Archive For The “இது புதுசு” Category

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – குறுநாவல் பகுதி

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – குறுநாவல் பகுதி

  பின்னால் பலமாகக் கொட்டு சத்தம். டீச்சர் திரும்பிப் பார்த்தாள். சினிமா வண்டி நடுத் தெருவில் அடைத்தது போல் நின்றது. இனிமேல் முன்னால் வந்தால் மெழுகுவர்த்தி கம்பெனி சுவரில் தான் முட்ட வேண்டும்.   வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சின்னப் பையன் கையில் கலர் கலராக நோட்டீசுகளைப் பிடித்துக் கொண்டு முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கையசைத்தான்.   ‘என்ன எளவெடுத்த படமோ.. போய்த்தான் ஒரு நோட்டீசு வாங்கிட்டு வாயேன்..’   பாக்கியலட்சுமி மறுபடி சத்தம் போட்டது….




Read more »

நிக்கொலா பெனடிட்டி என்றொரு வில்லிசை அரசி

By |

நிக்கொலா பெனடிட்டி என்றொரு வில்லிசை அரசி

நிக்கோலா பெனடிட்டி எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு  ஆண்டோ ஆனார். ‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’.  ஆண்டோ வற்புறுத்தவே எடின்பரோ கோட்டை பக்கம் விளிம்பு நாடக விழாவில்…




Read more »

நோயுற்று மூத்து நுந்து கன்றாகி – திருக்கோத்தும்பி – ராத்திரி வண்டி குறுநாவல்

By |

  ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.   ‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’   ‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை…




Read more »

இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாக

By |

இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாக

ராத்திரி வண்டி                          இரா.முருகன்                  பகுதி – 8   ராமச்சந்திரன் கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவை இமை மூடும் போதும் இந்த உலகமே பிடிக்கு வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இடமும் காலமும் நடப்பும் பிரமையுமாக ஒரு பிரவாகத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக, மேல் கீழாகப் பயணம் போகிறான். முன்னால், இன்னும் முன்னால் போய், தொடங்கிய இடத்துக்கு வருகிறான்.   கண்ணைத் திறக்கும் போதெல்லாம் எதிரே உட்கார்ந்து பாட்டிலிலிருந்து கிளாஸில் நிறைக்கிற ஸ்டேஷன் மாஸ்டர்…




Read more »

யாருக்கோ வந்ததுன்னு நிக்கறீங்களே.. உங்க பஸ்தான்.. போயிடுச்சு சார்

By |

யாருக்கோ வந்ததுன்னு நிக்கறீங்களே.. உங்க பஸ்தான்.. போயிடுச்சு சார்

‘கணபதி, வீச்சுப் பொரட்டா வாங்கிட்டுப் போ’   வண்டிக்காரன் சொன்னான்.   ‘போறதுக்குள்ளே ஆறிடுமே அண்ணே’   ‘நீ சூடா இருக்கேயில்லே.. அது எப்படி ஆறும்?’   பஸ் ஸ்டாண்ட்.   ‘சார், நீங்க இருங்க.. ஸ்டேஷன் மாஸ்டர் ஐயா பணம் கொடுத்து விட்டிருக்காரு வண்டிச் சத்தத்துக்கு.. நீங்க எடுக்க வேணாம்… பழனியண்ணே.. இந்தாங்க…. சார், இறங்கிக்கலாம்.. நீங்க இறங்குங்க.. மூட்டையை நான் இறக்கறேன்.. இதிலே பூரா படமா இருக்கா சார்? கனமாக் கனக்குது. பழனியண்ணே.. நீங்க…




Read more »

உன் கையிலே கலை இருக்குடா ஹுசைன் மாதிரி, விவியன் சுந்தரம் மாதிரி, பூபேன் கக்கர் மாதிரி

By |

உன் கையிலே கலை இருக்குடா ஹுசைன் மாதிரி, விவியன் சுந்தரம் மாதிரி, பூபேன் கக்கர் மாதிரி

ராத்திரி வண்டி   குறுநாவல்        பகுதி 7 அ ————————————————————————- ‘இப்ப என்னன்னு சொல்லு விஷயத்தை…நான் அவசரமாப் போகணும்..’   ‘ஒண்ணுமில்லேய்யா, என் தம்பி வந்திருக்கான். நாளைக்கு முத்துப்பட்டியிலே பொண்ணு பார்க்கப் போகப் போறானாம்’   ‘மவராசனாப் போய்ட்டு வரட்டும்’   ‘நாமளும் கூட வரணுமாம்’   ‘நான் எதுக்குடி? அப்புறம் பொண்ணுக்கு என்னைப் பிடிச்சுப் போயிடுத்துன்னு வச்சுக்க… அவனுக்குக் கல்யாணம் ஆகணுமா, வேணாமா?’   ‘ஆமா.. உன் மூஞ்சிக்கு நான் ஒருத்தியே சாஸ்தி.. பழனியண்ணே நல்லாச் சொல்லுங்க…




Read more »