்டியலில் இடம் பெறும் நூல்களின் ஆசிரியர்கள் முக்கியமில்லை. எண்ணங்களும் கற்பனையும் பெருவெளியில் மிதந்து கொண்டிருப்பவை. மனதை உயர்த்தி அவற்றைக் கைகொண்டு இன்னொரு எழுத்தாளர் இதே படைப்பை இதனினும் உன்னதமாக உருவாக்கியிருக்க முடியும். பட்டியல்கள் நிலையானவை அல்ல. தொடுக்கும்போதே மாறுவதே நல்ல பட்டியல். Catalogues are never the ultimate. They are always transient. இல்லாத எழுத்தாளர்களின் எழுதாத…
Read more »
அருண் கொலட்கர் ஆங்கிலம் மற்றும் மராட்டியில் கவிதை எழுதிய இருமொழிக் கவிஞர். அவருடைய அனைத்து ஆங்கிலக் கவிதைகளையும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா தொகுத்து Arun Kolatkar Collected Poems in English என்ற புத்தகமாக்கியிருக்கிறார். இங்கிலாந்து (நார்த் அம்பர்லேண்ட்) பதிப்பு இது. அருண் கொலட்கரின் இந்த மொத்தத் தொகுப்பைப் படிக்கும் போது அவருடைய கவிதைப் பெருவெளியும், இலக்கியத் தேடலும், கவிதையும் வாழ்க்கையும் பாதித்து வழி நடத்திப் போன அகப் பயணத்தின் சுவடுகளும் புலனாகின்றன….
Read more »
உங்களுக்கு அரசூர் வம்சம் நாவல்களின் மேஜிகல் ரியலிசம் பிடித்திருந்தால், விலாஸ் சாரங் எழுதிய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பான The Women in Cages கட்டாயம் பிடிக்கும். ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு வாசிப்பனுபவம் உண்டென்றால் விலாஸின் கதைகளில் அமிழ்ந்து அதே வாசக அனுபவம் காண்பீர்கள். ரோமன் போலன்ஸ்கியின் தி ரெபல்ஷன் திரைப்படத்தை ரசித்தவர்கள், இந்திய இலக்கியத்திலும் மரபார்ந்த நாட்டிய வகைகளிலும் மிக அபூர்வமாகக் காணக் கிடைக்கும் பீபஸ்த ரசம் என்ற அருவறுப்பு ஒரு படைப்பாக்கக் கூறு என்று கருதுகிறவர்கள்…
Read more »
வாசகசாலை நடத்திய சுஜாதா தினக் கூட்டத்தில் நான் சொல்ல முற்பட்டது சரியாகப் போய்ச் சேரவில்லை என்று தெரிகிறது. என் உரையின் சாரம் 1) வாசிப்பது போல பாடுவது, பாடுவது போல் வாசிப்பது என்று ஒரு படைப்பாக்க வடிவத்தின் தனித் தன்மைகளை மற்றொன்றில் பொருத்திப் பார்ப்பது மரபிசையில் வெற்றி பெறலாம். கவிதை போல் கதை எழுத முற்படாதீர்கள் (கணையாழியின் கடைசிப் பக்கம் பத்தியில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு தேர் குறித்து சுஜாதா எழுதியது) 2)ஜம்ப் கட் உத்தியை…
Read more »
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தொகுப்பைப் பலர் பல விதமாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கணையாழியில் கட்டுரையாக வந்தபோது உட்புகுந்து புத்தகத்திலும் (முதல் தொகுப்பில்) ஏறிய அச்சுப் பிழைகளாக நினைவு நிலைத்திருக்கிறது. பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே என்ற சிவவாக்கியர் பாடல் வரியை சுஜாதா ஒரு தடவை மேற்கோள் காட்ட அது பச்சை மாலும் ஈசலும் பரந்ததே சிவாயமே என்று அச்சில் வந்திருந்தது. ஈசனை ஈசல் ஆக்கிய அச்சு இயந்திரத்தின் திருவிளையாடலைப் பற்றி அடுத்த மாதம்…
Read more »