Archive For செப்டம்பர் 1, 2008
AJ Canagaratna Festschrift முன்னிலைப்படுத்தி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுத் தமிழியல் வெளியீடாக வந்திருக்கும் ‘AJ: The Rooted Cosmopolitan’ படித்துக் கொண்டிருக்கிறேன். என் அன்புக்குரிய நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் முயற்சியில் வெளியாகி இருக்கும் அஞ்சலித் தொகுப்பு – festschrift. அன்புச் சகோதரி மதி கந்தசாமி போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்று அறிய மகிழ்ச்சி. ஏ.ஜெ பற்றி தமிழவன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எஸ்.வி.ராஜதுரை, நுஃமான் போன்ற ஆய்வியல் அறிஞர்களின் கட்டுரைகளோடு, ஏ.ஜெ எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலைத் தொகுத்தவர்…
குங்குமம் பத்தி – அற்ப விஷயம்-9 ‘ஏதாச்சும் ப்ராப்ளம்னா உடனே கூப்பிடுங்க சார். என் செல்ஃபோன் நம்பரை நோட் பண்ணிக்குங்க’ இப்படிச் சொன்னவர் மத்திய அரசு தொலைபேசித் துறை ஊழியர். நீண்ட காலமாகப் பரிச்சயமானவர். தீபாவளி, பொங்கல், கையிருப்பு, பையிருப்பு குறைகிற நேரங்களில் அவருக்கு என் நினைவு வரும். டெலிபோன் இல்லாமல் ரிசீவரை மாத்திரம் பிய்த்து எடுத்துத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு சர்ரியலிச ஓவியத்திலிருந்து இறங்கி வந்த மாதிரி வீட்டுப் படியேறுவார். அறைக் கோடியில் சின்ன…
சமீபத்தில் எழுதியவை காலம் முடியவே கண்ணாடிப் பெட்டியில் ஞாலம் புகழ்ந்திடும் நந்தலைவர் – ஓலமிட்டே சுற்றும் ஒலிவாங்கி சூழத் திறந்ததே வெற்றிகளை வெல்வாய் விரைந்து காவியும் பச்சையும் காற்றில் அசைந்திட ஏவிய கைகள் இயங்கிடும் – பாவிகள் பாஸ்பரஸ் கொண்டு எரித்ததின் சொச்சமே ஈஸ்வர அல்லதெரெ நாம்.
குங்குமம் புதிய பத்தி – அற்ப விஷயம் ‘தொட்டால் பூ மலரும்’. கோவளம் கடற்கரை ஓரமாக ஓர் அழகான மாலைப் பொழுதில் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே வருவார். எதிர்த் திசையிலிருந்து சரோஜாதேவி மெல்ல நடந்தபடி ‘தொடாமல் நான் மலர்வேன்’ என்று எசப்பாட்டு பாடுவது அதே நிதானத்தோடு இருக்கும். அந்த நிதானத்துக்கு ஒரு அழகு உண்டு. ஒரு கம்பீரம் உண்டு. ஒவ்வொரு அடி முடிவிலும் ஒலிக்கும் கை தட்டும் சத்தம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்க…
குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி “சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது? பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார்….
ஆகஸ்ட் 19, 2008 செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு எழுதியது எப்படி வந்திருக்கு? தாடியும் தீட்சண்யமான விழிகளுமாக எனக்கு முன்னால் நின்று கேட்கிறார். நிறையச் சொல்ல வேணும். சம்பிரதாயமான வார்த்தைகளோ புகழ்தலோ இகழ்தலோ இவரைக் கொஞ்சமும் பாதிக்காது என்று தெரியும். மனம் திறந்து பேச ஒரு சொல்லைத் தேட வேண்டியிருக்கிறது. பின்னால் விம்மல் ஒலி. மூத்த சகோதரி வயதில் அந்த நகைச்சுவை நடிகை அழுதபடி இவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறார். சொல்ல இதுக்கு மேல்…