Archive For The “இது புதுசு” Category

ஓர்ம்மகளுடெ விருந்நு

By |

ஓர்ம்மகளுடெ விருந்நு காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து. ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் – இது வெறும்…




Read more »

நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்

By |

நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்

என் ‘ஏதோ ஒரு பக்கம்’ கிண்டில் மின்நூலில் இருந்து – எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு ஆண்டோ ஆனார். ‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’. ஆண்டோ வற்புறுத்தவே…




Read more »

எடின்பரோவில் சுற்றி வந்தபோது

By |

என் ‘எடின்பரோ குறிப்புகள்’ கிண்டில் மின்நூலில் இருந்து – எடின்பரோ – ஊர் சுற்றி வந்தபோது எடின்பரோ கோட்டைக்குத் தெற்கே நீண்டு வளைந்து உயரும் ராயல் மைல் தெருவில் பழைய பட்டணம் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்புப் பட்டணமாக விரிந்த சென்னை ஜார்ஜ் டவுண் போல காலம் உறைந்து நிற்கும் சுற்றுப்புறங்கள். மூதாதையரின் மூச்சுக் காற்றின் வாடை இன்னும் கூடத் தீர்க்கமாக புலனை ஊடுருவி, மனதின் திசைகளை உள்வளைத்து ஒரே முகமாகத் திருப்பும் வீதி இது. போதாக்குறைக்குத்…




Read more »

என் நூல்கள் – முன்னுரைகள்

By |

நாவல், சிறுகதை, குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள் அச்சுக்குப் போகும்போது பின்னட்டை வாசகங்களை எழுதுவது வரம். பா.ராகவன் இதைப் பற்றி அவருடைய முகநூல் காலக்கோட்டில் (டைம்லைனில்) எழுதியதைப் படித்தபோது புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் இதே போன்ற, கடினமான இன்னொரு பணி நினைவு வந்தது. என் முதல் புத்தகமான சிறுகதைத் தொகுப்பு ‘தேர்’, அசோகமித்திரன் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் பரவலான கவனத்தைப் பெற அந்த அற்புதமான முன்னுரையும் ஒரு காரணம். அதற்கு அடுத்த மெலிந்த சிறுகதைத் தொகுப்பு ‘ஆதம்பூர்க் காரர்கள்’…




Read more »

ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

By |

ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.

நான் பிறந்த தினத்தில், லந்தன்பத்தேரியின் கிழக்கிலும், மேற்கிலும் ஓடும் சிற்றாறுகளில் தெளிந்த நீர் ஓடியது. தீவுக்காரர்களின் பேச்சு வழக்கில் அதை ‘தண்ணி மாறிடுச்சு’ என்பார்கள். பெரியாறு அதன் நீர்ப் பெருக்கில் கலந்த உப்பைக் கடலுக்கே திருப்பி அனுப்பும்போது இது நடக்கும். தொடர்ந்து வெள்ளத்தில் பெரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். சாத்தானின் அம்புமுனை போன்ற வாலோடு திரண்டிமீன் கூட்டங்கள் முதலில் சிற்றாற்றிலிருந்து புறப்பட்டுப் போகும். மேற்கோள் குறிகள் போல் சுருண்டிருக்கும் இறால்கள் நீர்ப்பரப்பில் நீண்ட வசனம் எழுதிப் போகும். அயிரை…




Read more »

2011-இல் வெளியான ஒரு நேர்காணல்

By |

2011-இல் வெளியான ஒரு நேர்காணல்

இரா. முருகன் – நேர்காணல் எண்பதுகளின் தொடக்கத்தில் சிறுபத்திரிகை களில் நவீன கவிஞராக அறிமுகமான இரா. முருகன், பின்னர் சிறுகதையாசிரியராக- நாவலாசிரியராக- கட்டுரையாளராக இலக்கிய வடிவங்களின் அனைத்து நீட்சிகளை யும் தொட்டு நிற்கும் சம கால நவீனப் படைப்பாளி யாவார். “ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ இவரது முக்கியமான கவிதைத் தொகுதியாகும். இதுதவிர, “தேர்’, “ஆதம்பூர்க் காரர்கள்’, “சிலிக்கன் வாசல்’, “முதல் ஆட்டம்’, “ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்’, “மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’, “சைக்கிள் முனி’ போன்ற…




Read more »