Archive For ஜூலை 27, 2016
மறையும் கதிர்கள் மஞ்சள் பூசிய நிலையும் கதவும் கடந்து இலைகள் உதிர்ந்த ஊர்வெளிக் கோவில் வாசலில் யட்சி கண்டோர் மரித்தோர் கலந்தோர் கணக்கெதற்கு? As twilight paints a golden tinge at the facade of the dilapidated temple the yakshi steps out One more to behold, lust and die Do I care? அந்தியில் உறங்கும் நகர் எங்கும் கனவுகளில் கொண்டாட்டம். நானும் உண்டோ? கதவு கதவாகத் தட்டிப்…
ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார். மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க,…
தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…
கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில். கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ,…
மிளகு என்ற ‘செயல் தலைப்பு’ (working title) சூட்டி அடுத்த நாவலுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி குட்டநாடு, வயநாடு, கொங்கண் கடலோர நிலப்பரப்பில் நிலவிய, வர்த்தகச் சூழலில் சொல்லப்படும் கதையாக இது இருக்கும் தமிழ் உரைநடை பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இந்நாள் வரை போய்க் கொண்டிருக்கும் சுவடுகளை அடியொற்றிச் செல்லும் இந்த நாவலின் கதையாடல். விஸ்வரூபம் நாவலில் இரண்டு அத்தியாயங்களில் ஸ்காட்லாந்து செய்திப் பத்திரிகை ரிபோர்டிங் மொழிநடையில் கதை நகரும். அது போல்…
அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி. வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான். நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுக்கி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம், அங்கே ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் தலைமை வகிக்கும்…