Archive For The “பொது” Category
என் அன்புத் தங்கை ஓவியர் – கவிஞர் ஜெயா (கோவை) விஸ்வரூபம் நாவல் பற்றி எழுதி அனுப்பியிருக்கிறாள். வீடு, பள்ளி (ஆசிரியை), என்று ஆயிரத்தெட்டு பணிகளுக்கு நடுவில் என் நாவலையும் படித்துக் கவித்துவத்தோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். கண்கள் பனிக்கின்றன. விழாவில் இதைப் படிக்கலாம் என்று இருக்கிறேன். viswaroopam (1) விஸ்வரூபம் —————— அருமை அண்ணாவிற்கு சின்னதாய் ஒரு பகிர்தல் விஸ்வரூபம் பற்றி புத்தக வெளியீடு நடக்கும் முன்பே எனக்கு கிடைக்கும்படி செய்ததற்கு முதலில் நன்றிகள் சொல்லும்…
திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி நச்சரித்து எல்லாத் தொல்லையும் நான் கொடுத்தாலும்…
1919-ல் அமிர்தசரஸ் நகரில் பல இந்திய உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேய ஏகாத்திபத்தியம் ஜெனரல் டயர் மூலம் பலி கொண்டதற்கு இன்றைய பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன் மன்னிப்புக் கேட்க வேண்டும். 1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட காலம். தில்லியின் கடைசி முகமதிய சுல்தான் கவி பஹதூர் ஷா ‘ஸஃபர்’ அரண்மனையான தில்லி செங்கோட்டையில் அவருடைய பாதுகாப்பைக் கோரி ஓடி வந்து தங்கி இருந்தார்கள் ஆங்கிலேயப் பெண்களும், குழந்தைகளும். கம்பேனியார் அதிகாரி துரைமார்களின் மனைவி – மக்கள்…
தி ஹிந்து பத்திரிகையின் இணையத் தளத்தில் சற்று நேரம் முன்னால் புகுந்தபோது இந்தச் செய்தி கண்ணில் பட்டது. பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருக்கிறேன். ஒரு 12 வயதுச் சிறுவனை.. அவன் குழந்தைத்தனமான முகம் மறக்க முடியாதபடி மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறது. முதல் இரண்டு புகைப்படத்தில் பங்கரில் உட்கார்ந்திருக்கிறான். சட்டையைக் கழற்றச் சொல்லிக் கட்டளை இட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு கைத்தறித் துண்டைத் தோளில் போட்டபடி ஒரு 12 வயதுப் பையன் உட்கார்ந்திருப்பது போல் இந்த 12 வயதுப்…
இ.பா சார் அபார்ட்மெண்டில் நுழைந்ததும் வரவேற்பவை – மிக நேர்த்தியாக, தூய்மையாக, வேண்டிய அளவு வெளிச்சத்தோடு ஒரு வரவேற்பரை, மென்மையான பேச்சும் பூவாகச் சிரிப்புமாக அவர் அளவளாவுவது, குறுகிய நேரம் பேசினாலும் இலக்கியம் தொடர்பாக ஏதாவது புதிய அறிதலும், புரிதலும். அப்புறம் வரவேற்பு அறை சிறு மேசையில் புத்தகங்கள். நேற்றுக் கண்ணில் பட்டவை சீனி.விசுவநாதனின் பாரதி தொகுப்பு (என்னிடம் அது இல்லை.. வரிசையில் நான்காவதாகவோ ஐந்தாவதாகவோ இருக்க வேண்டும்), ட்விட்டரேச்சர் – பெங்குவின் வெளியீடு ஆங்கிலப் புத்தகம்….
அன்புள்ள டாக்டர் உங்கள் உதவி உடனடியாகத் தேவைப் படுகிறது. இரண்டு நாள் முன்பு வரை நன்றாக ஆரோக்கியமாக பேசி, சிரித்து, மூச்சு விட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் நேற்று மாலையில் இருந்து ‘குப்பை குப்பை’ என்று ஜன்னி வந்த மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன ஏது என்று பார்க்கப் போனவர்களையும் ‘உங்க வம்சமே குப்பை’ என்று வைது தீர்க்கிறார். முந்தாநாள் ஏதோ சினிமா பார்க்கப் போய் தவறுதலாக அடுத்த கட்டடத்தில் நுழைந்து…