Archive For The “பொது” Category

The fan and the mirrorஉக்கமும் தட்டொளியும்

By |

திருப்பாவை – 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். 20 திருவெம்பாவை -20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல்…




Read more »

At Alwarpetஆழ்வார்ப்பேட்டையில் ஐந்து நிமிடம்

By |

விஸ்வரூபம் நாவல் முதல் பிரதியோடு ஒரு மணி நேரம் முன் ஆழ்வார்பேட்டை போயிருந்தேன். நம்பர் 4, ஆழ்வார்பேட்டை கல்யாண வீடு போல கலகலப்பாக இருக்கிறது. மாடிக்கும் கீழுமாக எல்லா மொழியிலும் தொலைபேசியபடி ஓடிக் கொண்டிருக்கிறார் விஸ்வரூப நாயகன். உற்சாகமும் மன நிறைவும் குரலிலும் முகத்திலும் நிறைந்திருக்கிறது. பேசிக் கொண்டிருந்த அழைப்பை முடித்து, என் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி அட்டையை ரசிக்கிறார். ‘நீங்க அனுப்பியிருந்தீங்களே’. ஆமாம், அட்டை லே அவுட் ஆனதும் அனுப்பியிருந்தேன். புத்தகத்தின் பின் அட்டையில்…




Read more »

Nappinnai and the God who is a transgenderநப்பின்னையும் அலியாகி நின்ற இறைவனும் (நாயுடுவும் உண்டு)

By |

திருப்பாவை -18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18 திருவெம்பாவை – 18 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள்…




Read more »

shooting the messengerஎன்னைக் கோபித்து என்ன பயன்?

By |

இந்தச் சந்தம் இணையத்தில் சுழல் அஞ்சலாகச் சுற்றி வருகிறது தத்தோம் தகிதோம் ததிகிட தித்தோம் திகிதோம் வாய்விட்டுப் பாடினால் வந்த பாட்டு …எந்தமிழ்.. எம்மக்கள்.. வந்தோம் வளர்ந்தோம் வளம்பெருக நின்றோம் நிலைத்தோம் தந்தோம் எந்தம் தலைமுறையை தாய்க்குலத்தை மகவையெலாம் எந்தோள் எரியும்வரை காத்தோம் எம்தேயம் வென்றோம் எரித்தாலும் எம்மண்ணில் புதைத்தாலும் எக்களித்தோம் இன்றல்ல என்றேனும் ஒருநாள் எதிர்வருவோம் பெரும்படையாய்த் தமிழ். ***************************** தொலைக்காட்சி தமிழன் விருது (இலக்கியம்) பரிந்துரைக்கக் கோரிப் படிவம் அனுப்பியிருந்தார்கள். பிரித்ததும் தான் தெரிந்தது…




Read more »

Viswaroopam – novel releaseவிஸ்வரூபம் நாவல் வெளியீடு

By |

<!--:en-->Viswaroopam – novel release<!--:--><!--:ta-->விஸ்வரூபம் நாவல் வெளியீடு<!--:-->

விஸ்வரூபம் நாவல் புத்தகமாக சற்று நேரம் முன் கையில் கிடைத்தது. நல்ல அமைப்பு. பத்ரிக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி. பக்கங்கள் 790 விலை ரூ 400




Read more »

This happened to Ambaiஅம்பைக்கு நேர்ந்த அனுபவம்

By |

அம்பை எழுதுகிறார் – //மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரை சிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்கள் முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் –பத்து வயதிருக்கும் — இரண்டு கால்களையும் கிட்டத்தட்டப் பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை.ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ”விழுந்துவிடுவாய் பையா, பிடிவாதம் பிடிக்காதே”…




Read more »