Archive For The “இது புதுசு” Category

From MILAGU, my next novel – a poignant interaction with the Crown

By |

From MILAGU, my next novel – a poignant interaction with the Crown

வந்து விட்டேன் அம்மா. அந்தத் தெருவில் சாக்கடை மூடிகள் காணாமல் போனதால் நேற்று இரவு ஆறேழு வயதுச் சிறுமி ஒருத்தி சாக்கடைக்குள் விழுந்தாள். என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு? சென்னா பரபரப்பாகக் கேட்டாள். இன்று காலை அவள் இறந்து போனாள். அய்யய்யோ. ஆண்டவனே குயில்தோப்புத் தெருவின் சின்னக் குயில். நன்கு பாடுவாள். என் நல்ல சிறியபெண் சிநேகிதி அவள். போகட்டும். இப்போது மகாராணியிடம் ஒரு உள்ளூர் பிரச்சனையைச் சொல்லி விட்டேன். இதை உள்ளூராட்சிக்கு அனுப்பிக் கவனிக்க வைக்கலாம்….




Read more »

மிளகு பெருநாவல் பிரவாகத்தில் இருந்து – Thus schemes the gorgeous Rohini

By |

மிளகு பெருநாவல் பிரவாகத்தில் இருந்து – Thus schemes the gorgeous Rohini

யூத நண்பர்களிடம் கொடுத்து வைத்த தங்கத்தில் கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டு இந்துஸ்தானம் திரும்ப, நானே எதிர்பாராத விஷயமாக ராஜகுமாரர் நேமிநாதனின் நட்பு கிடைத்தது. லிஸ்பன் பணக்காரர்கள் போல் பணம் ஆனால் அவர்கள் வயசில் பாதி மட்டுமான இளமை. என்னை விடவும் ஐந்து வயது சின்னவன் நேமிநாதன். என்றால் என்ன? என்மீது காமம் மீதுர நான் வலையை விரிக்காமல் அவனே எடுத்து விரித்து தலைகுப்புற சந்தோஷமாக வீழ்ந்தான். ரோஜா அத்தரில் நீராடி வந்த முதல் ராத்திரி அது. ரோஜா…




Read more »

மிளகு பெரு நாவலில் இருந்து Amelie trapped in a lift as power tripped in London

By |

மிளகு பெரு நாவலில் இருந்து  Amelie  trapped in a lift as power tripped in London

இருட்டு அச்சமூட்டுவதாக என்னைச் சுற்றிச் சூழ்ந்து விழுங்க வருவதாக பிரமை. நான் ஓவென்று அழுதேன். லிப்ட் கதவுகளை தடதடவென்று அடித்தேன். இல்லை, யாருக்கும் கேட்காது. மின்சாரம் எப்போது வருமோ அப்போது தான் மற்றவர்கள் கவனத்துக்கு நான் வருவேன். அதுவரை? எப்போது அது நிகழலாம்? யாருக்குத் தெரியும்? மருதுவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் என்ன? நேரம் பார்த்தேன் என் மொபைலில். சாயந்திரம் ஆறரை மணி. பாளம் பாளமாக சூழும் இரவு எங்கோ நாயோ பூனையோ கழிந்த வாடையோடு…




Read more »

பெருநாவல் மிளகு – Ramblings of Rohini of Lisbon

By |

பெருநாவல் மிளகு – Ramblings of Rohini of Lisbon

நாதா, எடோ நேமிநாதா. இந்த அழைப்பு அவனை இன்னும் காமாந்தகாரனாகி என் முழு அடிமையுமாக்கி ரசவாதம் புரிகிறது. எஜமானி என்று என் பாதங்களை முத்தமிட்டு அவன் சிரசில் வைத்துக்கொள்ள நான் உபசாரம் எல்லாம் பெற்றுக்கொண்டபடி உபதேசம் நல்கினேன் இப்படி- பில்ஜி அரசர் திம்மையராஜு உன்னை விட ஐந்து வயது பெரியவன். என்னைப் போல். அவனை சந்திக்க என்ன கொண்டு போகப் போகிறாய்? அப்பாவியாக நான் நேமிநாதனின் விரல்களைச் சொடுக்கியபடி கேட்டேன். என்ன எடுத்துப் போவார்களாம்? பழம். இனிப்பு….




Read more »

மிளகு பெருநாவலில் இருந்து – Delving deep into the inner self of Nemi Nathan – a few excerpts

By |

மிளகு பெருநாவலில் இருந்து – Delving deep into the inner self of Nemi Nathan – a few excerpts

ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன். அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும்…




Read more »

மிளகு பெருநாவல் – from the chapter I, Rohini – excerpt from Rohini’s soliloquy

By |

மிளகு பெருநாவல் – from the chapter I, Rohini – excerpt from Rohini’s soliloquy

நான் ரோகிணி. நான் எல்லா மதப் பண்டிகைகளையும் இனிப்பு அங்காடியில் கொண்டாடுகிறேன். அங்கே வேலை பார்க்கிற யார் என்ன மதம் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அது அவர்கள் சொந்த விஷயம். தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தெரியாததால் ஏதும் குறை வரவும் வாய்ப்பில்லை. மதம் இனிப்பு அங்காடியில் வேலை பார்ப்பதில்லை. ஆனால் எல்லாக் கொண்டாட்டத்த்திலும் ஏதாவது ஒரு மதம் மகிழ்ச்சியோடு பங்கு பெறுகிறது. அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் அங்காடியின் படி இறங்கிப் போய்விடுகிறது. அடுத்த கொண்டாட்டத்துக்கு…




Read more »