Archive For The “இது புதுசு” Category
Excerpt from the famous Malayalam novel LanthanBatheriyile Luthiniakal by N S Madhavan – translated into Tamil as Beerangi Paadalkal by Era Murukan காந்தி சரித்திரம் வேணுமா? இந்தா பிடியுங்க காந்தி சரித்திரம். சின்னத்தம்பி அண்ணாவி மெமோரியல் சவிட்டுநாடகக் குழுவின் காந்தி சரித்திரம், சவிட்டுநாடகம்.”. கள்ளுக்கடையில் பின்பகுதியில் இருந்து யாரோ பீங்கான் பாத்திரத்தில் அலுமினியக் கரண்டியால் தட்டியது கடை முழுக்க எதிரொலித்தது. சந்தியாகு காலடி எடுத்து வைத்து ஆடத் தொடங்கினார்:…
திமித்ரிகளின் உலகம் இது அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே வந்து விடும். நியூயார்க்கிலிருந்து திருப்பதியைக் கூப்பிடுவான் திமித்ரி, சாண்ட்விச் மென்றபடி ப்ராஜக்ட் விஷயம் பேச. சென்னையில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் திருப்பதி. திமித்ரியின் தினசரி வசை பொழிதல் பெரும்பாலும் இப்படித் தொடங்கும் – “இப்போ இங்கே ஊரோடு சாப்பிடற அருமையான பகல்…
என்.எஸ்.மாதவனின் புகழ் பெற்ற மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாகள்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ‘பீரங்கிப் பாடல்கள்’ (இரா.முருகன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கியது) நூலில் இருந்து – பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய…
என்.எஸ்.மாதவனின் மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ தமிழாக்கம் இரா.முருகன் ‘பீரங்கிப் பாடல்கள்’ நூலில் இருந்து ஒரு சிறு பகுதி ————————————————————————————- “கெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா”. பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வருகைப் பதிவின் போது ராகவன்மாஸ்டர் என் பெயரைக் கூப்பிட்டார். “ஆஜர்” என்று நான் சொன்னேன். “இப்படியே போனா என்ன ஆகும்” எரணாகுளத்திலே இருந்து திருச்சிவப்பேரூர் வரை இருக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களோட பெயர்கள் மாதிரி – எரணாகுளம் தெற்கு, எரணாகுளம்…
இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல் நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த…
என்.எஸ்.மாதவன் எழுதிய புகழ்பெற்ற மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – தமிழில் இரா.முருகன் மொழிபெயர்ப்பு ‘பீரங்கிப் பாடல்கள்’ – ஒரு சிறு பகுதி ———————————————————————————– எனக்கு ஞானஸ்நானம் நடந்த நாளில் அதிகாலையிலேயே எட்வின்சேட்டனும் அவருடைய வேலையாட்களும் பிரியாணி செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய கொப்பரையில், வாங்கி வைத்த நெய்யில் பாதியை ஊற்றிச் சூடாக்கி அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை அதில் போட்டு, எட்வின்சேட்டனின் சமையல் கோஷ்டியில் வந்த வேலாயுதன் வறுத்தார். எட்வின்சேட்டன் கண்ணை மூடியபடி கொப்பரையைச் சுற்றி,…