Archive For The “இது புதுசு” Category

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

By |

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

பொங்கல் நீள்விடுமுறை தொடங்கிய ஜனவரி 13, சனிக்கிழமை அன்று சென்னை புத்தகக் காட்சி 2024-இல் இரண்டு நூல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது. அவற்றில் ஒன்று இந்தோ ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு. சரளமான மொழிபெயர்ப்பு. //தேவதாரு மரங்களுக்கு மறுபுறத்தில் வசித்த திருமணமாகாத ஆங்கிலோ இந்திய மூதாட்டிகளிடம் பூனைகள் மட்டும் இருந்தன. திருமணமாகாத பெண்கள் என்றால் அவர்கள் ஏன் பூனைகளை மட்டும் வளர்க்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே புரியாத புதிர்தான் // மொழிபெயர்ப்பாளர்…




Read more »

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

By |

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

போகிக்கு முந்திய சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சியில் நான் பங்கு பெற்ற இன்னொரு நூல் வெளியீடு, நண்பர் தருணாதித்தனின் ’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கானது. மேநாள் ISRO விஞ்ஞானியான தருணாதித்தன் பன்னாட்டு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக அடுத்துப் பணிபுரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணன் என்று அசல் பெயர் – ஸ்ரீக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஸ்பேஸ் விடாமல் ஸ்ரீகிருஷ்ணன் என்று சேர்த்துப் பெயரைச் சொன்னதால் பிணரயி விஜயன் நிர்வகிக்கும் பூமியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைத்தேன். நற்றமிழராம். சொல்வனம் டிஜிட்டல் இலக்கிய…




Read more »

இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம். ராசியான பெயர் அது ..

By |

இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம்.  ராசியான பெயர் அது ..

அரசூர் நாவல்கள் நான்கு. நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள். பொண்ணு. பரவாயில்லையா? குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது….




Read more »

நேரு போல் ஷெர்வானி தரித்து விடிகாலை துயிலுணர்த்தும் தூத்வாலா -பால்காரர்

By |

நேரு போல் ஷெர்வானி தரித்து விடிகாலை துயிலுணர்த்தும் தூத்வாலா -பால்காரர்

அரசூர் நாவல் வரிசையில் நான்காம் புதினம் வாழ்ந்து போதீரே. இதன் அச்சுப்பதிப்பு -மறுபதிப்பு- அண்மையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. அரசூர் நான்கு நாவல் வரிசையில் மற்ற மூன்றோடு நிறைய வேறுபடும் நூல் இது. புத்தகத்தில் இருந்து – அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்? பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள்….




Read more »

விருச்சிக மாதப் புலரியில் திலீபன் வந்திறங்கிய அம்பலப்புழையும் பகவதி இருந்த அம்பலப்புழையும் வேறுவேறு

By |

விருச்சிக மாதப் புலரியில் திலீபன் வந்திறங்கிய அம்பலப்புழையும் பகவதி இருந்த அம்பலப்புழையும் வேறுவேறு

அரசூர் நாவல்கள் நான்கில் நாலாவது வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப்பதிப்பாக அண்மையில் வெளியீடு கண்டது. அதிலிருந்து- விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது. உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும்….




Read more »

திலீப் காத்திருக்காமல் தேடி வந்த மலையாள பூமி உத்தியோகம்

By |

திலீப் காத்திருக்காமல் தேடி வந்த மலையாள பூமி உத்தியோகம்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. நாவலில் இருந்து பெரியப்பா எங்கே, டூர்லேயா? மரியாதைக்கு விசாரித்தான். அவர் எங்கே இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரியம்மா கரிசனத்திலாவது நாலு காசு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. பெரியப்பா ராத்திரி முழுக்க அவர் புத்தகத்துக்கு ப்ரூஃப் பாத்துட்டு இப்போ தூங்கிண்டிருக்கார். என்ன புத்தகம் பெரியம்மா? ஆர்வத்தோடு கேட்டான். குடும்பத்திலேயே ஒரே ஒரு எழுத்தாளர் காணாமல் போய்…




Read more »