Archive For The “இது புதுசு” Category

எமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து

By |

”விஷயம் தெரியுமா? மந்தவெளி கேஷவ்ஜி மெஸ்ஸில் நோ அளவுச் சாப்பாடு. பருப்புப்பொடி, நெய், வடு மாங்காய், ஸ்வீட்டுனு ராச்சாப்பாடாம்”. பக்கத்து அறை நாராயணசாமி புதன்கிழமை சாயந்திரம் ரூமுக்கு போகிற போது சொன்னார். “எப்படி சார், மந்தவெளி பாகிஸ்தான்லே இருக்கா?” நான் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். கோவிந்தன் மேன்ஷனின் கதவுகளுக்குப் பூட்டு, தாழ்ப்பாள் இருக்கிறதோ என்னமோ, காது உண்டு. எமர்ஜென்சி காலத்தில் அரசாங்கச் சின்னத்தில் மூணு சிங்கத்துக்கும் அசோக சக்கரத்துக்கும் நகைச்சுவை அந்நியமானது. பின்னால் மறைந்து…




Read more »

நாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975

By |

காந்தி ஜெயந்தி வியாழக்கிழமை வந்தது. வார நடுவில் வரும் விடுமுறையை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தோம். கூட ஒரு நாள், இருநாள், வெள்ளி, சனிக்கிழமை லீவு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் பஸ்ஸை, ரயிலைப் பிடித்துச் சொந்த ஊரைப் பார்க்கக் கிளம்பிப் போனார்கள். இல்லாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. சுகம் அனுபவிக்க, விடுமுறையைக் கொண்டாட மெட்ராஸில் நிறைய இருந்தது. எமெர்ஜென்சி காலம் என்பதெல்லாம் ரெண்டாம் பட்சம். கோவிந்தன் மேன்ஷன் புதன்கிழமை சாயந்திரமே களைகட்டி விட்டது. உஸ்மான் ரோடு ஹோட்டல் ராச்சாப்பாடு வேண்டாம்…




Read more »

1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி காலத்து ஆயுர்வேதமும் ரக்த தோஷாந்தக் ஔடதமும்

By |

நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார். ”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”, ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ….




Read more »

1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

By |

1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் ————————————— கடற்கரைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம். அங்கே நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளை மேயலாம் என்பது எனக்கு முக்கிய காரணம். பழைய புத்தகத்தில் ருசி கண்ட பூனைகளுக்கு புத்தம்புது எடிஷன் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அதுவும் நடைபாதையில் கிடைக்கிற பழைய தீபாவளி மலர்கள், பொன்னியின் செல்வன், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை பத்திரிகையிலிருந்து வாராவாரம் கிழித்து எடுத்து…




Read more »

1975 நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – எமர்ஜென்சி கால மேன்ஷன் வாழ்க்கை

By |

“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’ என் அறைக்குத் தெற்கே அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்துக்கொண்டு தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார். காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் இரவு ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி அவர் நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத…




Read more »

எமர்ஜென்சி நேர பத்திரிகைத் தணிக்கையில் – வீடு தோறும் மறம் வளர்ப்போம்

By |

Excerpts from my novel 1975 என் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல் குருநாதன் சொன்னார் – “ஊர்லே இருந்து, எங்க வட்டாரத்திலே பெரும்பாலும். பசங்க எல்லோருக்கும் பட்டணத்துலே சாதிக்கறது ஒரு பெரிய கனவு. பலரும் சினிமா பாட்டு எழுத, கதை வசனம் எழுத இப்படி சான்ஸ் தேடி வந்துடறாங்க. நடிக்கறேன்னு கூட சில பசங்க வந்து சேர்றது உண்டு. என் விலாசத்தை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு நேரே இங்கே தான் வருவானுங்க. நான் இப்படி என்னைத் தேடி…




Read more »