Archive For The “பொது” Category

Tesla .. tax lawடெஸ்லாவும் டேக்ஸ் லா-வும்

By |

இதென்ன புது கோலியா இருக்கு. எம் எல் ஏ, எம் பி சம்பளத்துக்கெல்லாம் வருமான வரி கிடையாதாமே. அதுலே சில எம் எல் ஏக்களுக்கு Pan Card கூட இல்லையாம். Pan Card கட்டாயம்னு சொன்னதால், ஒரு அடையாள அட்டை மாதிரி அதை உபயோகிக்கிற எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட், ‘நீர் ஏன் வரி கட்டவில்லை, tax return அனுப்பி வைக்கவில்லை என்பதை நாலு வரியில் மிகாமல் சொல்லவும்’ என்று மிரட்டல் கடிதம்…




Read more »

How will you remember me after my death?நான் இறந்த பிறகு என்னை எப்படி நினைவு வைத்திருப்பீர்கள்?

By |

நல்ல நண்பரும் எழுத்தாளருமான திரு.மலர்மன்னன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி. இன்று ஹிந்து பத்திரிகையில் அவர் குடும்பத்தினர் வெளியிட்ட ஆபிச்சுவரி விளம்பரத்தில் அவரை மிகவும் இளம் வயதில் எடுத்த புகைப்படத்தை வைத்திருந்தார்கள். அது யாருடைய இறப்புச் செய்தியையோ வாசிப்பது போல அனுபவத்தைக் கொடுத்தது. நமக்குத் தெரிந்த பெரியார் தாடி வைத்த மலர்மன்னனை அவருடைய ரசிகர் ஒருவர் அதே பத்திரிகையில் அதே பக்கத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் பார்த்தேன். ஏதோ ஒரு ஆசுவாசம். துக்கமும். மலர்மன்னன் குடும்பத்தினரிடம் அவருடைய அண்மைக்காலப் புகைப்படம்…




Read more »

Screen writingகதை – வசனம் மற்றும் பலர்?

By |

சுஜாதா தனது ரிடையெர்ட்மெண்ட் காலத்தில்தான் சினிமாவில் மிக அதிகமாக வசனம் எழுதினார். அந்தக் காலத்தில் அவர் இதனை ரிலாக்ஸ்டாகவும் அனுபவித்தும் செய்திருக்கக் கூடும். அப்பொழுது பணமும் அவருக்கு அத்தனை பிரதானமானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஜெமோவுக்கும், எஸ்ராவுக்கும் இது வெற்றிகளை எதிர்பார்க்கும் வயதாகவும், பணத்திற்கான தேவைகள் அடங்கிய பருவமாகவும் இருக்கிறது. இவற்றிற்கான பதட்டங்களால் தங்களையும் அறியாமல் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. http://www.nisaptham.com/2013/02/blog-post_10.html (Vaa.Manikandan wrote so)   My observations Cinema writing…




Read more »

Eduard Manet’s Luncheon on the grassயாருக்குத் தக்காளி ரசமோ, எனக்கு இம்ப்ரஷனிஸம்

By |

<!--:en-->Eduard Manet’s Luncheon on the grass<!--:--><!--:ta-->யாருக்குத் தக்காளி ரசமோ, எனக்கு இம்ப்ரஷனிஸம்<!--:-->

எடுவர்ட் மனே ஓவியம் பற்றி நான் யார்க்‌ஷையரில் ஒரு குளிர்கால ராத்திரியில் (ஆண்டு 2003) எழுதியது. வேலையும், உழைப்பும், குளிரும், தனிமையும், வாசிப்பும், கலை அனுபவமுமாகக் கழிந்த அந்த அருமையான காலம் திரும்பாது.. எட்வர்ட் மனே-யின் ‘புல்தரையில் ஒரு மதிய விருந்து’ ஓவியம் பற்றி (இம்ப்ரஷனிச முன்னோடி) —————————————————————– அமைதியான ஒரு நீர்நிலை. ஆறோ, ஓடையோ தெரியவில்லை. கரையில் பச்சைப் பசேல் என்று மெத்தையாகவிரிந்த பசும்புல். நீரில் குளித்துக் கரையேறிக் கொண்டிருக்கும் ஒரு பெண். இதெல்லாம் பின்புலத்தில்….




Read more »

fiction or non-fiction?கட்டுரையின் ஷெல்ப் லைப் எவ்வளவு?

By |

<!--:en-->fiction or non-fiction?<!--:--><!--:ta-->கட்டுரையின் ஷெல்ப் லைப் எவ்வளவு?<!--:-->

இணையத்தில் எதையோ தேடப்போய் நான் ழாக் லூயி டேவிட் (நியோ கிளாசிகல் ஓவியர்) பற்றி எப்போதோ எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. ’ரெண்டாம் ராயர் காப்பி கிளப்’ புத்தகம் வெளிவந்தால் பலபட்டடையாக இன்னொரு நூறு இணையக் கட்டுரைகள் தேறும். அது தவிர கல்கி, குங்குமம், வார்த்தை, யுகமாயினி, சுட்டி, அமுதசுரபி, தினமணி கதிர் என்று பத்திரிகை பத்தியாக எழுதிய கட்டுரைகள் இன்னொரு நூறு. விகடனில் ‘அச்வின்’ ஆக எழுதிய ‘உலகே உலகே உடனே வா’ இணையத் தளங்களை…




Read more »

Janakan to Dharumiஜனகனில் இருந்து தருமிக்கு

By |

சீதைக்கு ஜனகன் வளர்த்த தந்தை. ஊர்மிளாவுக்கு ஜனகன் பெற்ற தந்தை. சீதைக்கு ராமன் கணவன். ஊர்மிளாவுக்கு இலக்குவன் கணவன். ஜனகனுக்கு ராமனும் இலக்குவனும் மாப்பிள்ளைகள். ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள, தசரதன் கட்டளைப்படி ராமனும், கூடவே இலக்குவனும் ஏழிரண்டாண்டு கானகம் போக விதித்தபோது ஜனகன் என்ன செய்து கொண்டிருந்தான்? தசரதன் அயோத்திப் பேரரசன் என்றால் ஜனகன் மிதிலையரசன். சம்பந்தி, நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லே.. என் ரெண்டு மாப்பிள்ளைகளுக்கும் நீங்க செஞ்சது பச்சைத் துரோகம்னு…




Read more »