Archive For The “பொது” Category

Thai kizhaviதாய்க் கிழவி

By |

<!--:en-->Thai kizhavi<!--:--><!--:ta-->தாய்க் கிழவி<!--:-->

பழந்தமிழ் இலக்கியத்தில் எனக்குப் புரியாதவள் ‘தாய்க் கிழவி’. பிரபந்தங்களில் கணிகை ஆடல் அழகியாக இளவயதினளாகச் சித்தரிக்கப்படுவாள். அவளுடைய தாய், கிழவியாக, க்ரூபியாக இருப்பாள். பாட்டுடைத் தலைவனுடைய மனத்தைக் கவர்ந்து கைப் பொருளை இழக்க வைக்க அவள் தான் கணிகைக்கு வழி சொல்லித் தருவாள். பொருள் எல்லாம் போனபிறகு அவனை வீட்டை விட்டு இறக்கிவிட முன்முயற்சி எடுப்பவளும் இந்தத் ‘தாய்க் கிழவி’யே. வர்ணனைகளை வைத்துப் பார்த்தால் கணிகைக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும். அவளுக்கு அம்மா ‘தாய்க் கிழவி’….




Read more »

Benegal and Balaகருப்பு – வெள்ளை : பெனகலும் பாலாவும்

By |

<!--:en-->Benegal and Bala<!--:--><!--:ta-->கருப்பு – வெள்ளை : பெனகலும் பாலாவும்<!--:-->

அன்பு நண்பர் கல்யாண்ஜி வண்ணதாசன் எழுதுகிறார் – //நீங்கள் ‘ஹிந்து’ தினசரி வாசிப்பவர் என்றால், நீங்கள் இதற்குள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ‘சினிமா ப்ளஸ்’ இணைப்பின் முதல் பக்கத்தில் உங்களைச் சிதற அடிக்கிற முகங்களுடன் ‘குத்தவைத்து’ உட்கார்ந்திருக்கிற அந்த நூறு முகங்களை. பாலாவின் ‘பரதேசி’ திரைப்பட ‘ஸ்டில்’களுள் ஒன்றான அது, தன்னிடம் நாற்பதுகளின் காலத்தில் எடுக்கப்பட்ட ஆல்பத்தில் இருந்து ஒரு இலையை உருவி நமக்கு முன் வைத்திருக்கிறது. பாலா திரைமொழியிலும் அது சார்ந்த உடல்மொழியிலும் எவ்வளவு அக்கறை…




Read more »

A dad like meஎன்னைப் போல் ஒருவன்

By |

சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு யார் சார்? என் மகள் தான் சார் எந்தக் கோவில்? ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி.. திட்டினீங்களா? எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா.. சிரிக்கிறார். அதில்…




Read more »

old newspapers pleaseபழைய பேப்பர் வாங்கலியோ

By |

1953-ம் வருடத்து தமிழ், மலையாள தினப் பத்திரிகைப் பிரதிகள் நண்பர்கள் யாரிடமாவது உண்டா? போட்டோ காப்பி எடுத்துக் கொண்டு நன்றியோடு (அடுத்த நாவலில் இரண்டாம் பக்கம்) திருப்பி அனுப்பப் படும். அட்வான்ஸ் தேங்க்ஸ்:-) ——————————————————————————————- எஸ்.ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைப் புறக்கணித்திருக்கிறார் – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை விட வட இந்தியர்களே பத்ம விருதுகளுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி. அவர் குறிப்பிடும் bias உண்மைதான். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட தேசிய அங்கீகாரத்தைப் புறம் தள்ளுவது…




Read more »

We support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு

By |

நானும் மனுஷ்யபுத்ரனோடு. நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன். இரா.முருகன் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்கு கண்டனம் சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை…




Read more »

Chennai Book Fair 2013 – treating myself to an encoreசோறு போடும் கல்கி – குழம்பு விளம்பும் சுஜாதா

By |

பிரசவ வைராக்கியம் போல் பொய்யாக சென்னைப் புத்தகக் கண்காட்சி 2013 இன்னொரு முறை (இதோடு சரி) போனேன். 1) தமிழக அரசால் பொது உடமையாக்கப்பட்ட படைப்புகளை தி.ஜ.ர முதல் இரண்டு டஜன் படைப்பாளர்களாவது படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மறுபிரசுரம் செய்வதில் இங்கே கடை போட்டிருக்கும் நானூற்றுச் சில்லரை பதிப்பகங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசுத் துறையிலேயே இந்தப் புத்தகங்களைக் குறைந்தது பத்தாயிரம் காப்பி அடித்து நூலகங்களில் வைத்து மீந்ததை வெளியே விற்கலாமே? 2) பொதுவுடமையாக்கப்பட்ட கல்கி தான்…




Read more »