Archive For The “பொது” Category
நடேசன் பூங்காவில் அதிகாலையில் நடக்கும் போது அவை நிறைந்து யோகாசன மேடை. யோகாசனப் பயிற்சி முடித்து, யோகி ராமதேவரின் ‘யோகாசன பேக்கேஜ்’விற்பனை. ‘இது ஃபைவ் இன் ஒன் மெடிசினல் பேக்கேஜ். இந்த பேக்கேஜ்லே சேர்ந்து ட்ரெயினிங் எடுத்துக்கிட்டா சக்கரை வியாதி, மத்த நோய்நொடி அண்டாது… நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும்.. ராத்திரி படுத்தா நல்ல உறக்கம் வரும்..அப்புறம…எக்சர்சைஸ் பண்ணினா நல்ல பசி எடுக்கும் இல்லையா. நல்லா பசி எடுத்தா அதிகமா சாப்பிடுவோம். சாப்பிட்டா இன்னும் சதை போடும்….
எழுத்துக்கு எடிட்டிங் தேவைப்படுவது பற்றி எழுதியதைத் தொடர்ந்து… பி.ஏ.கே அண்ணா எழுதியிருந்தார் – தன நாவலைத் தானே எடிட் செய்வது நல்லதுதான். ஆனால் அது மயக்க மருந்து கொடுக்காமல் தன் பல்லைத் தானே பிடுங்குவது போல அவஸ்தையானது என்று. ஒரு விதத்தில் பிரசவ அவஸ்தை கூடத்தான். ஆனாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டாம் நபர் எடிட்டர் கதையோட்டம், சம்பவ விவரிப்பில் குளறுபடி, பெயர்த் தவறுகள், காலம்-இடம் சார்ந்த பிழைகள், inconsistency, மரபுக்குப் பொருந்தாத, விபரீதமான அர்த்தம் கொள்ள…
எழுத்துக்கு முதல் வாசகர் எழுதுகிறவர் தான். நாவல் எழுதும்போது முக்கியமாக அதை எடிட் செய்யும் போது இந்த வாசிப்பு திரும்பத் திரும்ப நிகழ வேண்டிய கட்டாயம் உண்டு. எழுதியதை எல்லாம் அப்படியே பதிப்பாளரிடம் கொண்டு போய்க் கூடையைக் கவிழ்த்துவிட்டு அவர் நல்ல முறையில் புத்தகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது முழுச் சோம்பேறித்தனமும் அலட்சியமுமான மனோபாவமும் ஆகும். ’புத்ர’ நாவலுக்கு நான் எத்தனை ட்ராப்ட் போட்டேன் தெரியுமோ? எங்க வீட்டுக்கு வந்து பாரு.. மேலே ஒரு…
தோழர் நாயனார் First Year Remembrance (Onnam Charama Vaarshikam) – ————————————————————————- (written – May 2004 on the eve of Comrade Nayanar’s demise) தோழர் நாயனார் காலமானார். ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள். அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி ‘ஓன்’ (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார் எத்தனை சொல்லியும் கவலையே படாமல் தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டைக் கட்சிக் கூட்டத்தில் குறும்பாக ‘திருமேனி’…
இன்னும் எத்தனை காலம் தான் புகைப்படத்தை தூரிகையில் முழுக்காட்டி வரும் ‘ஓவியம்’ தான் உயர்ந்த ஓவியப் படைப்பு என்று இங்கே சொல்வோமோ தெரியவில்லை. அஜந்தா, எல்லோராவில் தொடங்கி, தஞ்சைப் பெரிய கோவில் ஓவியம், நாயக்கர் கால ஓவியம், மொகலாய ஓவியம், மதுபனி ஓவியம், கம்பெனி ஓவியம், மரபு, நியோ கிளாசிசிசம், இம்ப்ரஷனிஸம், மாடர்னிஸ ஓவியம் என்று நல்ல ஓவியத்தை (இதில் மாலி, கோபுலு, மணியம் இப்படி பத்திரிகை ஓவியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) அறிமுகப்படுத்த ஓவியர்கள் கூட்டு முயற்சி…
விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா – ஒளிக் காட்சித் தொகுப்பு Viswaroopam – Novel release function – Video நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி Thanks (Please get this video from www.kizhakku.nhm.in)