Archive For The “இது புதுசு” Category

சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

By |

சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் – சிறு பகுதி ——————————————————————————————————————————————— அக்கா, தங்கை ஜோடியா பேரழகா, அதி சுந்தர ரூபவதிகளா இருக்கறதை அங்கே எங்க குட்டநாட்டுலே நிறையக் கண்டிருக்கேன்.  அதுலே சிலது, அம்மா இன்னும் அழகாயிண்டே போவா. பொண்ணுக்கு  பொது பொதுன்னு அம்மாக் களை அத்தைக் களை வந்துடும் சீக்கிரமே. உடம்பும் வண்ணம் வச்சுடும்.  இங்கே சௌந்தர்யம் வர்த்திக்கறதே தவிர இறங்குமுகமே இல்லை. இத்தனைக்கும் அமிர்தவல்லி சீக்குக்காரி.   அமிர்தவல்லிக்கு…




Read more »

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

By |

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.   நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு…




Read more »

சிவன் கோவிலில் கொடியேற்றம், எழுநள்ளிப்பு பற்றி கூட்டெழுத்தில் எழுதிய லிகிதம்

By |

சிவன் கோவிலில் கொடியேற்றம், எழுநள்ளிப்பு பற்றி கூட்டெழுத்தில் எழுதிய லிகிதம்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (அர சூ ர்      நாவல் – 4) இவர் சிரிக்கறது அந்த சோடா குப்பி திறந்த மாதிரித் தான் இருக்கும். சண்டை போட்டா என்ன? மனுஷர் நயத்துக்கும் என்ன குறைச்சல். ஆம்படையான், பொண்டாட்டின்னா மனஸ்தாபமும், மனம் விட்டுப் பேசறதும் சகஜமாச்சே. இல்லாமலா,  சரி இது எதுக்கு. கருத்தான் ராவுத்தர் கதை இருக்கு பாதியிலே விட்டுட்டேனே.   இவர் சிரிச்சபடிக்கு கருத்தான் ராவுத்தர் போட்ட லெட்டரைக் கொடுத்து என்னையும் படிக்கச்…




Read more »

பஞ்சாபி, இந்தி, காஷ்மீரி என்று எல்லா மொழியிலும் ப்ரியம் வைக்க ஜோடா-கலர்

By |

பஞ்சாபி, இந்தி, காஷ்மீரி என்று எல்லா மொழியிலும் ப்ரியம் வைக்க ஜோடா-கலர்

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தெட்டு                     (பகவதியின் நாட்குறிப்பில் இருந்து) 2 ஏப்ரல்  1901 –   பங்குனி 20 செவ்வாய்க்கிழமை   யாரோடயும் விரோதம் பாராட்டாமல்,  பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன்.   தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம,…




Read more »

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

By |

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் – அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.   சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?   பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.   இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு…




Read more »

டால்டாவோ வனஸ்பதியோ நெய்ப்பந்தமாக எரிந்து வழிகாட்ட ஷாலினிதாய் சுவர்க்கத்துக்குப் புறப்பட்டாள்

By |

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.   குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.   வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.   குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.   மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.   அம்மாவை…




Read more »