Archive For The “இது புதுசு” Category

பசும்புல் மணத்துக்கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது – ராத்திரி வண்டி – குறுநாவலில் இருந்து

By |

பசும்புல் மணத்துக்கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது – ராத்திரி வண்டி – குறுநாவலில் இருந்து

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 7   பசும்புல் மணத்துக் கொண்டு ஜட்கா வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாத கப்பி ரோட்டில் வெய்யில் காய்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடுகள் பாதையோரத்துக் குத்துச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. வண்டியோடு ஓடி வந்த நாய் ஒன்று அலுத்துப் போய்த் திரும்பி நடந்தபோது ஒப்புக்குக் குரைத்தது.   இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு நம்மேல் ஏன் இத்தனை கரிசனம் என்று ராமச்சந்திரனுக்குப் புரியவில்லை.   இங்கே உட்காராதே.. வரையாதே.. சரி…..




Read more »

ராசு உனக்கு திருக்குறள் தெரியுமா?தம்மில் இருந்து…ஏதோ ஒண்ணு போ

By |

ராசு உனக்கு திருக்குறள் தெரியுமா?தம்மில் இருந்து…ஏதோ ஒண்ணு போ

  ‘என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்… போகலாமா?’   ’எங்கே?’   ‘சரியாப் போச்சு. நீங்க போகச் சொன்னீங்களே.. மறந்தே போச்சு.. இப்பப் போனா மதியம் சாப்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடலாமா?’   ‘எத்தனை தடவை சாப்பிடறது? இப்பத்தானே சாப்பிட்டீங்க? அதுவும் மறந்து போச்சா?’   ‘சாரி.. சாரி.. இந்தப் புஸ்தகத்திலே ஒரேயடியா முழுகிப் போயிட்டேன்.. இது ஒண்ணுதான் எங்க அப்பா எனக்குன்னு விட்டுட்டுப் போன சொத்து.. இந்தப் பக்கத்துலே பாருங்க.. பேரு எழுதியிருக்கு.. இந்தப் படம் யாரு தெரியுமா?…




Read more »

ரயில் ஊதிக்கிட்டு கிடக்கட்டும்.. யாராவது கொடி காட்டுவாங்க:ராத்திரி வண்டி

By |

ரயில் ஊதிக்கிட்டு கிடக்கட்டும்.. யாராவது கொடி காட்டுவாங்க:ராத்திரி வண்டி

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 6   கரண்ட் போச்சா?.. மத்யான வெய்யில் நேரத்திலே பவர் கட் பண்ணிடறாங்க.. ஸ்டேஷன்லே இருந்தாலும் ஒண்ணும் தெரியாது. இப்படி வயறு முட்டச் சாப்பிட்டுச் சும்மா இருந்தா வியர்த்து வியர்த்துக் கொட்டறது எழவு.. இவன் மட்டும் எப்படி அலுங்காம உக்கார்ந்து புஸ்தகம் படிச்சுட்டு இருக்கான்? துரைக்கு வேர்க்கறதே கிடையாது பொல.. இந்த விஷயத்திலே ராசுப்பய இவனுக்கு நேர் எதிரே. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஏதோ மிருகம் படுத்துக் கிடக்கற மாதிரி நடுக்…




Read more »

எழுத்தாணியை ஒளித்து வைத்த பட்டீச்சுரத்துப் பகல் – ராத்திரி வண்டி குறுநாவலில் இருந்து

By |

எழுத்தாணியை ஒளித்து வைத்த பட்டீச்சுரத்துப் பகல் – ராத்திரி வண்டி குறுநாவலில் இருந்து

‘உங்க சொந்த ஊர் எது மிஸ்டர் ராமச்சந்திரன்?’   ‘அது.. அது.. பட்டீசுரம்.. ஆறுமுகத்தா பிள்ளை தெரியுமா? அந்த ஊரு’   ‘அது யாரு?’   ’பண்ணையார்… உ.வே.சாமிநாதய்யரோட எழுத்தாணியை ஒளிச்சு வச்சுக்கிட்டார்’.   ‘கீதா பென்சிலை எங்கடா ஒளிச்சு வச்சே?’   நான் எடுக்கலே.. இரு கேட்டுச் சொல்றேன்..   ராப்பொழுது பட்டீசுரம். அங்கங்கே ஒளி மினுக்கப் பெரும்பாலும் இருட்டில் முழுகிப் போயிருக்கிறது. காவிரி தூரத்தில் சலசலத்து ஓடுகிற சத்தம்.. ராத்திரியில் அதிசயமாக நாரை ஒன்று…




Read more »

அந்தக் காலத்தில் ’மீரா’ பட வெளியீடு பற்றி இப்படித்தான் பரபரப்பு இருந்திருக்கும்

By |

அந்தக் காலத்தில் ’மீரா’ பட வெளியீடு பற்றி இப்படித்தான் பரபரப்பு இருந்திருக்கும்

நண்பர்களுக்காக திரு கமல் ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் காட்சியாக நேற்று ‘பொன்னியின் செல்வன்’ பார்க்க வாய்ப்பு கிடைத்தது.   குரசோவாவின் ’காகேமூஷா’ திரைப்படத்தை நினைவு படுத்தும் வெளிப்புற இரவு நிகழ்வாக செறிவான Mise-en-scène அடிப்படையில் தொடங்கி எழுந்து வருகிறது பொ.செ. திரையில் கால் இருட்டு என்றால் அரை இருட்டாக்கித் தோன்ற வைத்து, கூடவே, கிசுகிசுப்பு ஒலியையும் கூச்சலாகப் பெருக்கித் தரும் ஐமேக்ஸ் திரையரங்கு படத்துக்குக் கூடுதல் பரிமாணம் சேர்த்திருந்தது.   திரைப்படம் பற்றி எல்லோரும் எழுதி…




Read more »

வாழைக்காய் குழம்பும் வக்கத்த வீட்டுப் பொண்ணும் – குறுநாவல் ராத்திரி வண்டி

By |

வாழைக்காய் குழம்பும் வக்கத்த வீட்டுப் பொண்ணும் – குறுநாவல் ராத்திரி வண்டி

    ‘அம்மா …. தினம் கஞ்சி தானா? நல்லாவே இல்லேம்மா….’   ‘நாளைக்கு சோறு பொங்கலாம்… அரிசி வருது…’   ‘அம்மா…’   ‘என்னடா?’   ‘இந்த எடத்தை ஏன் காடி கானாங்கறாங்க?’   ‘அந்தக் காலத்துலே சாரட் வண்டி நிக்குமாண்டா இங்கே..’   ‘யாரு அதிலே போவாங்க?’   ‘பெரிய வீட்டுலே இருக்கறவங்க’   ‘நாமளும் பெரிய வீட்டுலே போய் இருந்தா என்னம்மா?’   ‘ஏண்டா இந்த எடத்துக்கு என்னடா? நம்ம நிலமைக்கு இதாவது…




Read more »