Archive For The “இது புதுசு” Category

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து வரும் அஜயதியும் விஜயதியும்

By |

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து வரும் அஜயதியும் விஜயதியும்

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து புது நாவல் அத்தியாயம் இரண்டு மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த குடைவரை இருப்பிடம். இரண்டு மில்லியன் மனித இனமும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது….




Read more »

புது நாவல் என்றொரு புது நாவல் தொடங்கிய நாள் இது

By |

புது நாவல் என்றொரு புது நாவல் தொடங்கிய நாள் இது

இன்று ஒரு முக்கியமான தினம் என்பதால் புது நாவல் (பெயரும் அதுதான்!) எழுதத் தொடங்கி இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். தினை அல்லது சஞ்சீவனி என்ற என் முந்தைய ஃபாண்டஸி நாவலின் தொடர்ச்சியும் நீட்சியுமாக புது நாவல் அமையும். அவ்வப்போது இந்த இணையத் தளத்தில் ’ இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக’ புது நாவல் எந்தத் திசையில் எப்படி நடக்கிறது என்று சூசனை காட்ட அத்தியாயங்களிலிருந்து ஒன்றிரண்டு பக்கங்கள் பிரசுரமாகும். கிருஷ்ணார்ப்பணம் ======================================================================================================================= புது நாவல் அத்தியாயம் 1…




Read more »

from my novel RAMOJIUM – Arrival of Ramoji Angre 1770

By |

from my novel RAMOJIUM – Arrival of Ramoji Angre 1770

ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707 இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான். மனைவி…




Read more »

பெருநாவல் மிளகு – பிதார் ஜெயம்மாவின் மங்களூர் அடுக்ககம்

By |

பெருநாவல் மிளகு – பிதார் ஜெயம்மாவின் மங்களூர் அடுக்ககம்

அத்தியாயம் 51 இல் இருந்து சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி. “கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி. இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள். “தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு…




Read more »

ஏமப் பெருந்துயில் நீங்கிய ஆல்ட் சி பிரபஞ்சத்து பிரதி நீலன் வைத்தியர்

By |

ஏமப் பெருந்துயில்  நீங்கிய ஆல்ட் சி பிரபஞ்சத்து பிரதி நீலன் வைத்தியர்

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 28 இல் இருந்து பிரதி நீலன் வைத்தியர் இருக்கும் பேழையின் மேல்மூடி திறந்து நூறு தேள்க் கால்கள் உள்ளே நீட்டி பிரதி நீலன் சுவாசிக்கிறாரா என்று உறுதி செய்வதுபோல் அசைந்து பெருஞ் சத்தத்தோடு மூடி திரும்பக் கவிந்து ஒரு வினாடி அதிர்ந்து மேலே கூரையாக அமர்ந்தது. அந்த ஒலி கேட்ட பிரதி நீலன் இதெல்லாம் உணரப்படுவது தன்னால் தானா அல்லது வேறு யார்க்கோ அனுபவமாகிப் பார்வை மூலமும், வாடை, ஒலி…




Read more »

Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni

By |

Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni

from chapter 27 மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம். குயிலியின் நாசியில்…




Read more »