Archive For செப்டம்பர் 13, 2016
ஔரங்கசீப் நாடகத்தின் நோக்கம் ஔரங்கசீப்பை அற்புதமான குணநலன்கள் கொண்ட, நீதிக்கும் நேர்மைக்கும் உருவகமாக நின்ற கதாநாயகனாகச் சித்தரிப்பது இல்லை. மத சகிப்புத்தன்மையில் அக்பர் ஒரு முனையில் என்றால், அவருடைய கொள்ளுப் பேரரான அவுரங்கசீப் முற்றிலும் எதிர்முனையில் இருந்தவர். இந்துக்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டி இருந்த ஜெசியா வரியை அக்பர் விலக்கினார். ஜெஸியா வரியைத் திரும்ப விதித்தவர் ஔரங்கசீப். அந்த வரிப் பணம் சமூக நலனுக்காகப் பயன்பட வேண்டும் என்று இன்னொரு சட்டம் கொண்டு வந்து அதுவும் போதாமல்,…
Fast enough to reach, slow enough to preach Long ago, I was running around and across cemeteries. I was then a young and supposed to be upcoming techno banker, working for a bank at their New Delhi operations, as a back office executive. The said uncertainty about my future sprang up from my job description…
சங்கரன் காரைக் கிளப்பும் போதே கிண்டலும் கேலியுமாக காலேஜ் சூழ்நிலை காருக்குள் அடர்த்தியாகக் கவிந்து விட்டது. தெரிசா பச்சைக் குழந்தை போல சத்தம் போட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். மந்தமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது கார். அதற்கு மேல் வேகம் கூட்ட சங்கரனுக்கு தைரியமில்லை. அமைச்சரக் காரியாலயத்தைக் கடந்து ஆளில்லாத குளிர்காலச் சாலையில் வண்டி போய்க் கொண்டிருந்த போது, மஃப்ளரும் கம்பளிக் கோட்டுமாக சைக்கிளில் வந்து குறுக்கே திரும்பிய வயோதிகனைச் சமாளிக்க கொஞ்சம் அவசரமாக ப்ரேக்…
(Photo credit Murugan Ashwin) நண்பரான ஓர் எழுத்தாளர் -பத்திரிகையாசிரியரைத் தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது அவருடைய புதல்வர். ‘அப்பா காலையிலே பத்து மணி வரை பேச மாட்டார். எழுதற நேரம். நீங்க கூப்பிட்டதா சொல்லிடறேன். திருப்பி அழைப்பார்’ இது நல்ல ஒரு வழக்கம். எழுத்தை ஒரு யோகமாக, தவமாக மதித்து முழு ஈடுபாட்டோடு செயலாற்றுகிறவர்களை வணங்குகிறேன். எனக்கு எழுதும் போது எல்லாப் பேச்சும், சத்தமும், சங்கீதமும் வேண்டும். நாலு பத்தி லேப்டாப்பில் எழுதியதும் ட்விட்டரில் ஐந்து நிமிடம்…
வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பது இரா.முருகன் சகித்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கைதான். வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே. சங்கரனுக்கு மெல்லிய முணுமுணுப்பாக சினிமாப் பாட்டு எல்லாம் கூடி வந்தது. தமிழ்ச் சங்கத்தில் போன வாரம் திரை கட்டிப் பார்த்த தமிழ்ப் படம். சிவாஜி கணேசனோடு ஒரு நேர்த்தியான ரெண்டாம் ஹீரோயினும் கூட உண்டு. முதல் கதாநாயகியின் ஹெட்மாஸ்டர் தோரணை அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. ரெண்டாம் ஹீரோயின் மகா அழகி. அவள் மட்டும்…