Archive For The “The Wagon Magazine” Category

நடாஷா என்னிடம் சொன்னாள், “இதுதான் ஜெசிகா, மறியல்”

By |

Snippet of translation from the Malayalam novel #Lanthan_Batheriyile_Luthiniyakal by Mr.N.S.Madhavan (Expected date of completion :10th August 2917) வெய்யில் ஏறத் தொடங்கியபோது ஒன்பதாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் படித்த எங்களை விட மூத்த மாணவர்கள் ‘விமோசன சமரம் ஜிந்தாபாத்’, ‘கம்யூனிஸ்ட் சர்க்கார் முர்தாபாத்’ போன்ற முழக்கங்களோடு மல்லாந்து தெருவில் படுத்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட மணி முழங்கி அன்றைக்குப் பள்ளிக்கூட நேரம் முடிந்ததாக அறிவித்தது. எல்லா மாணவர்களும் தெருவில் முழக்கமிட்டுப் படுத்திருப்பவர்களைப் பார்த்தபடி…




Read more »

சிவப்புக் குதிரை ஏறித் தலையில் கொம்பும் வாலில் அம்பு முனையுமாக வருவது யார்?

By |

Snippet of translation from Lanthan Batheriyile Luthiniyakal (Malayalam) – The work is 60% completed as of now லாரன்ஸ் பள்ளத்து எங்களைப் பயமுறுத்தத் தொடங்கினார். நரகம் பற்றிய நடுங்க வைக்கும் வாக்குகளை ராத்திரி நேரத்தில் எடுத்துச் சொல்லும் பிரசாரகர் போல அவர் உரக்கக் குரல் கொடுத்தார் : “காது கொடுத்துக் கேளுங்கள். சிவப்புக் குதிரையின் காலடிச் சத்தம் இடி முழக்கம் போல் கேட்கவில்லையா? சாத்தானின் உலா தொடங்கி இருக்கிறது. முன்னால் கட்டி…




Read more »

மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்ரோனியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?

By |

மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்  மக்ரோனியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?

அடிக்கடி வறட்சியும் அது காரணமாக உணவுத் தட்டுப்பாடும் ஏற்படுவது கேரளத்தில் நடப்பதுதான். அப்போதெல்லாம் திருவிதாங்கூர், கொச்சி அரசர்கள் கஞ்சித்தொட்டி திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர்மக் கஞ்சி வார்த்தார்கள் என்றாலும் பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. போர்த்துகீசியர்கள் பிரசீலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் மரச்சீனிக் கிழங்கைத் கேரளத்தில் தினசரி உண்ணும் உணவாக்க்க திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாள் மகாராஜா முனைந்து பிரசாரம் செய்தபோது பஞ்சம் கொஞ்சம் தணிந்தது. மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்கள் ஏன்…




Read more »

இந்த ரேடியோவை ஆசீர்வதியும்

By |

பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய ரேடியோவைக் கொண்டு வந்த தினத்தில், மலாக்கா ஹவுஸின் மேல் கூரையில் இரண்டு மூங்கில் கழிகள் நிறுத்தப்பட்டன. அவற்றில், வலைவலையாக இருந்த பிரகாசமான செம்பு ஏரியலை பவுலோஸும் அவனுடைய…




Read more »

வீட்டுக்கு மின்சாரம் வந்தபோது

By |

மின்சார ஒயரிங் வேலை முடிந்த பிறகு எங்கள் வீட்டுக்கு வெளியே நின்ற மின்கம்பத்தில் ஏறி லைன்மேன் ப்யூஸைச் செருகினார். வீட்டுக்குள் எலக்ட்ரீஷியன்கள் மெயின் சுவிட்சை ஆன் செய்தார்கள். எல்லா விளக்குகளும் ஒளிவிட்டு எரிந்தன. திரு இதயப் படத்தின் முன், திரி போல் ஒளிர்ந்த சிவந்த ஸீரோ வாட் பல்ப் எரிய, நாங்கள் மண்டியிட்டிருந்தோம். மூன்று முறை, இரண்டு முறை.. போஞ்ஞிக்கரை மாதாகோவிலில் மணி முழங்கியது. மூன்று – இரண்டு இந்தத் தாளம் அப்பனைத் துள்ளி எழ வைத்தது….




Read more »

இத்தனை எழுத்துகள் எதற்கு வேண்டும்?

By |

திரு என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் நாவல் 50% தமிழில் மொழியாக்கமாகியுள்ளது. ஜூலையில் நிறைவுறும் என நம்புகிறேன். தமிழில் குறிப்பிடத் தகுந்த நூலாக இது இருக்கும். ’ நாவலில் இருந்து ஒரு சிறு துணுக்கு // விழித்தபோது ராகவன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். Ga-வும், Ja-வும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் இந்துஸ்தானியில் இருந்தும் சொற்களைப் பயன்படுத்த மலையாளம் கடன் வாங்கிய இரண்டு எழுத்துகள். Bha, Ru, Gha – சம்ஸ்கிருதத்தில் இருந்து மலையாளத்துக்கு சொற்களை இறக்குமதி செய்ய மட்டும்…




Read more »