Archive For The “இது புதுசு” Category

சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942) (ராமோஜியம் நாவலில் இருந்து)

By |

சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942)  (ராமோஜியம் நாவலில் இருந்து)

Madras Week Aug 22 2021 சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942) ) (ராமோஜியம் நாவலில் இருந்து) ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள…




Read more »

ஹொன்னாவர் நகரில் ஒரு பிற்பகல், ஒரு முன்னிரவு: மிளகு – நாவலில் இருந்து ஒரு துளி

By |

ஹொன்னாவர் நகரில் ஒரு பிற்பகல், ஒரு முன்னிரவு: மிளகு – நாவலில் இருந்து ஒரு துளி

From the novel being written by me – MILAGU நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு…




Read more »

லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

By |

லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”. முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா. ”நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும்…




Read more »

ஹொன்னாவர் பெருச்சாளிகளும், லிஸ்பன் மாநகரப் பெருச்சாளிகளும்

By |

மிளகு நாவலில் இருந்து சிருங்காரக் கனவில் மனம் லயிக்க இடுப்புக்குக் கீழ் அவசரமாக ஊர்ந்து படுக்கையில் இருந்து குதித்துக் கீக்கீக்கென்று சத்தமிட்டுப் போனது பெருச்சாளி. சந்தன மணமும் ஒதிகோலன் வாசனையுமில்லை. புழுத்த கழிவு தேங்கிய சாக்கடை ஓரம் குமட்டும் மேல்தோல் நனைய நகரும் பெருச்சாளி வாடை. அதன் சிறு கண்கள் அகஸ்டின்ஹோவின் கண்ணை நேரே பார்த்த பார்வை காமாந்தகாரா என்று இகழ்ந்தது. வாயைத் திறந்து வெளிப்பட்ட பற்கள் கடித்துக் கொல்லக் கூடியவையாகத் தெரிந்தன. நாலு பெருச்சாளிகள் சேர்ந்து…




Read more »

லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே

By |

லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே

மிளகு நாவலில் இருந்து ”சாப்பிட்டு நடக்க முடியலேடி துளுவச்சி, ஒரு பக்கமா கொண்டுபோய்த் தள்ளுது. அதான் சாரட்டு சவாரி, இல்லாட்டாலும் குதிரை ஆள் அம்பு எல்லாம் இந்த உடம்பிலே உசிர் இருக்கறவரை கூடவே வரும். மூச்சு நின்னா, நின்னா சென்னா இல்லேதான்”. சென்னபைரதேவி சிரித்தாள். லொளலோட்டே எல்லா லொளலோட்டே சென்னபைரதேவி பாட அப்பக்காவும் சேர்ந்து கொண்டாள். லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே சிநேகிதிகள் கைகளை உயர்த்திச் சேர்த்துத் தட்டி…




Read more »

அசுரவித்து- ஒரே இரவில் பற்றிப் படர்ந்து வெளி நிறைக்கும் மிளகுக்கொடி

By |

அசுரவித்து- ஒரே இரவில் பற்றிப் படர்ந்து வெளி நிறைக்கும் மிளகுக்கொடி

மிளகு நாவலில் இருந்து தெருவில் அந்த நேரத்திலும் கூட்டம். “எந்தினாணு அவிடெ திரக்கு?” என்று விசாரிக்க ”சாரதாம்ம வீட்டுலே ஏதோ மேஜிக்காம்” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் கேட்கப்பட்டவன். வீடு முழுக்க நல்ல மிளகு வாசனை. வாசலில் க்ரோட்டன்ஸ் வைத்திருக்கும் சிறு தோட்டத்தில் முழுக்க கொடிவிட்டுப் படர்ந்திருந்த மிளகும் அதே போல் நல்ல வாசனை பரத்திக் கொண்டிருந்தது.வாசலில் பிஷாரடி நின்றிருந்தார். ”சாவக்காட்டு வயசன் புளிச்ச காடியை அமிர்தம்னு குடிச்சுட்டு துப்பின இடம் இது. அந்த…




Read more »