Archive For The “The Wagon Magazine” Category
இன்று எழுதியதிலிருந்து, நாவலின் சிறிய பகுதி – 1975 ஜூன் 25, 26 நினைவுகள் பிரான்சிஸ் தங்கராஜ்னு பெயரைச் சொன்னதும் கொஞ்சம் நிலை குலைஞ்சு போயிட்டார்னா பார்த்துக்க போத்தி. சரி, ஏதோ விவகாரமான பயதான்னு நினைச்சிருக்கணும். ஆர்.சியா ப்ராட்டஸ்டண்டான்னு அடுத்த கேள்வி. சிவப்பழமா கழுத்திலே கொட்டை கட்டி, நெத்தியிலே பட்டை அடிச்சு உட்கார்ந்து கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிற அவருக்கு ரோமன் கத்தோலிகனா, புராட்டஸ்டண்டா அப்படி ரெண்டு பிரிவு இருக்குன்னே தெரிஞ்சிருக்க நியாயமில்லே. ஆனா நான் யாருன்னு…
இன்றைக்கு எழுதிய அத்தியாயத்திலிருந்து அவருடைய ஜில்பாத் தலைக்கும், மீசை இல்லாத அப்பாவி முகத்துக்கும் ரொம்பவே வித்யாசமான, விஷயம் தெரிந்த பேர்வழியாக இருந்தார் அவர். மேனேஜரும் சட்டென்று விஷயத்துக்கு வந்துவிட்டார். “அது ஒண்ணும் கயிட்டம் இல்லீங்க. நம்ம பசங்க கச்சிதமா செஞ்சு கொடுத்திடுவாங்க. கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும். டூயட் நாங்க பாடினா இருநூறு. வேறே யாராச்சும் பாடி வாய் அசைக்கணும்னா நூத்தம்பது. உங்க பட்ஜெட் என்ன?” போகிற போக்கில் ஒவ்வொரு வரி வசனம்…
ரூபன் ஜே Ruben Jay எழுதியது : நன்றி EraMurukan Ramasami மூன்று நாள் மாயலோக சஞ்சாரம் த்வ்யமாக இருந்தது. நடேசன்,குஞ்சம்மினி,தெரிசா அப்புறம் அந்த துளுவ பட்டன் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அந்த மகாலிங்கையன் என்கிற மகானுபாவன் சென்னை வந்த பிறகு நடக்கும் சிங்கம்பட்டி ஜமீன்,கஞ்சா,போலீஸ் தவிர மற்ற எல்லாம் நேர்த்தி,! இது மட்டும் பகவதி கன்னத்தில் விசாலம் வைத்த திருஷ்ட்டி பொட்டு சிறையில் இருக்கும் ரெட்டி@ மகாலிங்கய்யனை தெரிசா பார்க்க வரும்போது ‘ஜேம்சை’…
புது நாவல்:1975 நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை
By Era Murukan |
எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி கண்ணில் ஏகத்துக்கு மை ஈஷிக்கொண்டு வந்து கதவு திறந்த பெண்ணிடம், “உங்க அம்மாவைக் கூப்பிடு” என்றார் மேனேஜர். ”உள்ளே வாங்க, நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. “நாடகம் போடணும்” என்று மொட்டையாகச் சொன்னார் மேனேஜர். நான் அதை விரித்துச் சொல்ல ஏதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டேன். ”நாடகம் எல்லாம் நடத்திக் கொடுத்திடலாமுங்க. பாட்டெல்லாம் பாடிக் கொடுத்திடலாமுங்க….
எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து – “எடிட் பண்ணி ஏதாவது கூடுதலா இருந்தா குறைச்சுக்குங்க. கதைப் போக்கை மாற்றிடாதீங்க”. அந்த நாடக ஆசிரியர் படைப்பாளியின் கரிசனத்தோடு சொன்னார். படித்துப் பார்த்தேன். செண்டிமெண்டல் கதையில் செண்ட்ரல் கவர்மெண்ட் புகுந்திருந்தது. பிள்ளையார் கோவில் பூசாரிக்குப் பெண் குழந்தை பிறந்து, கஷ்டப்பட்டுப் படிக்க இருபதம்சத் திட்டத்தில் பேங்க் உதவி கிடைத்து, வேலை கிடைக்கிறது. லஞ்சம் வாங்குகிற மேலதிகாரியை இருபதம்சத் திட்டத்தால் உத்வேகம் பெற்றுப் பிடித்துத் தருகிறாள். கணவன் கிராமப் பொருளாதாரத்தை…
புது நாவல் : 1975 தெற்குச் சீமைக்கே சொந்தமான அக்கறையும், பிரியமுமாக, ஆபீஸும், சமூக வாழ்க்கையும், குடும்பத் தோழமையும் ஒன்று கலந்த சூழ்நிலை அது.
By Era Murukan |
எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் ஒரு சிறு பகுதி இது – ரவீந்திரன் கையில் பெரிய ரசீது புத்தகத்தை வைத்துக் கொண்டு வாங்கோ என்று வரவேற்றார். நன்கொடை வசூலா என்று விசாரித்தேன். அது எதுக்கு நன்கொடை, இது பிக்ஸட் டெபாஸிட் ரசீது புத்தகம்”. அதை எதுக்கு எடுத்து வந்தீங்க என்று புரியாமல் கேட்க, “கல்யாண அன்பளிப்பு பணமா வந்திருக்கு இல்லே. அதை பேங்குலே மாப்பிள்ளை – பொண்ணு பெயர்லே பிக்சட் டெபாசிட் போட்டுடுவாங்க. அந்தப் பணத்தை எண்ணி வாங்கி…