Archive For The “பொது” Category
வெங்கட நாராயணா வீதியில் வெல்லமும் கொப்பரையும் குழைத்துச் சமைத்த சுற்றுச் சூழல் நட்பு கணபதி. பக்கத்தில் சிலையாக பளபளவென்று புரோகிதர். ப்த்துநாள் பக்தர்களுக்கு அருள விநாயகர் காத்திருப்பார். சூழலை மாசுபடுத்தாமல் வழிபட்டு ஆசிபெற பக்தர்கள் வந்து போவார். பத்து நாள் சென்று மெரினாவில் கரைத்தால், பிள்ளையாரைத் தின்ன நீந்தும் கொழுக்கட்டையாய்க் கடல் மீன் காத்திருக்கும். தெர்மோகோல் புரோகிதர் இல்லையென்றால் அவரையும். கடல்மீனும் கணபதியே. —————————————————- கல்கி பத்திரிகையின் ‘ சென்ற ஆண்டு வெளியான சிறந்த அச்சு விளம்பரம்’…
’சாவடி’ நாடகம் இப்படித்தான் துவங்குகிறது. விரைவில் மேடையேறும். சாவடி ———— (மேடை நாடகம் – இரா.முருகன்) காட்சி 1 காலம் காலை களம் வெளியே Open – The stage darkens. The screen comes to life and with BBC style narrative -World War (First) time -Madras 1914- various locations move in a quick succession on the screen. The ticker at the bottom of…
கோவையில் முதுபெரும் தமிழறிஞர் திரு கோபாலய்யர் அவர்களைச் சந்தித்தேன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்று மும்மொழியிலும் நல்ல புலமை. தேர்ந்தெடுத்த வாசிப்பு. அவற்றை எல்லாம் நல்லாசிரியராக ஆயிரக் கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம். எல்லாவற்றோடும் கூட, கேள்வி ஞானத்தால் வளர்த்துக் கொண்ட இசையறிவு. இதுவரை 270-க்கு மேற்பட்ட தமிழ், வடமொழி கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றை திரு.நெய்வேலி சந்தானகோபாலன் இரண்டு ஆண்டுகள் முன் சுவாமி தயானந்த சரசுவதி அருளாசியோடு கோவையில் இசைக் கச்சேரி நிகழ்த்தி கோபாலய்யருக்குச் சிறப்புச்…
படிக்கச் சொல்லி பலமான சிபாரிசோடு எனக்கு நண்பர்கள் அனுப்பும் சுட்டிகளை அவ்வப்போது திறந்து என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்ப்பேன். இன்று ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. அதிலிருந்து – //அந்தமான் தீவில் தமிழ் வளர்ப்பதில் டாக்டர். XYZ அண்ணாச்சிக்கு மிகுந்த ஆர்வம். வருடம் 9999 மார்ச் மாதம் 25 அன்று தமிழ்க் கவிஞர்களைக் கப்பலில் அழைத்துச் சென்று, அந்தக் கப்பலிலேயே ஒரு கவியரங்கம் நடத்திச் சாதனை படைத்தவர் டாக்டர் XYZ அவர்கள். // பல தமிழ்க் கவிஞர்களைக்…
நேற்றிலிருந்து திரும்பவும் அழையா விருந்தாளியாக மைக்ரேன். நோவோடு வாழப் பழகி விட்டது. காலையில் வாக்கிங் போனபோது சிநேகிதர்கள் கவலையோடு விசாரித்தார்கள்- கலகலன்னு பேசுவீங்களே.. என்னாச்சு? தலைவலி ஒரு பக்கமாக தலையோட்டைக் கெல்லி எடுக்க பிரயத்தனம் செய்ய, நான் செய்வது ‘பேசாதிருந்தும் பழகு’ . ஏற்றுக் கொண்ட ஒரு கடமைக்காக சுஜாதா சார் எழுதிய சில சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எத்தனையாவது தடவையாகவோ.. இது வேலை நிமித்தம் என்று சாக்கு. ’ரேணுகா’ கதை முதலில் படிக்க எடுத்தது….
Friday, 16th of August would go down the history as a day of market mayhem. The rupee was left battered and bruised by the wayside on the global currency-bahn , gasping for breath. We do have the resilience and would bounce back, there is no doubt. But this tragedy striking us barely a day after…