Archive For The “இது புதுசு” Category
வளரும் நாவல் ‘மிளகு’ :1596 இரவு – சில காட்சிகள் —————————————————————— நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு…
1596-ஆம் ஆண்டில் ஒரு நாள் :வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து இன்னும் சில காட்சிகள் ——————————- இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபைரதேவிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித…
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள் பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் கூடைகளோடு அடுத்த பேரத்துக்காக…
வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள். எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய…
சக எழுத்தாளர்களின் பாராட்டு சந்தோஷத்தைத் தரும். வெவ்வேறு துறை சார்ந்த, முக்கியமாக கலைத்துறை சார்ந்த நண்பர்களின் நல்ல வார்த்தைகள் இன்னொரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று காலை வந்த ஒரு பாராட்டு – // Only recently I got to read arasur vamsam. Thoroughly enjoyed it, especially the lingo, the expressions in the dialogues and the small detailing. Thanks so much // நன்றி நண்பர் சஞ்சய்…
பரமன் என்ற பரமேஸ்வரன் 1960-இல் நாக்பூர் சிறு விமானத் தளத்தில் சொல்லாமல் விமானம் விட்டு இறங்கித் திரிந்தபோது நான்குவாயில் மண்டபம் வழியே 1595-ம் ஆண்டு உத்தர கன்னடப் பிரதேசத்தில் ஜெர்ஸோப்பா நகர் போய்ச் சேருகிறான். மிளகு ராணி காலம் அது. ——————————— கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது. இந்தக்…