Archive For The “இது புதுசு” Category
என் புது நாவல் தினை பூர்வாங்கம், முதல் அத்தியாயம் தமிழில் முதல் இணைய இதழ் திண்ணையில் பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து வாராவாரம் நாவல் திண்ணையில் பிரசுரமாகும். வாசித்து இன்புறுவீர், கருத்துச் சொல்வீர் தினை – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று
புது நாவல் – தினை என் அடுத்த நாவல் ‘தினை’ வரும் வாரத்தில் இருந்து திண்ணை – முதல் தமிழ் இணையப் பத்திரிகையில் பிரசுரமாகிறது. சில குறிப்புகள் 1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது. நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது…
நண்பர் ஜெயமோகனின் இணைய தளத்தில் இன்று மின்பதிப்பிக்கப்பட்ட ‘மிளகு’ நாவல் மதிப்பீடு. நண்பர் ஷங்கர் பிரசாத் எழுதிய ‘மிளகு நாவல் வாசிப்பு’ . நன்றி ஜெயமோகன். நன்றி ஷங்கர் பிரசாத் //மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு…
சென்னை புத்தகக் காட்சி 2023 – Takeaway நடந்தேறிய சென்னை புத்தகக் கண்காட்சி 2023-ல் கிடைத்த அனுபவப் பாடங்கள் – 1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும். 2) 400 பக்கத்துக்கு மேல் புத்தகம் இருந்தால், பாகம் ஒன்று, இரண்டு எனப் பிரித்து வெளியிடுவது நன்று. நேற்று என் நண்பர் ஆங்கில எழுத்தாளினி சொன்னது – ‘மிளகு…
நண்பர் ஜெயமோகனின் வழிகாட்டுதற்படி இலக்கிய வீதியில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவாழ் நண்பர்களோடு அண்மையில் (ஜனவரி 21,2023 சனிக்கிழமை) ஒரு நேர்காணலில் பங்கு பெற்றேன். மிக நேர்த்தியாக க.நா.சு உரையாடல் அரங்கு என்ற அவர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நேர்காணல் பற்றி ஜெயமோகனின் இணையத் தளத்தில் அவரும், ஆஸ்டின் சௌந்தரும் எழுதியிருப்பது இங்கே விஷ்ணுபுரம் இலக்கியச் சந்திப்பு நண்பர் ஜெயமோகனுக்கு நன்றி. vishnupuramamerica.org – நண்பர்களுக்கும் நன்றி பல.
அன்பு நண்பர் ஜெயமோகனின் இணையதளத்தில் இன்று முதல் தகவலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது, ‘இரா.முருகன் இணையச் சந்திப்பு’. அமெரிக்காவாழ் ஜெமோ அன்பர்களின் இலக்கிய அமைப்பு (vishnupuramusa@gmail.com) நாளை (ஜனவரி 21 2023 சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருக்கும் ஸூம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இது. இலக்கிய அன்பர்களைக் கலந்து கொள்ளும்படி கோருகிறேன். நண்பர் ஜெயமோகனுக்கும் அவரது வழிகாட்டலோடு செயல்படும் விஷ்ணுபுரம் அமெரிக்கா இலக்கிய அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி. தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ! இரா.முருகன் இணையச் சந்திப்பு