Archive For The “பொது” Category
அற்ப விஷயம் -17 குங்குமம் பத்திரிகை பத்தித் தொகுப்பில் இருந்து ‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை…
அற்ப விஷயம்-29 ஆண்கள் மற்றும் சம்சாரிகள் இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு என்று ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும். 1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து…
நேர்கண்டவர் எழுத்தாளர் காளிப்ரசாத் புரவி மிளகு நாவலின் அடிப்படை பற்றி… இரா.முருகன் 54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா…
என் ‘அற்ப விஷயம்’ மின்நூலிலிருந்து அற்ப விஷயம் -11 நாக்கு மூக்கு காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக்…
அற்ப விஷயம் மின்நூலில் இருந்து அற்ப விஷயம்-4 எட்டு பெட்டிகள் வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள். மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள்…
எகிப்திய எழுத்தாளர் நக்யுய்ப் மஹ்ஃஃபவுஸ் (Naguib Mahfouz) எழுதிய ‘கெய்ரோ மூன்று நாவல்’களைப் படித்து முடித்து ஆப்ரிக்க மூன்று நாவல்களை வாசிக்க எடுத்திருந்தேன் அல்லவா? நைஜீரிய எழுத்தாளர் சின்வா அச்சூபி (Chinua Achebe) எழுதிய இவற்றில் முதலாவது நூல் Things Fall Apart இரண்டு நாளில் வாசித்து முடித்தேன். மற்ற இரு ஆப்பிரிக்க நாவல்களைப் படிக்கும் முன், நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பமுக் எழுதிய ‘இஸ்தான்புல்’ நாவலை அடுத்து வாசிக்க இப்போது எடுத்திருக்கிறேன்.